search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
    X

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், நந்தி பெருமான், பரமத்திவேலூர் எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரநாதர், நந்தி பெருமான் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.

    பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு, சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு, சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார்.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூர் எல்லையம்மன் ஆலயத்தில் வைகாசி மாத குரு வார கிருத்திகை நட்சத்திரத்துடன் கூடிய பிரதோஷத்தினை முன்னிட்டு ஏகாம்பரநாத ருக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது.

    இதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோவிலில் உள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கு தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபி ஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×