search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pradosha"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொண்டி அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
    • பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தொண்டி

    தொண்டி அருகே நம்புதாளையில் மிகவும் பழமையான சிவாலயமான அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பழம், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், அரிசி மாவு, பழங்களால் சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா நடைபெற்றது. வாசு, சுவாமிநாதன் ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    அதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்டிடகலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக தஞ்சை பெரிய கோவில் உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் வாய்ந்தது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பெரிய கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும்.

    இங்குள்ள மகாநந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.

    அதன்படி நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • நந்திபகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி கிராமத்தில் உள்ள ஞானாம்பிகை உடனுறைஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷச விழாவை முன்னிட்டு மற்றும் நந்திபகவானுக்கு பால், பன்னீர்,சந்தனம் ,பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட பல்வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு சோழவந்தான் பிரளயநாதர் கோவிலில் நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்புஅர்ச்சனை, பூஜைகள், தீபாரதனை நடந்தது பிரதோஷ கமிட்டினர் பிரசாதம் வழங்கினர். இதேபோல் மன்னாடிமங்கலம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவலவயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆவணி மாதம் சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பிரதோஷ வழி பாட்டை காண ஏராளமான வந்திருந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந் துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இங்கு பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆவணி மாதம் சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை களை தொடர்ந்து மகா தீபாராதனையும், பின்னர் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே சிவனின் நடனக்காட்சி காணும்ஐதீக நிகழ்வும் நடந்தது. மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பிரகார வலம் வரும் நிகழ்ச்சியும், அருள்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது,

    பிரதோஷ விரதம் சிவபெருமானுக்குரிய மிக உயர்வான விரதம் என்பதால் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெரு மானையும், நந்தி தேவரையும் அருகம்புல் மற்றும் வில்வம் சாத்தி வழிபட்டால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கி சிவபதம் கிடைக்கும் என்பதால் பிரதோஷ வழி பாட்டை காண ஏராளமான வந்திருந்தனர். வேண்டுதல் நிறைவே றவும், நேர்த்திக்கடனுக் காவும், பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், பெண்கள் பள்ளி செயலாளர் மாதவன், நகைக்கடை அதிபர் சரவணன், பிரதோஷ உற்சவ தாரர் வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆவணி மாத முதல் பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது
    • பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர்

    பெரம்பலூர்,

    ஆவணி மாத முதல் பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் நல்லது நடக்கும் என்ற ஐதீகத்தால், சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு நேற்று மாலை பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பிரதோஷத்தையொட்டி பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
    • வருகிற 25-ந்தேதி கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பிள்ளை யார்பட்டியில் புகழ் பெற்ற ஹரித்திரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமிக்கும் நந்தீஸ்வருக்கும் நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினசரி நடக்கும் மண்டாலாபிஷேக பூஜைகளை முன்னிட்டு மங்கள விநாயகர் என்கிற ஹரித்திரா விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து நடந்த பக்தி இசை கச்சேரியில் ஏராளமான நாதஸ்வரம் , தவில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு வாசித்தார்கள். முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

    வருகின்ற 25-ம்தேதி ஹரித்திரா விநாயகர் கோவிலில் வெகுவிமரிசையாக மண்டலாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு பால், பழம், பன்னீர், சந்தனம், தயிர், இளநீர், அரிசிமாவு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி வீதி உலா நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேக பால், நெய்வேத்திய சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதே போல தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆலயம், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் ஆலயம், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் ஆலயம், ஓரியூர் சேயுமானவர் கெம், திருவாடானை ஆதி ரத்தினேஸ்வரர் கோவில் ஆகிய சிவாலயங்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தஞ்சாவூர் வடக்கு வீதியில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • பிரதோஷத்தை முன்னிட்டு சிவன், அம்மன், நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் ரத்னகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவனும் அம்மனுக்கும் தனி தனி நந்தி உள்ளது. இரண்டிற்கும் பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    இந்த நிலையில் பிரதோஷம் தினத்தை முன்னிட்டு சிவனுக்கும் அம்மனுக்கும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின், கோவில் வளாகத்தில் வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோழவந்தான் பகுதியில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற பிரளயநாத (சிவன்) கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11 அபிஷேகங்கள் நடைபெற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்து பூஜைகள் நடந்தன. இதேபோல் மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இந்தப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிதோஷ விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print