குற்றால அருவியில் ஒன்றாக குளித்தோம்- விஜயகாந்தின் பள்ளி தோழரின் மலரும் நினைவுகள்

விஜயகாந்திடம் அப்போது சினிமா ஆர்வமோ, அரசியல் ஆர்வமோ இருந்தது இல்லை.சினிமாவில் நடிக்க தொடங்கிய பின்னர் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றுள்ளார்.
குற்றால அருவியில் ஒன்றாக குளித்தோம்- விஜயகாந்தின் பள்ளி தோழரின் மலரும் நினைவுகள்
Published on

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளியிலும் விஜயகாந்த் படித்துள்ளார். அங்குள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் 1966-ம் ஆண்டு 9 மற்றும் 10-ம் வகுப்பை படித்த விஜயகாந்த்தின் பள்ளி தோழர் பால சுப்பிரமணியம் அவருடனான நட்பை மலரும் நினைவுகளாக பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "விஜயகாந்த்துடன் ஒரே பெஞ்சில் தான் அமர்ந்து படித்துள்ளேன். ராமலிங்கம், ஜெயச்சந்திரன் ஆகிய மாணவர்களும் எங்களோடு அமர்ந்து படித்துள்ளனர். விஜயகாந்திடம் அப் போது சினிமா ஆர்வமோ, அரசியல் ஆர்வமோ இருந்தது இல்லை. அனைத்து நண்பர்களிடமும் சகஜமாக பேசி பழகும் குணம் கொண்டவராக திகழ்ந்த விஜயகாந்த்துடன் குற்றால அருவியில் போய் குளித்துள்ளோம். பாபநாசம், தாமிரபரணி ஆற்றிலும் குளியல் போட்டு உள்ளோம். எனது வீட்டில் இருந்து நான் எடுத்துச் சென்ற உணவுகளையெல்லாம் ருசித்து சாப்பிட்டுள்ளார். சினிமாவில் நடிக்க தொடங்கிய பின்னர் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றுள்ளார்.

பொள்ளாச்சியில் மின் வாரியத்தில் நான் பணியாற்றிய போதும் படப் பிடிப்பில் பங்கேற்றுள்ளேன். அவரது மரணம் மிகுந்த வேதனையை தருகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com