என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » south kashmir
நீங்கள் தேடியது "south Kashmir"
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிலர் பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறித்து சென்றனர்.
ஜம்மு:
காஷ்மீரில் ரோந்து பணிகளில் ஈடுபடும் ராணுவவீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் பாதுகாவலர்களிடம் இருந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
இந்நிலையில், குல்காம் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவரும், வக்கீலுமான கவ்ஹார் என்பவர் அங்கு உள்ள கிராமத்தில் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றார். அவருடைய பாதுகாப்புக்காக 2 பாதுகாவலர்கள் சென்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசில் கவ்ஹார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
காஷ்மீரில் ரோந்து பணிகளில் ஈடுபடும் ராணுவவீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் பாதுகாவலர்களிடம் இருந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
இந்நிலையில், குல்காம் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவரும், வக்கீலுமான கவ்ஹார் என்பவர் அங்கு உள்ள கிராமத்தில் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றார். அவருடைய பாதுகாப்புக்காக 2 பாதுகாவலர்கள் சென்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசில் கவ்ஹார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தெற்கு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். #KashmirAttack #KashmirJawanKilled
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் புல்வாமா மாவட்டம் தாக்கியா வாங்கம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கிடைத்து, மத்திய ரிசர்வ் படை போலீசார் இன்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை நோக்கி பாதுகாப்பு படையினர் முன்னேறியபோது, தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டே முன்னேறினர். இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் மன்ஜித் குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்தி பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #KashmirAttack #KashmirJawanKilled
ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் புல்வாமா மாவட்டம் தாக்கியா வாங்கம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கிடைத்து, மத்திய ரிசர்வ் படை போலீசார் இன்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை நோக்கி பாதுகாப்பு படையினர் முன்னேறியபோது, தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டே முன்னேறினர். இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் மன்ஜித் குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்தி பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #KashmirAttack #KashmirJawanKilled
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X