என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏப்பம்"

    • செரிமான பிரச்சனையும் ஏப்பம் ஏற்பட ஒருவகையில் காரணமாக அமைகிறது.
    • சோடா கலந்த பானங்கள், மது வகைகள், புகைப்பழக்கம் முதலானவற்றை முற்றிலும் கைவிட வேண்டும்.

    அடிக்கடி ஏப்பம் வருகிறது. எதற்கு வருகிறது ஏன் வருகிறது என்றே தெரியவில்லை எரிச்சலாக இருக்கிறது என்று புலம்புகிறீர்களா? கவலையை விடுங்கள். இந்த பதிவில் ஏப்பம் ஏன் ஏற்படுகிறது, ஏப்பம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதை தடுப்பதற்கான எளிய வழிகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

    ஏப்பம் ஏன் ஏற்படுகிறது?

    நாம் உணவு உண்ணும் போது காற்றையும் விழுங்கி விடுகிறோம். அந்த காற்றானது வயிற்றையும் தொண்டையையும் இணைக்கும் உணவுக்குழாய் பகுதியில் அதிகமாக இருக்கும். நீங்கள் வேகவேகமாக சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கும் போது அந்த காற்றானது ஏப்பமாக வெளியேறுகிறது.

    ஏப்பம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

    உணவுக்குழாயில் உள்ள காற்று ஏப்பமாக வெளியேறுவது இயற்கையானது. ஆனால், சிலருக்கு எப்போதும் ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். அதற்கு அவர்கள் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் பழக்க வழக்கங்கள் தான் காரணமாக அமையும். மதுபானங்கள், புகை பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏப்பம் வரும். கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிக்கும் போதும் புகை பிடிக்கும் போதும் வாயுவானது அதிகமாக உள்ளிழுக்கப்பட்டு அதனால் ஏப்பம் ஏற்படுகிறது.

    செரிமான பிரச்சனையும் ஏப்பம் ஏற்பட ஒருவகையில் காரணமாக அமைகிறது. சிலருக்கு செரிமான பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பால் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது ஏப்பம் ஏற்படும். அதேபோல், மன அழுத்தம் கூட செரிமான அமைப்பை பாதித்து ஏப்பம் வர காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    'ஏப்பம் 'வராமல் தடுப்பதற்கான எளிய வழிகள்:

    ஏப்பம் வராமல் தடுப்பதற்கு உங்கள் அன்றாட வாழ்வில் சில பழக்க வழக்கங்களை முறைபடுத்தினாலே போதும். தினமும் நீங்கள் உட்கொள்ளும் உணவை வேகவேகமாக சாப்பிடாமல், மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.

    இரவில் தாமதமாக சாப்பிட நேரிட்டால் மசாலா அதிகமான உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

    செரிமான பிரச்சனைகளை தவிர்க்க அதிக அளவில் கீரை வகைகள், சோம்பு, இஞ்சி, மிளகு, சீரகம், புதினா, பெருங்காயம், தயிர், பூண்டு முதலானவற்றை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.

    சோடா கலந்த பானங்கள், மது வகைகள், புகைப்பழக்கம் முதலானவற்றை முற்றிலும் கைவிட வேண்டும்.

    செரிமான பிரச்சனை உள்ளவர்கள் லாக்டோஸ் இல்லாத பால் பொருட்களை முயற்சிக்கலாம்.

    மனதை ஒருநிலைப்படுத்த தினமும் யோகா, தியானம் அல்லது உங்கள் மன விரும்பும் செயல்களில் ஈடுபடலாம்.

    சாப்பிட்டவுடன் அதிக சத்தத்துடன், ஒருவித வாடையுடன் ஏப்பம் வருகிறது என்றால் அது வயிற்று புண், அஜீரணம், குமட்டல், நெஞ்செரிச்சலுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    • ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர்.
    • பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது.

    நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர் ஆகும். இது நமது வயிற்றில் வலது மேல் பகுதியில் இருக்கும் கல்லீரலில் உருவாகி, அதன் அடியிலுள்ள பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது, நாம் சாப்பிடும் உணவிலுள்ள கொழுப்பை உடைத்து, நுண் கொழுப்புப் பொருளாக மாற்றி, பின்னர் உடலிலுள்ள பலவிதமான உயிரணுக்களுக்கும் தேவைப்படும் சக்தியாக மாற்றி அளிக்கிறது.

    பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது. அப்படி இல்லை என்றால், வாந்தி, குமட்டல், தலைசுற்றல், அஜீரணம், ஏப்பம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    ரசாயனப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பது, சுத்தமில்லாத எண்ணெய்யில் பொரித்த, வறுத்த, அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் சில மருத்துவ ரீதியான நோய்களின் போதும் பித்த வாந்தி வருவதுண்டு.

     பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் வாந்தி இருந்தால், அது பித்தநீர் கலந்த வாந்தி தான். பித்த நீர் அதிகமாக சுரக்கிறது என்றால், மேல் வயிற்றில் வலி இருக்கும். நெஞ்செரிச்சல் இருக்கும். நாக்கு கசக்கும். வாந்தி வருகிற மாதிரி இருக்கும். இருமல் இருக்கும். திடீரென்று உடல் எடை குறைந்துவிடும்.

    நீங்கள் சாப்பிட்ட உணவில் அதிக அளவில் கொழுப்பு இருந்தால் உங்களது கல்லீரலில் பித்த நீரும் அதிக அளவில் சுரக்கும். இது பித்த அமில நீராகி உங்களது குடலுக்குள் செல்லும். இது உடலுக்கு நல்ல தல்ல.

    பித்த அமில நீர் அதிகமான அளவில் சுரக்காமல் இருக்க...

    * கொஞ்சம் கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிட வேண்டும்.

    * சாப்பிட்டவுடன் சுமார் அரை மணி நேரமாவது சாயாமல் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும், படுக்கவும் கூடாது.

    * கொழுப்பு சத்துள்ள உணவுகள் வயிற்றுப் பிரச்சினையை உருவாக்கக் கூடிய உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

    * மதுப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.

    * அளவுக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

    * படுக்கையின் தலைப்பகுதி சற்று தூக்கலாக இருக்க வேண்டும்.

    * நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும், வெண்ணெய், எண்ணெய் அதிக அளவில் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாப்பிடும்போது மெதுவாக சாப்பிட வேண்டும்.
    • ஆலிவ் எண்ணெய், நட்ஸ், விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் செரிமானத்தை மேம்படுத்தும்.

    ஏப்பம் என்பது நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும். இது சாதாரணமானது என்றாலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது பிரச்சனையாக மாறிவிடும்

    சாப்பிடும்போது மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிடும்போது அதிக காற்று உள்ளே சென்று விடுகிறது. இது ஏப்பத்தை உண்டாக்கும்.

    அடிக்கடி கொழுப்பு நிறந்த உணவுகளான எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதும் ஏப்பத்தை ஏற்படுத்துகிறது.

    சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால், உடலில் உணவுக்கான இடத்தை காற்று நிரப்பிவிடுகிறது. இதனாலும் ஏப்பம் அடிக்கடி வரும்.

    உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் செரிமானம் எளிதாகும். இதனால் ஏப்பம் வருவது குறையும்.

    ஆலிவ் எண்ணெய், நட்ஸ், விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் செரிமானத்தை மேம்படுத்தும்.

    அதிகப்படியான ஏப்பம் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தால், வயிற்றில் புண் இருக்கிறது என்று அர்த்தம். இதனால் கடுமையான வயிற்று வலியும் உண்டாகும்.

    நீண்ட நாட்களாக மன அழுத்தம், தூக்கமின்மை, சோகமாகவே இருப்பது, மன இறுக்கம் போன்ற பிரச்சனைகளும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனைகளால் ஏப்பம் அடிக்கடி வரும். எனவே மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    அடிக்கடி ஏப்பம் வருவதுடன், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற மற்ற அறிகுறிகளும், ஏப்பம் வருவது அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்தினால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    ×