search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "organs"

    • வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
    • உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    சென்னை:

    அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

    இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

    தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். #JayantSinha #Drones #Organs
    புதுடெல்லி:

    மத்திய விமானத்துறை மந்திரி ஜெயந்த் சின்கா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை சாலை வழியாக கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து நெருக்கடியில் குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்வது சவாலான பணியாக இருக்கிறது.



    எனவே உடல் உறுப்புகளை ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஒரு மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த குட்டி விமானங்கள் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குட்டி விமானங்கள் புறப்பட்டு செல்லவும், அதை இறக்குவதற்கும் தேவையான வசதிகளை ஆஸ்பத்திரிகளில் முதலில் ஏற்படுத்த வேண்டும். இதனால் நேரம் விரயமாவதை குறைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JayantSinha #Drones #Organs

    ×