search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் உறுப்புகள்"

    • படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். (வயது 58) விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே வடபழனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி மருத்துவமனை டாக்டர்கள் செல்வக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு சிலரது உயிர்களை காப்பாற்ற உதவ வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    பின்னர் அரசு உடல் உறுப்பு தானம் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஈரோடு தனியார் மருத்துவமனையில் செல்வக்குமார் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அகற்றப்பட்டு கோவை மருத்துவமனைக்கு தானமாக அனுப்பப்பட்டது.மேலும் காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் செல்வக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வகுமாருக்கு ஜானகி என்ற மனைவியும், சதீஷ்குமார் என்ற மகனும், கல்பனாதேவி என்ற மகளும் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் நலம் விசாரித்துக்கொள்ளும் என்பதாகும்.
    • மனித உடல் முழுமையும் நலமாகவும், வளமாகவும் இருப்பதாக இந்த மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரிது, அரிது... மானிடராய் பிறத்தல் அரிது என்பது அவ்வையின் பொன் மொழி. அந்த வகையில் மனித பிறப்பில் எத்தனையோ அதிசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் நலம் விசாரித்துக்கொள்ளும் என்பதாகும்.

    இதனை நாம் அறிவியல் பூர்வமாக அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் படைத்துள்ள படைப்புகள் வாயிலாக இந்த அரிய செயல்களை உணர்ந்து வருகிறோம்.

    அந்த வகையில் சென்னை ஐ.ஐ.டி.யின் உயிரியல் துறை பிரிவின் ஆராய்ச்சியாளர் மணிகண்ட நாராயணன், மல்ட்டிசென்ஸ் என்ற தலைப்பில் ஒரு மருத்துவ ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதில் மனித உடலுறுப்புகள் ஒன்றோடொன்று சமிக்ஞைகள் வாயிலாக பேசிக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக வயிற்றில் பசி ஏற்படும்போது, இந்த பசியை ஒரு வகையான ஜீன் மூலம் மூளைக்கு தூண்டப்பட்டு உணவு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மூளையின் இந்த தூண்டுதலால் வயிறு நிரம்புகிறது. இதனால் மூளை மற்றும் வயிறு ஒன்றோடொன்று ஜீன் மூலம் பேசிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலை பொறுத்தவரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜீன்கள் உள்ளன.

    இந்த ஜீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்வதில்லை. அது ஒவ்வொரு உறுப்பின் தேவைகளை அறிந்து தங்களது பணிகளை செய்கின்றன. இதன்மூலம் அனைத்து உடல் உறுப்புகளும் வேண்டிய சக்தியை பெற்று மனித இயக்கத்திற்கு உதவி செய்கிறது. ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தேவையான சமிக்ஞைகளை அனுப்பும் பொறுப்பு புரோட்டின்களுக்கு உண்டு.

    இந்த புரோட்டின்கள் மூலம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்கின்றன. மேலும், மனித செயல்பாடுகளில் முக்கியத்துவம் பெற்ற ஜீன்கள் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பாலமாக செயல்பட்டு முக்கிய தகவல் பரிமாற்றங்களை செய்கிறது. இந்த பணி மனித உடல் முழுமைக்கும் ஜீன்கள் திசுக்கள் மூலம் மேற்கொள்வதால் மனித உடல் ஆரோக்கியமாக அமைய வழிவகுக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர, தகவல் பரிமாற்றத்திற்கு மனித உடலில் உள்ள மூலக்கூறு கட்டமைப்புகளும் உதவி செய்வதாக தெரியவந்துள்ளது. மனித உடலின் உள்ளுறுப்புகளில் இந்த தகவல் தொடர்பு நெட்வொர்க் சிறப்பாக செயலாற்றுகிறது. மேலும், தட்பவெப்பம், மனித உடலுக்கு தேவையான ஆற்றல் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளையும் இந்த மூலக்கூறு கட்டமைப்புகள் ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தக்கவாறு செய்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதன்மூலமே மனித உடல் முழுமையும் நலமாகவும், வளமாகவும் இருப்பதாக இந்த மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆராய்ச்சியாளர்கள் டாக்டர்கள் தருண்குமார், சங்கமித்ரா, பேராசிரியர் பாலராமன் ரவீந்திரன், ராமநாதன், சேதுராமன் ஆகியோரும் மனித உடலில் மூலக்கூறுகளின் கட்டமைப்புகள் ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தகவல் தொடர்பாளர்களாக செயல்படுவதாக கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மனித உடல் உறுப்புகளின் வளர்ச்சியும் அமைவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் நன்றாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். இதற்காகவே ஒவ்வொரு உடல் உறுப்புகளும் தங்களுக்குள்ளே சமிக்ஞைகள் வாயிலாக பேசி நோயற்ற வாழ்வுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறது.

    இதை உணர்ந்து மனிதர்களாகிய நாமும் உடலை சுத்தமாக, ஆரோக்கியமாக பேணுவோம், நலம்பெறுவோம் என்பதுதான் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

    • வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
    • உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    சென்னை:

    அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

    இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

    தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2021ம் ஆண்டில் ஜாலிஸ்கோவில் உள்ள டோனாலா நகராட்சியில், 11 பேரின் மனித உடல் உறுப்புகளுடன் சுமார் 70 பைகள் கண்டுபிடிப்பு.
    • 2019ம் ஆண்டில், ஜபோபனின் மக்கள்தொகை இல்லாத பகுதியில் 119 பைகளில் 29 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    மேற்கு மெக்சிகோ, ஜலிஸ்கோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் உறுப்புகளுடன் குறைந்தது 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மே மாதம் 20ம் தேதி முதல் காணாமல் போன 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் என 7 பேரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 7 பேரும் வெவ்வேறு நாட்களில் காணாமல் போனதும், ஆனால் இவர்கள் 5 பேரும் ஒரே கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது புலனாய்வு விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில், பெரிய தொழில்துறை மையமான குவாடலஜாராவின் புறநகர்ப் பகுதியில் ஜபோபன் நகராட்சியில் 40 மீட்டர் (120 அடி) பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை அன்று மனித உடல் உறுப்புகள் கொண்ட 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " 45 பைகளில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சொந்தமான மனித உடல் உறுப்புகள் இருந்தன. தடயவியல் நிபுணர்கள் மனித உறுப்புகளின் அடையாளங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஆனால், இவை கண்டுபிடிக்கப்பட்ட அதே பகுதியில்தான் சம்பந்தப்பட்ட கால் சென்டரும் இயங்கி வருகிறது.

    இதன் முதற்கட்ட விசாரணையில், கால் சென்டர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும், இதுதொடர்பான முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக மாற்ற கால் சென்டர் நிறுவன அதிகாரிகள் முயல்வதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

    இதுபோன்று கடந்த 2021ம் ஆண்டில் ஜாலிஸ்கோவில் உள்ள டோனாலா நகராட்சியில், 11 பேரின் மனித உடல் உறுப்புகளுடன் சுமார் 70 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    மேலும் 2019ம் ஆண்டில், ஜபோபனின் மக்கள்தொகை இல்லாத பகுதியில் 119 பைகளில் 29 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    • வித்யா தனது மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்றார்.
    • கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது மோதியது

    கோவை,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி வித்யா(வயது 42). இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வித்யா தனது மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்றார். அப்போது அவரது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அவ ரது குடும்பத்தினர் அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அவரை அவசர பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறிதது ஆஸ்பத்திரி நிர்வாகம் அவரது குடும்பத்தி னருக்க தகவல் தெரிவித்தனர். அப்போது அவர்கள் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து டாக்டர்கள் வித்யாவின் உடல் உறுப்பு களை தானம் பெறு வதற்கான நடவடிக்கை களை எடுத்தனர். வித்யாவிடம் இருந்து கண், நுரையீரல், இருதயம், சிறுநீரகம், தோல் ஆகியவற்றை தானமாக பெற்றனர்.

    இதனை சென்னை மற்றும் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிக்க வேண்டும்
    • மாணவர்களுக்கு கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தல்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வரும் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-

    75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்வு எதற்காக அரசு நடத்துகிறது என்பதை மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட காலகட்டங்களில் நமது முன்னோர்கள் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி தந்தார்கள் என்பதை நினைவு கூறும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி நடைபெற்று வருகிறது.

    மேலும், நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், களரி, கோ-கோ, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடும் போது உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, உங்களின் திறமையும் வெளிப்படுகிறது.

    ஆனால் இன்றைய சூழ்நிலையில் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்விளையாட்டுகளை மறந்து மொபைல் போனில் வரும் விளையாட்டுகளை தொடர்ந்து பார்ப்பதால் உங்களின் கண்பார்வை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    உங்களின் ஒரே ேநாக்கம் நன்றாக படித்து வாழ்வில் உன்னத நிலையினை அடைய வேண்டுமென்ற லட்சிய நோக்குடன் உங்கள் பயணத்தினை மேற்கொள்வதோடு, உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்களுடன் கலந்துரையாடுவது, பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதிலும் உங்கள் நேரத்தை செலவிட வேண்டும்.

    மேலும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட என் குப்பை எனது கடமை என்பதை நாம் உணர்ந்து உங்கள் வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணுபுரியும் தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட உங்களது பெற்றோர்கள், நண்பர்கள், சுற்றத்தார் அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டு வதோடு, இக்குப்பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி கூற வேண்டும்.

    75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில் மாணவர்களாகிய உங்களின் முக்கிய பங்கு அனைவரும் மொபைல் போன் தவிர்ப்பது மற்றும் என் குப்பை எனது கடமை என்ற இரண்டினையினையும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் முத்துராமன், அகஸ்டினா கோகிலா வாணி, அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சனில் ஜாண், பள்ளி முதல்வர் அருட்பணி லிஸ்பத், துணை முதல்வர் அருட்பணி டோஜி செபஸ்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×