என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இதய நோய் அறிகுறிகள்"

    • நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது.
    • குறட்டை விடுபவர்களுக்கு இரவில் ஆக்சிஜன் சப்ளை குறைவாக இருக்கும்.

    குறட்டை இதயக்கோளாறின் அறிகுறியா? என்ற கேள்விக்கு மருத்துவர் தரும் விளக்கம் வருமாறு:-

    இந்தியாவில் மட்டும் 5 கோடி பேருக்கு மேல் குறட்டை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூங்கும் போது மூச்சு தடைபடுதலை ஸ்லீப் ஆப்னியா என்றும் கூறுகிறார்கள். இந்த வார்த்தை இப்போது பரவலாக உச்சரிக்கப்படுகிறது.

    நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டால் திசுக்கள் அதிர்வுறும். அப்போது குறட்டை ஏற்படுகிறது. தூங்கும்போது நாக்கு, தொண்டை பகுதிகளில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன. அந்த நேரத்தில் காற்று செல்லும்போது சுவாசப்பாதை சுருங்கியிருப்பதால் திசுக்கள் அதிர்வுறுகின்றன. மேலும் மல்லாந்து படுக்கும் போது நாக்கு சிறிது உள்வாங்கி தொண்டைக்குள் இறங்கி விடும். இதனாலும் சுவாசப்பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை ஏற்படுகிறது. குறட்டை என்பது அரைகுறையான தூக்கம் ஆகும்.

    குறட்டை விடுபவர்களுக்கு இரவில் ஆக்சிஜன் சப்ளை குறைவாக இருக்கும். சிலர் இரவில் குறட்டைவிட்டபடி தூங்குவார்கள், அவர்களுக்கு அரை நிமிடம் மூச்சே நின்று விடும். பின்னர் அரக்கபரக்க எழுந்து உட்காருவார்கள். ஒரு நாளைக்கு மனிதனுக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியம். அதிலும் 4 மணி நேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும். ஆனால் நமக்கே தெரியாமல் ஒவ்வொரு மணி நேரமும் தூக்கத்தை கெடுக்க கூடியது இந்த குறட்டை.

    இரவில் தூக்கம் கெட்டுப்போனால் காலையில் எழுந்ததும் கடுமையாக தலை வலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும் போது இதயத்துடிப்பில் பிரச்சினை ஏற்படும். தூக்கம் சரியாக இல்லை என்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோர்த்துக் கொள்ளும்.

    குறட்டை வந்தால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.

    மூளை பாதிப்பு ஏற்பட்டால் பக்கவாதம் வரும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் 2 முழங்கால்களிலும் பலமான வலி ஏற்படும். திருமணம் ஆன பின்னர் குழந்தை பிறக்க கூட தாமதம் ஆகும். குறட்டை விடுவதை சரி செய்ய வழி உண்டு. மேலும் வரும் குறட்டையால் வேறு எதாவது பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதா? என்பதை கண்டுபிடிக்கவும் வசதிகள் உள்ளன. மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சினை, தொண்டை பிரச்சினைகள், தைராய்டு, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற பிரச்சினைகளால் குறட்டை வருகிறது என்று தெரிந்தால் அதற்கு சிகிச்சை பெறலாம். அதுபோன்ற பிரச்சினை இல்லாமல் குறட்டை வருகிறது என்றால் ஸ்லீப் ஸ்டடி என்றவொரு சிகிச்சை மேற்கொண்டு பார்க்க வேண்டும். ஸ்லீப் ஸ்டடி சிகிச்சை அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இருக்கும்.

    அந்த சிகிச்சைக்கு வருபவர்கள் இரவு 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும். அங்கு குறட்டை வருபவரின் இதயம், மூளை என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒயர்கள் பொருத்தி அதனை மருத்துவ எந்திரத்துடன் இணைப்போம். பின்னர் அவருக்கு தூக்கம் வந்ததும் தூங்கி விடலாம். அவருக்கு துணையாக உறவினர் ஒருவர் கூட இருக்கலாம். அடுத்த அறையில் இருந்து டெக்னீசியன் நோயாளியை கண்காணித்தபடி இருப்பார். அவர் தூங்கி எழுந்ததும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை எந்திரத்தில் பதிவான பதிவு விவரங்கள் கிடைக்கும்.

    இரவில் தூங்கும் போது ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு குறைய வேண்டும். பகலில் ரத்த அழுத்தம் 200 இருந்தால் இரவில் 160-க்கு வரவேண்டும். அதனால் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்துள்ளதா? எவ்வளவு நேரம் மூச்சை நிறுத்துகிறீர்கள்? உங்களுக்கு தெரியாமலேயே குறட்டை எப்படி மூச்சை நிறுத்தி உங்கள் தூக்கத்தை கெடுக்கிறது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவரும். அந்த விவரங்களை கொண்டு எதனால் குறட்டை வருகிறது, மாரடைப்பு வருமா? என்பதை கண்டுபிடித்து விடலாம். அதன் மூலம் மேல் சிகிச்சை பெறலாம்.

    குறட்டை நீங்க நோயாளிகளுக்கு முகக்கவசம் போன்ற சீ பேப் எந்திரம் (மூச்சு அழுத்தம் கொடுக்கும் கருவி) ஒன்று பொருத்தப்பட்டு ஆக்சிஜன் செலுத்தப்படும். பம்ப் மூலம் காற்று சீராக சென்று கொண்டு இருக்கும். இதனால் சுவாசிக்கும் காற்று தடைபடாது. இந்த சிகிச்சை மூலம் 3 மாதத்தில் குறட்டை நீங்கும். எனவே தினமும் குறட்டை விடுவது, குறட்டை சத்தத்தில் மாறுபாடு இருப்பது தெரிந்தால் நுரையீரல் சிகிச்சை சிறப்பு டாக்டரை அணுகுவது நல்லது. ஒழுங்கற்ற சுவாசத்துடன் குறட்டை விடுவது இதயநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

    • எல்லா உடல் உறுப்புகளுக்கும் இதயத்தின் ஆரோக்கியம் முக்கியமானது.
    • இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது உடல் நலனுக்கு அவசியமானது.

    ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் இதயத்தின் ஆரோக்கியம் முக்கியமானது. ஏனென்றால் ரத்தத்தை `பம்ப்' செய்து உடல் முழுவதும் கடத்துவது, உடலின் அனைத்து உறுப்புகள் மற்றும் செல்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை வழங்குவது போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்கிறது. இதயம் சரியாக செயல்படாதபோது இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் அவசியமானது. இதயம் நலமுடன் இருந்தால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஊட்டச்சத்துமிக்க உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் இதய ஆரோக்கியத்தை சுமூகமாக பராமரிக்கலாம். மன அழுத்தத்தையும் குறைக்கலாம். பெண்களை காட்டிலும் ஆண்கள்தான் இதய நோய் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். ஆண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் 9 அறிகுறிகள் உங்கள் கவனத்திற்கு...

    மார்பு வலி

    இதய நோய்க்கான பொதுவான அறி குறிகளில் இதுவும் ஒன்றாகும். மார்பில் அழுத்தம், இறுக்கம் அல்லது மார்பு முழுவதும் சில நிமிடங்கள் வலி நீடிக்கும். அடிக்கடி இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.

    மூச்சு திணறல்

    படிக்கட்டுகளில் ஏறுவது, நடப்பது, மளிகைப் பொருட்களை தூக்கி செல்வது போன்ற அன்றாட நடவடிக்கைகளின் போது மூச்சுத்திணறலை உணரலாம்.

    ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

    ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது பட படப்பு இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதயம் படபடப்பது அல்லது துடிப்பதை தவிர்ப்பது போல் உணரலாம்.

    சோர்வு

    போதுமான ஓய்வு எடுத்தாலும் கூட எப்போதும் சோர்வாக இருப்பதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    வீக்கம்

    இதய நோய் அறி குறியை வெளிப்படுத்தும் மற்றொரு காரணி வீக்கம். கால்கள், கணுக்கால் அல்லது பாதங்களில் வீக்கம் ஏற்படக்கூடும்.

    அசவுகரியம்

    உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு சார்ந்த கடினமான வேலைகளில் ஈடுபடும்போது மார்பில் அசவுகரியம் உண்டாவது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    அஜீரணம், நெஞ்செரிச்சல்

    குமட்டல், அஜீரணம் அல்லது நெஞ் செரிச்சல் உள்ளிட்ட வயிறு சார்ந்த பிரச்சினைகள் கூட இதய நோய்க்கான அறிகுறிகளாக அமையக்கூடும்.

    தலைச்சுற்றல்

    தூக்கத்தில் இருந்து எழும்போதோ, அமர்ந் திருந்த இடத்தில் இருந்து எழுந்து நிற்கும்போதோ, வேலை பார்க்கும்போதோ தலைச்சுற்றல் உணர்வை அனுபவிப்பதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    முதுகு வலி

    கழுத்து, தாடை அல்லது முதுகில் வலி ஏற்படுவதும் இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக மார்பு வலி அல்லது மூச்சுத்திணறல் போன்ற பிற அறிகுறிகளும் சேர்ந்து வெளிப்படுவது இதய நோய்க்கு வித்திடலாம்.

    ×