search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லீரல்"

    • ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர்.
    • பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது.

    நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர் ஆகும். இது நமது வயிற்றில் வலது மேல் பகுதியில் இருக்கும் கல்லீரலில் உருவாகி, அதன் அடியிலுள்ள பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது, நாம் சாப்பிடும் உணவிலுள்ள கொழுப்பை உடைத்து, நுண் கொழுப்புப் பொருளாக மாற்றி, பின்னர் உடலிலுள்ள பலவிதமான உயிரணுக்களுக்கும் தேவைப்படும் சக்தியாக மாற்றி அளிக்கிறது.

    பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது. அப்படி இல்லை என்றால், வாந்தி, குமட்டல், தலைசுற்றல், அஜீரணம், ஏப்பம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    ரசாயனப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பது, சுத்தமில்லாத எண்ணெய்யில் பொரித்த, வறுத்த, அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் சில மருத்துவ ரீதியான நோய்களின் போதும் பித்த வாந்தி வருவதுண்டு.

     பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் வாந்தி இருந்தால், அது பித்தநீர் கலந்த வாந்தி தான். பித்த நீர் அதிகமாக சுரக்கிறது என்றால், மேல் வயிற்றில் வலி இருக்கும். நெஞ்செரிச்சல் இருக்கும். நாக்கு கசக்கும். வாந்தி வருகிற மாதிரி இருக்கும். இருமல் இருக்கும். திடீரென்று உடல் எடை குறைந்துவிடும்.

    நீங்கள் சாப்பிட்ட உணவில் அதிக அளவில் கொழுப்பு இருந்தால் உங்களது கல்லீரலில் பித்த நீரும் அதிக அளவில் சுரக்கும். இது பித்த அமில நீராகி உங்களது குடலுக்குள் செல்லும். இது உடலுக்கு நல்ல தல்ல.

    பித்த அமில நீர் அதிகமான அளவில் சுரக்காமல் இருக்க...

    * கொஞ்சம் கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிட வேண்டும்.

    * சாப்பிட்டவுடன் சுமார் அரை மணி நேரமாவது சாயாமல் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும், படுக்கவும் கூடாது.

    * கொழுப்பு சத்துள்ள உணவுகள் வயிற்றுப் பிரச்சினையை உருவாக்கக் கூடிய உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

    * மதுப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.

    * அளவுக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

    * படுக்கையின் தலைப்பகுதி சற்று தூக்கலாக இருக்க வேண்டும்.

    * நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும், வெண்ணெய், எண்ணெய் அதிக அளவில் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.

    • வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
    • உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    சென்னை:

    அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

    இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

    தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்லீரலின் நலன் காப்பதில் நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கல்லீரலின் நலம் காக்க செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் ஒன்று மது பழக்கம்.

    மூளைக்கு அடுத்தபடியாக உடலின் இரண்டாவது பெரிய உறுப்பாக கல்லீரல் விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், வளர்சிதை மாற்றம் உள்பட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கல்லீரலின் பங்களிப்பு முக்கியமானது. கல்லீரலின் செயல்பாட்டில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் மற்ற பாகங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படக்கூடும். மது பழக்கம், போதைப்பொருள் துஷ்பிரயோகம், ஹெபடைடிஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கல்லீரல் எதிர்மறையாக பாதிப்புக்கு ஆளாகிறது.

    ஒட்டுமொத்த உடல் நலனில் கல்லீரலின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்லீரல் தொடர்பான நோய்கள், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19-ந் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கல்லீரலை பாதுகாக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பற்றி பார்க்கலாம்.

    செய்யக்கூடியவை:

    * கீரை, புரோக்கோலி, காலே போன்ற பச்சை இலை காய்கறிகளை தவறாமல் உட்கொள்ளுங்கள். இந்த காய்கறிகள் உடலில் இயற்கையான சுத்திகரிப்பு செயல்முறையை தூண்டுவதற்கு உதவுகின்றன.

    * வால்நெட், அவகோடா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற நல்ல கொழுப்புகள் நிறைந்தவைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

    * கல்லீரலின் நலன் காப்பதில் நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீர் தான் இயற்கையாகவே நச்சுத்தன்மையை நீக்கும் முகவராக செயல்படுகிறது. உடலில் இருந்து கழிவுகளை சுலபமாக அகற்ற கல்லீரலுக்கு நீர் உதவிகரமாக செயல்படுகிறது.

    * உண்ணும் உணவில் பழங்களும் இடம் பெற வேண்டும். அவை ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, கிவி, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, கிரேப் புரூட் உள்ளிட்ட வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்களா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    * தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதுதான் எல்லா நோய்களில் இருந்தும் உடலை காக்கும் அருமருந்து. உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாட வாழ்வில் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நேரத்தை செலவிட வேண்டும்.

    இன்றைய இளம் தலைமுறையினரிடையே 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்தும் மோகம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தும் மை தரமானதாக இருக்க வேண்டும். அதனை குத்துவதற்கு பயன்படுத்தும் கருவி கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    ஒருவருக்கு பயன்படுத்திய டாட்டூ குத்தும் கருவி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படாவிட்டால், மற்றொருவருக்கு பச்சை குத்தும்போது ரத்தம் மூலம் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் அதிகம். குறிப்பாக ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி, கல்லீரல் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். டாட்டூ குத்தும் கருவிகள் மூலம் பரவும் வைரஸ்கள் ஆரம்பத்தில் கல்லீரல் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

    காலப்போக்கில் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் புதியதா அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு கிருமி நீக்கம் செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். ஏற்கனவே கல்லீரல் சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பச்சை குத்திக்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

    செய்யக்கூடாதவை:

    * பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். இந்த வகையான உணவுகள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த உணவுகள் உடலில் சர்க்கரை அளவையும் அதிகரிக்க செய்துவிடும்.

    * கெட்ட கொழுப்புகள் எனப்படும் நிறைவுற்ற கொழுப்புகளை தவிர்க்கவும். பொரித்த உணவுகளும் இதில் அடங்கும்.

    * கல்லீரலின் நலம் காக்க செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் ஒன்று மது பழக்கம். மதுவில் உள்ள ஆல்கஹால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலின் செயல்பாட்டை கடினமாக்கிவிடும். அதனால் கல்லீரல் எளிதில் பாதிப்புக்கு ஆளாகிவிடும்.

    * ஆடு, மாடு, பன்றி போன்ற பாலூட்டிகளின் இறைச்சி, சிவப்பு இறைச்சியாக கருதப்படும். அந்த வகை இறைச்சியை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த வகை இறைச்சி உணவுகள் கல்லீரலில் அதிக கொழுப்புகள் படிவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

    * சாக்லேட்டுகள், மிட்டாய்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற அதிக சர்க்கரை கொண்ட உணவுகளையும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது.

    • நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் ‘கிரீன் காரிடார்’ அமைக்கப்பட்டது.
    • மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து கண்கலங்கினர்.

    மூளைச் சாவு அடைந்த திருச்செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், சாலை மார்க்கமாக கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல உடனே நடவடிக்கை எடுத்தனர்.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழிகாட்டுதலில் மதுரையில் இருந்து இன்று காலை கல்லீரல், இதயத்துடன் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை, புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அதன் முன் போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி சென்றது.

    நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் 'கிரீன் காரிடார்' அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியம் 2 மணிக்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. 

    • தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
    • தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை கோர்ட் சுட்டிக்காட்டியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்தால் அவரை காப்பாற்றலாம் என்றனர்.

    இதையடுத்து உறுப்பு தானம் பெறுவோர் பட்டியலில் அந்த நபர் பதிவு செய்து காத்திருந்தார். ஆனால் உடனடியாக அவருக்கு கல்லீரல் தானம் கிடைக்கவில்லை. எனவே அவரது 17 வயதே ஆன மகள், தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார்.

    ஆனால் மருத்துவ சட்டவிதிகளின் படி மைனர் பெண் உறுப்பு தானம் செய்யக்கூடாது. இதனால் டாக்டர்கள், 17 வயது சிறுமியின் உறுப்பை தானமாக பெற மறுத்தனர். இதையடுத்து அந்த சிறுமி, ஐகோர்ட்டில் மனு செய்தார்.

    அதில் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். சிறுமியின் மனுவை பரீசிலித்த கோர்ட்டு சிறுமி அவரது, தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய அனுமதி வழங்கியது.

    தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்க சிறுமிக்கு அனுமதி வழங்கிய கோர்ட்டு அவரை பாராட்டவும் செய்தது. தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    மேலும் இதுபோன்ற மகளை பெற அவரது பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் என்றும் குறிப்பிட்டது.

    ×