search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
    X

    விபத்தில் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

    • வித்யா தனது மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்றார்.
    • கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது மோதியது

    கோவை,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி வித்யா(வயது 42). இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வித்யா தனது மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்றார். அப்போது அவரது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அவ ரது குடும்பத்தினர் அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அவரை அவசர பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறிதது ஆஸ்பத்திரி நிர்வாகம் அவரது குடும்பத்தி னருக்க தகவல் தெரிவித்தனர். அப்போது அவர்கள் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து டாக்டர்கள் வித்யாவின் உடல் உறுப்பு களை தானம் பெறு வதற்கான நடவடிக்கை களை எடுத்தனர். வித்யாவிடம் இருந்து கண், நுரையீரல், இருதயம், சிறுநீரகம், தோல் ஆகியவற்றை தானமாக பெற்றனர்.

    இதனை சென்னை மற்றும் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×