search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heart"

    • உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
    • முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மையத்தில் இதயம் தானம் கேட்டு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீகா குளத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.

    இதனையடுத்து முதியவரின் இதயத்தை சிறுமிக்கு பொருத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறப்பு விமான மூலம் திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதன் மூலம் 11 வயது சிறுமி உயிர் பிழைத்தார்.

    இது இந்த ஆஸ்பத்திரியில் 10-வது வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.
    • இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும்.

    உடலில் ஓய்வு எடுக்காமல் வேலை செய்வது இதயம். அது இடைவிடாமல் துடித்துக்கொண்டிருப்பதால் நம் ஓட்டம் தடைபடாமல் இருக்கிறது. தாயின் கருவறையில் கருவானது 5 வார வளர்ச்சி பெற்றவுடன் இதயமாக உருவாகப்போகும் திசுக்கள் துடிக்கத்தொடங்கும்.

    கடைசி வரை இந்தத்துடிப்பு நிற்காது. இந்த திசுக்கள் குழாய் வடிவம் அடைந்து மடிக்கப்பட்ட நிலையில் இதயமானது உருவம் பெறுகிறது. கருவுக்கு உணவும் பிராண வாயுவும் அளித்து கழிவுப் பொருட்களை நீக்குவது தொப்புள்கொடியில் உள்ள ரத்தக் குழாய்களும் நஞ்சும்தான்.

    பிறந்த பிறகுதான் நாம் நுரையீரல் மூலம் சுவாசிக்கிறோம், பிராண வாயுவைப் பெறுகிறோம். அதுவரை ரத்தம் இதயத்தில் இருந்து கருவின் நுரையீரலுக்கு செல்லாமல் மாற்றுப் பாதையான டக்டஸ் ஆர்டீரியோஸிஸ் என்பதன் மூலம் சென்று தொப்புள்கொடி வழியாகச் சுத்திகரிக்கப்படுகிறது.

     ஆனால் குழந்தை பிறந்து முதல் மூச்சு எடுக்கும போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்கிறது. நுரையீரல் முதன் முறையாக விரியும்போது அந்த சின்ன இதயம் லேசாக திரும்புகிறது. அப்போது அந்த மாற்றுவழிப் பாதையான டக்டஸ் முறுக்கிக் கொண்டு மூடிவிடுகிறது. எத்தனை அழகான திறமையான வடிவமைப்பு இயற்கையால் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இதயம் ஒரு பம்ப். நமது ஜீவ நதிகளான ரத்த நாளங்கள் மூலம் நம் உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் உயிர் வாழத் தேவையானவற்றை அளிக்கிறது. இந்த பம்ப்பின் விசை இதயத் துடிப்புதான். இதை அளிப்பவை வேகஸ், சிம்பதடிக் என்கிற இரண்டு வகை நரம்புகள்தான். வேகஸ் துடிப்பைக் குறைக்கும், சிம்பதெடிக் அதிகரிக்கும். துடிப்பைத் தீர்மானிப்பவை மூன்று நோட்ஸ்.

    வீடுகளில் மின்தடை ஏற்படும்போது அவசரத் தேவைக்காக ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவற்றை வைத்திருக்கிறோம் அல்லவா? அதேபோல் ஒரு நோட் தடைபட்டால், அடுத்தது செயல்படத் தொடங்கும். ஆனால், அதே அளவில் இருக்காது. இவை மூன்றும் செயல் இழந்தாலும் இதயத் தசை தானாக நரம்புகளின் உதவியின்றிச் செயல்பட முடியும்.

    ஆனால், அப்போது இதயம் துடிப்பது நிமிடத்துக்கு 40 முறை மட்டுமே. தேவை அதிகரித்தாலும் துடிப்பு அதிகமாகாது. இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.

    மூளைதான் உணர்வுகளை ஏற்படுத்தி அவற்றின் தேவைக்குரிய மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், பயம், அதிர்ச்சி, ஆனந்தம் போன்ற பல உணர்வுகளுக்குத் தக்கவாறு இதயத்தை செயல்படச் செய்கிறது. இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும். மூளை செயலிழந்த நிலையை அடைந்தாலும் இதயத்தையும் மற்ற உறுப்புகளையும் தானம் செய்ய முடியும்.

    • இதயத்துக்கென தனியே மின்சார செயல்பாடு உள்ளது.
    • மூளை செயலிழப்பு ஏற்பட்டாலும் இதயத்துடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு முதலில் உருவாகுவது இதயம்தான். 20 வயது வரை இதயம் தொடர்ந்து வளர்ச்சி அடையும். இதயத்துக்கென தனியே மின்சார செயல்பாடு உள்ளது. மூளை செயலிழப்பு ஏற்பட்டாலும் இதயத்துடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

    மேலும், இதயத்துடிப்புக்கான சக்தியை இதயமே உற்பத்தி செய்து கொள்ளும். இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறையும், வாழ்நாளில் சராசரியாக 2.5 பில்லின் முறையும் துடிக்கிறது. மேலும், நமது வாழ்நாள் முழுவதும் சுமார் 117.34 லிட்டர் ரத்தத்தை இதயம் 'பம்ப்' செய்கிறது.

    இடது கையின் நடுவிரலின் கீழ்ப்பகுதி மற்றும் வலது கை மணிக்கட்டு பகுதியில் இதயத்துக்கான புள்ளிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட அழுத்தம் கொடுப்பதன் மூலம் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.

    பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிரோஜெஸ்டிரோன் ஹார்மோன் இதய நோயிலிருந்து உடலை பாதுகாக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பானது பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் வரை செயல்படும். ஆண்களை விட பெண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 8 முறை அதிகமாக இதயம் துடிக்கிறது.

    நாம் தும்மும் போது ஒரு வினாடி கண்கள் தன்னிச்சையாக மூடுவதுடன், இதயத் துடிப்பில் சிறிய மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. நம் சுவாசம் சீரானவுடன் மீண்டும் இதயம் சீராக துடிக்க ஆரம்பிக்கும். இதயத்துடிப்பானது மாரடைப்பு ஏற்படும் போது மட்டுமே நின்றுபோகும்.

    நாம் அதிக அளவு உணர்ச்சி வசப்படும்போதும், மன அழுத்தத்தில் இருக்கும்போதும் இதயம் முழுமையாக சுருங்கும். அதேபோல் அதீத மகிழ்ச்சி மற்றும் சிரிக்கும்போது வழக்கத்தைவிட இதயம் 20 சதவிகிதம் அதிகமாக ரத்தத்தை 'பம்ப்' செய்யும்.

    ரத்த அழுத்தம். கொலஸ்ட்ரால் அளவுகள், உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தான் இதயத்துக்கான வயது கணக்கிடப்படுகிறது. இதயத்துக்கான வயதைப் பொறுத்தே அதன் ஆரோக்கியம் மதிப்பிடப்படுகிறது. இதயத்தின் வயது நம்முடைய உண்மையான வயதைவிட குறைவாக இருக்கலாம்.

    பொதுவாக காலை வேளையில் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவை அதிகமாக ஏற்படும். மற்ற நேரங்களை விட காலை வேளையில் மன அழுத்தத்துக்கான ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். வாரத்தின் மற்ற நாட்களை விட திங்கட்கிழமை காலை வேளையில் அதிகமானோருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    இது தவிர, பூனை, நாய் மற்றும் குதிரை ஆகிய விலங்குகள் மனிதனின் இதயத்துடிப்பை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் உணர்வு ரீதியான பதிலை வெளிப்படுத்தும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன

    • வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
    • உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    சென்னை:

    அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

    இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

    தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் ‘கிரீன் காரிடார்’ அமைக்கப்பட்டது.
    • மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து கண்கலங்கினர்.

    மூளைச் சாவு அடைந்த திருச்செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், சாலை மார்க்கமாக கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல உடனே நடவடிக்கை எடுத்தனர்.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழிகாட்டுதலில் மதுரையில் இருந்து இன்று காலை கல்லீரல், இதயத்துடன் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை, புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அதன் முன் போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி சென்றது.

    நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் 'கிரீன் காரிடார்' அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியம் 2 மணிக்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. 

    • இருதய நோய் 45 நபர்களுக்கு கண்டறியப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
    • மருத்துவர் பாபு மற்றும் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    டெல்டா ரோட்டரி சங்கம், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மணி பல்நோக்கு மருத்துவமனை இணைந்து திருத்துறைப்பூண்டி பகுதியில் இருதய நோய் கண்டறியும் முகாம் நடத்தியது.

    இதில் 450 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் இருதய நோய் 45 நபர்களுக்கு கண்டறியப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனல ட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் அழைத்து செல்லப்ப ட்டனர்.

    இந்த முகாமிற்கு டெல்டா ரோட்டரி சங்கத்தின் மருத்துவ சேர்மன் மணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவர் பாபு மற்றும் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மண்டலம் 25 உதவி ஆளுநர் சிவக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். டெல்டா ரோட்டரி சங்கத்தின் சாசன தலைவர் கணேசன் மற்றும் முன்னாள் தலைவர்கள் தலைவர் தேர்வு மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம்.
    இதயத்தை சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.

    இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

    இதயத்தின் மேல் அறையின் பெயர் ஆரிக்கிள்.

    இதயத்தின் கீழ் அறையின் பெயர் வெண்ட்ரிக்கிள்.

    இதயத்தின் வலது அறைகளில் அசுத்தமான ரத்தம் உள்ளது.

    இதயத்தின் இடது அறைகளில் சுத்தமான ரத்தம் உள்ளது.

    இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்பவை கரோனரி தமனிகள்.

    இதயத் துடிப்பை அறிய உதவுவது ஸ்டெதஸ்கோப்.

    இதய அறைகளுக்கு இடையே வால்வுகள் உள்ளன.

    இதயம் நுரையீரல்களுக்கு பின்புறமாக அமைந்துள்ளது.

    இதயமே நமது உடலின் ரத்தத்தை பம்ப் செய்து மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

    நுரையீரல் பகுதியில் ஆக்சிஜன் ஏற்றப்படும் ரத்தம், இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைக்கிறது.

    உங்கள் கையை பொத்திக்கொண்டால் என்ன அளவு இருக்குமோ, இதயம் அந்த அளவுடையதாக இருக்கும்.

    இதயம் சுமார் அரை கிலோ எடை கொண்டிருக்கும்.

    இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை உருவாக்கும்.

    இதயத்துடிப்பு உருவாக்கும் இடம் பேஸ்மேக்கர் எனப்படுகிறது.

    இதேபெயரில் இதய சிகிச்சை கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    இதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. இதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    எல்லா நெஞ்சு வலிக்கும் பயப்பட வேண்டாம். எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பு இல்லை. நெஞ்சை சுற்றிலும் நுரையீரல், வயிறு, உணவுக் குழல் உள்ளது. மேலும் அதை சுற்றி தசைகள் இருக்கிறது. அதில் வலி ஏற்பட்டாலோ அது நெஞ்சு வலி மாதிரியாகத்தான் இருக்கும். இதில் சில விஷயங்களை வைத்துத் தான் இந்த வலி இருதயத்திலிருந்து வருகிறதா, இல்லை நுறையீரல், உணவுக் குழலிருந்து வருகிறதா என்று கண்டுபிடிப்போம்.

    எந்தமாதிரியான வலி இருதய வலி என்றால் ஒரு யானை நெஞ்சின்மேல் நிற்கும் மாதிரியான வலி, தேவையில்லாமல் மூச்சுத்திணறல், தேவையில்லாமல் அதிக வியர்வை இருந்தாலோ அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

    யாரை தாக்கும்?

    மனச்சோர்வு, உடற்சோர்வு, மூச்சுத்திணறல் இதெல்லாம் ஏற்பட்டால் இருதய நல மருத்துவரிடம் பரிசோதனை செய்யுங்கள். இப்பொழுது இருக்கிற காலக்கட்டத்தில் சிறிய வயதினருக்குக் கூட மாரடைப்பு வருகிறது என்கிறார்கள். அது உண்மைதான். ஏனெனில் இந்த உலகில் தொழில் ரீதியான போட்டிகள், மனஅழுத்தம் மற்றும் தீய பழக்கங்கள் (மது, புகைப்பழக்கம்) அதிகரித்து இருப்பதே ஒரு முக்கிய காரணம். சிறிய வயதினருக்கும், பெரியவர்களுக்கும் வரும் மாரடைப்பில் வித்தியாசம் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம். சிறிய வயதினருக்கு வரும் இதயப்பிரச்சனையில் அந்த நேரத்தில் ஏற்படுகிற இரத்த உறைவு (Blood Clots) ஒரு நாள் இல்லை இரண்டு நாளில் ஏற்பட்டதாக இருக்கும். 50-60 வயது உள்ளவர்களுக்கு பார்த்தோம் என்றால் கொலஸ்ட்ராலினால் வரும். இது ஒருநாள் இரண்டு நாளில் வருவது இல்லை.

    ECG எடுத்த பிறகு 2 விதமான சிகிச்சைகள் உள்ளன. உடனே மருந்து கொடுத்து கரைக்கலாம் அல்லது ஆஞ்சியோகிராம் பார்த்துவிட்டு பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யலாம். நோயாளியை Cathlab அறுவை சிகிச்சை அரங்குக்கு கூட்டி கொண்டு சென்று பலூன் மூலமா அந்த அடைப்பினை எடுத்துவிட்டு இரத்த ஓட்டத்தைச் சரி செய்துவிடலாம். இதை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டும். இதை சரிசெய்து விட்டால் ரத்த ஓட்டம் சீராகும். இதனால் அவரது ஆயுள் காலத்திற்கும் எந்தவிதப் பிரச்சனையும் வராது.

    ஒருவேளை தாமதமாக மருத்துவமனைக்கு வந்தால் அதாவது ஒரு 6 (or) 12 மணி நேரம் அல்லது ஒரு நாள் கழித்தோ தாமதமாக சிகிச்சையைத் தொடங்கினால் அந்த இரத்த ஓட்டம் இல்லாத தசைகள் செயலிழந்து விடும். ஒருமுறை செயலிழந்த தசைகள் திருப்பி செயல்பாட்டிற்கு வராது. அந்த சமயத்தில் அந்த மாரடைப்பு வந்த நோயாளர்களுக்கு எதிர் காலத்தில் இதய வலுவல் ஏற்படலாம். இவர்கள் காலம் முழுவதும் நடக்கும் போது மூச்சு வாங்குவதோ இல்லை. நெஞ்சுவலி வந்தோ கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்த மாதிரியான பிரச்சனை வராமல் இருப்பதற்கே தாமதிக்காத சிக்சைகள் உடனடியாக செய்யப்படவேண்டும் என்கிறோம்.

    இருதய நோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகள்

    முன்கூட்டியே கண்டுபிடிக்கிறதுக்கு இரத்தப் பரிசோதனை செய்து கொலஸ்ட்ரால் அளவினைக் கண்டறிந்தும், டிரெட்மில்லில் நடக்கும் போது ECG பார்த்து கண்டு பிடிக்கலாம். அல்லது இதயத்திற்கான எக்கோ பரிசோதனையின் மூலமோ கண்டறியலாம். இந்த மாதிரி கண்டுபிடிக்கும் போது ஒரு இரத்தக்குழாய் மட்டும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் பலூன் ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து சரிசெய்யலாம். சில சமயம் நிறைய இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் ஒவ்வொரு இரத்தக்குழாய்க்கும் போய் பலூன் வைத்து பண்ண முடியாது. அவர்களுக்குத்தான் பைபாஸ் சிகிச்சை அவசியமாகிறது. பைபாஸ் சிகிச்சையில் அடைப்பு இருக்கிற இரத்த குழாய்களை அப்படியே வைத்துவிட்டு புதிய ரத்தக் குழாய்களை எடுத்து அடைப்பு இருக்கிற மீதிப் பகுதியில் போய் இணைத்து விடவேண்டும். இதுதான் பைபாஸ்.

    இதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு சோர்ந்து போகாமல் தினமும் நடைபயிற்சி, மருத்துவர் பரிந்துரை செய்த உடற்பயிற்சிகள் செய்தல் மற்றும் கொழுப்பு உணவுகள், எண்ணை பலகாரங்கள் தவிர்த்தல், ஆரோக்கியமான, சத்தான ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளுதல், மருந்து மாத்திரைகள் தவறாமல் எடுத்துக் கொள்வது. மருத்துவர் பரிந்துரைத்த காலகட்டங்களில் தவறாது பரிசோதனைகள் செய்து கொள்வது இவற்றினால் நீடித்த ஆயுள்காலம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை.

    நாராயணா இருதய மையம், பாளையங்கோட்டை
    பல் பாதிப்பு, சொத்தை இவை எதனால் ஏற்படுகின்றது! என்றால் தீய பாக்டீரியாக்கள், சர்க்கரை, ஆசிட் இவைகளே பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. பல்லை பாதுகாக்க நாமும் சில வழிமுறைகளை கடைபிடிக்கலாமே.
    பயில்வான் போன்ற உடல் வலிமை உடையவர்கள் கூட பல் வலியில் துடித்து விடுவார்கள். காரணம் முறையான பல் பாதுகாப்பின்மைதான். பல் சுகாதாரமின்மை ஈறுகளில் நோய், பல் சொத்தை இவற்றினை எளிதில் உருவாக்கி விடும். பல், ஈறு பாதிப்புகள் அத்துடன் நிற்பதில்லை. சர்க்கரை நோய், குறை பிரசவம், இருதய பாதிப்பு, பக்க வாதம் இவைகள் ஏற்படவும் காரணமாகின்றது.

    இன்று பல் மருத்துவம் மிகப்பெரிய முன்னேற்ற நிலையினை அடைந்துள்ளது. இருப்பினும் பல் பாதிப்பு, சொத்தை இவை எதனால் ஏற்படுகின்றது! என்றால் தீய பாக்டீரியாக்கள், சர்க்கரை, ஆசிட் இவைகளே பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    பல்லில் எனாமல் தேயும் பொழுது ஓட்டைகள் ஏற்படுகின்றன. முதலில் பாதிக்கப்பட்டுள்ள இடம் மிருதுவாகும். வலி இருக்கும். சூடு, குளுமை, ஸ்வீட் சாப்பிட்டால் அந்த குறிப்பிட்ட இடத்தில் வலிக்கும். இந்த அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே பல் மருத்துவரிடம் சென்றால் உங்கள் பல்லினை பாதுகாத்து விடுவார். பொதுவில் வருடம் ஒருமுறையாவது பல் செக்-அப் செய்து கொள்வது அவசியமே.

    இருப்பினும் பல்லை பாதுகாக்க நாமும் சில வழிமுறைகளை கடைபிடிக்கலாமே.

    • பல்லில் எனாமல் கால்சியம், பாஸ்பேட் நிறைந்தது. இவை இரண்டும் உடலில் கிடைக்க வைட்டமின் டி நமக்கு வேண்டும். மருத்துவ அறிவுரையோடு வைட்டமின் ‘டி’ எடுத்துக்கொள்வோம்.

    • பாஸ்பரஸ் இருந்தாலே எனாமல் நன்கு பாதுகாக்கப்படும். கொட்டை வகைகள், முட்டை, பூண்டு, தக்காளி, பீன்ஸ் போன்றவை பாஸ்பரஸ் சத்தினை பெற உதவும்.

    • அன்றாட உணவில் 5 சதவீதத்துக்கு மேல் இனிப்புகள் வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது. இனிப்பில் உள்ள ஆசிட் பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    • சோடா அருந்துவதனை தவிர்த்துவிட வேண்டும்.

    • தூங்கும்பொழுது வாய்மூடி இருக்க வேண்டும். வாய் திறந்து தூங்கும் பொழுது வாய் வறண்டு விடுகின்றது. வாயில் உமிழ்நீர் வாய் மூடி இருக்கும் பொழுதே வாய் வறண்டு விடாமல் காக்கும். வறண்ட வாயில் பல் பாதிப்பு ஏற்படும்.

    • பாதுகாப்பான பல் பவுடர், பற்பசையினை உபயோகியுங்கள்.

    • காய்கறி ஜூஸ், பச்சை காய்கறிகள் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

    • 4-5 முந்திரியினை தினமும் உண்ணுங்கள். கெட்ட கிருமிகளை எதிர்க்கும் சத்துகள் இதில் அதிகம்.

    • ஆயுர்வேதம் எண்ணெய் வாய் கொப்பளிப்பினை பரிந்துரைக்கின்றது.
    பற்களை சீராக பராமரிக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு நேர்ந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
    பற்களின் ஆரோக்கியத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஆரோக்கியமான ஈறுகளை கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம் சீராக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இத்தாலியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 3600 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.

    ‘‘ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு வாய்வழி ஆரோக்கியம் அவசியமானது. அதனால் பற்களை சீராக பராமரிக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு நேர்ந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், அது தொடர்பாக சிகிச்சை பெறுபவர்கள் வாய்வழி ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உணவில் உப்பை குறைவாக சேர்த்து கொள்வது, முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவைகளும் அவசியமானவை’’ என்கிறார்கள், பல் மருத்துவர்கள்.

    உண்மையில் ராம பிரானை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள் என்று முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் தெரிவித்துள்ளார். #BuildRam #Heart #ShashiTharoor
    புதுடெல்லி:

    அயோத்தி விவகாரம் மீண்டும் தற்போது சூடுபிடித்து உள்ளது. இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர், எந்த ஒரு நல்ல இந்துவும் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியில் ராமர் கோவில் கட்டுவதை விரும்பமாட்டார் என தெரிவித்தார்.

    இது குறித்து பா.ஜனதாவினர் அதிருப்தி வெளியிட்டு இருந்த நிலையில், செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியின்போது அது குறித்து சசிதரூர் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘உண்மையில், ராம பிரானை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள் என்றுதான் இந்து உரைகளும், இலக்கியங்களும் கூறுகின்றன. அவரை இதயத்தில் வைத்துவிட்டால், வேறு எங்கும் அவர் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ பிரச்சினையில்லை. ஏனெனில் அவர் எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.

    வன்முறையின் மூலம் ராமர் கோவில் அமைப்பதை எந்த ஒரு இந்துவும் விரும்பமாட்டார் என மீண்டும் வலியுறுத்தி கூறிய சசிதரூர், நல்ல இந்து என்பவர் சட்டத்தை மதிப்பவராகவே இருப்பார் எனவும், இந்து இலக்கியங்கள் வன்முறையை அனுமதிப்பது இல்லை என்றும் குறிப்பிட்டார்.

    பா.ஜனதா தலைவர்களான அத்வானி, வாஜ்பாய் ஆகியோரும், தனது கருத்தை ஏற்கனவே வலியுறுத்தி இருந்ததாகவும் சசிதரூர் கூறினார்.  #BuildRam #Heart #ShashiTharoor 
    இருதய பாதிப்பு என்பது இருதயம் வேலை செய்ய வேண்டிய அளவு வேலை செய்யாமல் இருப்பதாகும். உயர் ரத்த அழுத்தம், அதிக எடை இரண்டுமே இருதயத்திற்கு சுமைதான்.
    இருதய பாதிப்பு என்பது இருதயம் வேலை செய்ய வேண்டிய அளவு வேலை செய்யாமல் இருப்பதாகும். மருந்தின் உதவியோடு அதனை வேலை செய்ய வைக்க முடியும் என்பது மருத்துவ முன்னேற்றம். சிறுநீரகங்களுக்கு தேவையான அளவு ரத்தம் கிடைக்காத பொழுது சிறுநீரகங்கள் உப்பு, நீர் இவற்றினைத் தேங்க வைத்து விடுகின்றன.

    இந்த அதிக நீர் கணுக்கால், பாதம், கால் சில சமயம் வயிறு பகுதிகளில் வீக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் திடீரென எடையும் கூடலாம். இந்த நீர் தேக்கம் மூச்சுத் திணறலினை உருவாக்கலாம். இது நீண்ட கால தொடர் மருத்துவம் தேவைப்படும் பாதிப்பு. மருத்துவம் இருக்கும் பாதிப்பினை மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தும். மருத்துவத்துடன் உணவு முறை, வாழ்க்கை முறை இவற்றினை மாற்றிக் கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கின்றது.
    உயர் ரத்த அழுத்தம், அதிக எடை இரண்டுமே இருதயத்திற்கு சுமைதான். ஆகவே

    * உங்கள் எடையினை அடிக்கடி சோதித்துக் கொள்ளுங்கள்.
    * நீங்கள் எடுத்துக் கொள்ளும் தண்ணீர், டீ, காபி, மோர், ஜூஸ் என எந்த திரவ உணவாயின் அளவினை கணக்கில் கொள்ளுங்கள்.
    * ரத்தக் கொதிப்பினை நல்ல கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்.
    * உப்பின் அளவினை குறைத்துக் கொள்ளுங்கள்.
    * மது வேண்டாமே

    * புகை பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்தி விட வேண்டும்.
    * தினமும் சுறுசுறுப்பாய் இருங்கள்.
    * மருந்து எடுத்துக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.
    * இருதய வால்வினால் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அறுவை சிகிச்சை தேவைபடலாம்.

    * மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், இருதய வால்வு பிரச்சினை இவைகள் இருதய பாதிப்பிற்கு பொதுவான காரணங்கள்.
    * வாழ்க்கையே போய் விட்டது போல் கருத வேண்டாம். சிறிது கவனம் உங்கள் வாழ்வை நன்றாக வைக்கும். அதிக வெய்யில், அதிக குளிர் காலங்களில் வெளியில் செல்ல வேண்டாம்.
    நீண்ட நேரம் வேலை செய்யாமல் நேரத்தினை குறைத்துக் கொள்ளுங்கள்.

    இருதயத்தினை பாதுகாப்பதற்கான டிப்ஸ்:

    * அவ்வப்போது இருதயத்திற்கும் சற்று வேக தூண்டுதல் நல்லதே. நல்ல புத்தகம், பாசமானவர்களுடன் இருத்தல், இவை இருதயத்தினை சற்று சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும்.

    * வெய்யில் காலத்தில் அதிக தூசு இருக்கும் நேரங்களில் வெட்ட வெளியில் உடற் பயிற்சி செய்யக் கூடாது. இது உங்களுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவினைக் குறைத்து இருதய பிரச்சினைகளை கூட்டி விடும்.

    * புகை பிடிக்கவும் வேண்டாம். புகை பிடிப்போர் அருகில் இருக்கவும் வேண்டாம்.



    * நீச்சல் போன்ற பயிற்சியினை ஆரம்ப காலத்தில் இருந்தே பழகி விடுவது நல்லது. இது 60 சதவிகிதம் இருதய பாதிப்பு ஏற்படுவதினைக் குறைத்து விடுகின்றதாம்.
    * மனஉளைச்சல் ஒன்றே போதும். உங்கள் இருதயத்தினை அதிக பாதிப்பிற்கு உள்ளாக்க. ஆக முனைந்து கவலைகளை அடித்து துரத்தி விடுங்கள்.
    * அன்றாடம் 20 நிமிட தியானம் அவசியம் என்று வலியுறுத்தாத மருத்துவர்கள் உலகில் இல்லை எனலாம்.

    * punching bag ஒரு தலையணையாவது வைத்துக் கொள்ளுங்கள். கோபம் ஏற்பட்டால் அதனை வலுவாக boxing போல் குத்துங்கள். ஏனெனில் கோபம் உங்களுள் இருந்தால் உங்களை பாதிக்கும். வெளி வந்தால் மற்றவரை பாதிக்கும்.

    * உங்கள் மருத்துவரிடம் உங்களுக்கு ஆஸ்பிரீன் மாத்திரை அவசியமா என கேட்டறியுங்கள். உங்கள் வயது, உடல் நலம், வேலை பளு இவற்றுக்கேற்ப அவரே உங்களுக்கு சரியான அளவினை தேவையெனின் பரிந்துரை செய்வார்.

    * காலை உணவினை தவறாது உண்பவர்களுக்கு 44 சதவிகிதம் இருதய பாதிப்பின் அபாயம் குறைந்தே இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமா? 41 சதவிகித சர்க்கரை நோய் பாதிப்பும் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * பி வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக பபோலிக் ஆசிட் சத்து மாத்திரையாக எடுத்துக் கொள்வது இருதய நோய் பாதிப்பினை குறைத்து விடுகின்றதாம்.

    * 5000 அடிகள் வீதம் தினம் நடப்பவருக்கு உயர் ரத்த அழுத்த அபாயம் வெகுவாய் குறைகின்றது.

    * முழு தானியம், காய்கறி சாலட் இவை மாபெரும் உதவியாய் இருதய நோயிலிருந்து மனிதனை காக்கின்றது.

    * டீ குடிக்க ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. அதிலும் கிரீன் டீ, லெமன் டீ, கறுப்பு டீ இவற்றினை நல்லது என்கின்றனர். இதிலுள்ள ப்ளேவனாய்ட் ரத்த நாளங்கள் உறுதியாய் வைப்பதுடன் ரத்தத்தினையும் இறுகாமல் வைக்கின்றது. இதனால் சிறு ரத்த கட்டிகள் உருவாகி அடைப்புகள் ஏற்படுவது வெகுவாய் தடுக்கப்படுகின்றது.

    * காபி இருதய பாதிப்பு உருவாகும் நிலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
    * அடர்ந்த சாக்லேட் ஓரிரு துண்டுகள் தினமும் சாப்பிடலாம்.
    * அதிக சோடியம் அதாவது உப்பினை தவிர்ப்பது இருதய பாதிப்பினை வெகுவாய் குறைக்கின்றது.
    * குடும்ப உறவுகளுடன் தினமும் சிறிது நேரம் பேசுங்கள். நேரம் செலவழியுங்கள்.

    * ஓமேகா-3, இதனைப் பற்றி உங்கள் மருத்துவர் ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள். 
    ×