என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
    X

    தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.
    • அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி ,பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிப்பதற்கு போலீ சார் தடைவித்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×