search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heartburn"

    • ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமானது.
    • அத்தகைய உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது.

    உடல் நலனை பாதுகாப்பதற்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமானது. அத்தகைய உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது. நிறைய பேர் விரும்பிய நேரத்தில் உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இரவு உணவை தாமதமாக உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    அலுவலகம் முடியும் நேரத்திலோ, வீடு திரும்பும் வழியிலோ நொறுக்குத்தீனிகளை உட்கொண்டுவிட்டு இரவு உணவு உண்ணும் நேரத்தை தாமதப்படுத்துகிறார்கள். 9 மணிக்கோ, அதற்கு பிறகோ சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடுவது செரிமான செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதுதான் சரியானது. அதுதான் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது என்பது உணவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. முன்னோர்களும் அப்படி சாப்பிடும் வழக்கத்தைத்தான் பின்பற்றினார்கள். அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.

     இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    * தூக்கத்திற்கும், செரிமானத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இரவு தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லும்போது செரிமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும். அது தன் வேலையை செய்வதில் தொய்வு ஏற்படும். தூக்கமும் தடைபடும். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு பிறகு தூங்கச் செல்லும் வழக்கத்தை பின்பற்றினால் செரிமானம் சீராக நடைபெறும். உடல் உறுப்புகளுக்கும் எந்தவித பாதிப்பும் நேராது. அவை ஓய்வெடுத்து ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும். காலையில் எழும்போது சோர்வு எட்டிப்பார்க்காது.

    * இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பது உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும். இரவு 7 மணிக்குள் உணவு உட்கொள்ளும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    * இரவு உணவை 7 மணிக்கு உண்ணும்போது உடலில் உள்ள கலோரிகளை எதிர்த்து போராடுவதற்கு உதவும். உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.

    * இரவு தாமதமாக சாப்பிடும்போது விரைவாக செரிமானம் ஆவதற்கு செரிமான மண்டலம் ஒத்துழைப்பு கொடுக்காது. இரவு உணவுக்கும், தூங்கச் செல்லும் நேரத்திற்கும் இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். தாமதமாக சாப்பிடும்போது அந்த இடைவெளி குறைந்துவிடும். அதன் காரணமாக அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

    * இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது கூடுதல் கலோரிகளை எரிப்பதற்கு போதிய நேரமில்லாமல் போய்விடும்.

    * நீரிழிவு, இதயம், தைராய்டு சார்ந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் இரவு உணவை குறைவாக சாப்பிட வேண்டும். மேலும் இரவில் சீக்கிரமாகவே சாப்பிட்டுவிடுவதும் நல்லது.

    • ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர்.
    • பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது.

    நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கு மிகவும் உதவியாக இருப்பது பித்த அமிலநீர் ஆகும். இது நமது வயிற்றில் வலது மேல் பகுதியில் இருக்கும் கல்லீரலில் உருவாகி, அதன் அடியிலுள்ள பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. இது, நாம் சாப்பிடும் உணவிலுள்ள கொழுப்பை உடைத்து, நுண் கொழுப்புப் பொருளாக மாற்றி, பின்னர் உடலிலுள்ள பலவிதமான உயிரணுக்களுக்கும் தேவைப்படும் சக்தியாக மாற்றி அளிக்கிறது.

    பித்தநீர் அளவோடு சுரந்தால் தான் நல்லது. அப்படி இல்லை என்றால், வாந்தி, குமட்டல், தலைசுற்றல், அஜீரணம், ஏப்பம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    ரசாயனப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பது, சுத்தமில்லாத எண்ணெய்யில் பொரித்த, வறுத்த, அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் சில மருத்துவ ரீதியான நோய்களின் போதும் பித்த வாந்தி வருவதுண்டு.

     பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் வாந்தி இருந்தால், அது பித்தநீர் கலந்த வாந்தி தான். பித்த நீர் அதிகமாக சுரக்கிறது என்றால், மேல் வயிற்றில் வலி இருக்கும். நெஞ்செரிச்சல் இருக்கும். நாக்கு கசக்கும். வாந்தி வருகிற மாதிரி இருக்கும். இருமல் இருக்கும். திடீரென்று உடல் எடை குறைந்துவிடும்.

    நீங்கள் சாப்பிட்ட உணவில் அதிக அளவில் கொழுப்பு இருந்தால் உங்களது கல்லீரலில் பித்த நீரும் அதிக அளவில் சுரக்கும். இது பித்த அமில நீராகி உங்களது குடலுக்குள் செல்லும். இது உடலுக்கு நல்ல தல்ல.

    பித்த அமில நீர் அதிகமான அளவில் சுரக்காமல் இருக்க...

    * கொஞ்சம் கொஞ்சமாக உணவைப் பிரித்து சாப்பிட வேண்டும்.

    * சாப்பிட்டவுடன் சுமார் அரை மணி நேரமாவது சாயாமல் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும், படுக்கவும் கூடாது.

    * கொழுப்பு சத்துள்ள உணவுகள் வயிற்றுப் பிரச்சினையை உருவாக்கக் கூடிய உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

    * மதுப்பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்.

    * அளவுக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

    * படுக்கையின் தலைப்பகுதி சற்று தூக்கலாக இருக்க வேண்டும்.

    * நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும், வெண்ணெய், எண்ணெய் அதிக அளவில் உபயோகிப்பதைக் குறைக்க வேண்டும்.

    • பச்சை மிளகாயில் கேப்சைசின் என்ற சேர்மம் உள்ளது.
    • ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை பச்சை மிளகாய்க்கு உண்டு.

    சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் காரமான உணவுகளை சாப்பிட ஆசைப்படுவார்கள். ஆனால் அதிக காரம் சளி, இருமலை அதிகப்படுத்திவிடும் என்று கருதி சாப்பிட தயங்குபவர்களும் இருக்கிறார்கள். சமையலில் காரம் சேர்க்க வேண்டும் என்றாலே இல்லத்தரசிகளுக்கு பச்சை மிளகாய்தான் நினைவுக்கு வரும். அது காரத்திற்காக மட்டும் சமையலில் சேர்க்கப்படவில்லை. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை பச்சை மிளகாய்க்கு உண்டு.

    சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பச்சை மிளகாயை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். சளியின் வீரியத்தை குறைப்பதற்கு அது உதவும்.

    குறிப்பாக பச்சை மிளகாயில் கேப்சைசின் என்ற சேர்மம் உள்ளது. அது சளியை வெளியேற்றவும், சுவாச பாதையை சீராக்கவும் உதவும். மேலும் பச்சை மிளகாயில் இருக்கும் பைட்டோநியூட்ரியண்ட்கள் சுவாச பாதையை தளர்த்தவும் துணை புரியும்.

    வெட்டுக்காயம் உள்ளிட்ட காயங்களால் அவதிபடுபவர்களும் பச்சை மிளகாயை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். காயங்களை விரைவாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளை முடுக்கி விடுவதற்கு உதவும். வலியை கட்டுப்படுத்தவும் துணைபுரியும். மன நிலையை மேம்படுத்தும் ஆற்றலும் பச்சை மிளகாய்க்கு இருக்கிறது.

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும், நெஞ்செரிச்சல் தொடர்பான வலியை குறைக்கவும் உதவும். அதேவேளையில் பச்சை மிளகாயை அதிகம் சேர்க்கக்கூடாது.

    • தினமும் 6 முதல் 8 மணிநேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும்.
    • ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.

    மனிதர்களுக்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. தினமும் 6 முதல் 8 மணிநேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். ஆனால் இந்த காலத்தில் அப்படி யாரும் தூங்குவதில்லை. ஏனென்றால் அனைவரும் அதிகமாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.

    நீங்கள் இரவு 10 மணிக்கு மேல் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் போனில் இருந்து வரும் வெளிச்சத்தினால் மூளையில் மெலாட்டோனின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.

    நீங்கள் சரியாக தூங்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள் அல்லது ஸ்மார்ட் போனில் வேலைபார்க்கிறீர்கள் என்றால் அது மாரடைப்பு வருவதற்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் நெஞ்செரிச்சல் பிரச்சினையும் ஏற்படும்.

    இரவுநேரத்தில் நீங்கள் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்திவிட்டு காலையில் அதிகநேரம் தூங்கினால் அதை சரியான தூக்கமாக உங்களது உடல் ஏற்றுக்கொள்ளாது. இதுமாதிரி தொடர்ந்து நீங்கள் செய்தால் ஒரு கட்டத்திற்கு மேல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    தொடர்ச்சியாக இரவில் நீங்கள் மொபைல் போன் பயன்படுத்திவிட்டு பகல் நேரங்களில் தூங்குவீர்கள் என்றால் உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உங்களுடைய ஆயுட்காலம் குறையவும் வாய்ப்பு உள்ளது.

    ஒருவேளை நீங்கள் மொபைல் போன் பயன்படுத்தினால் தூங்க செல்வதற்கு முன்பு 10 நிமிடம் மட்டும் பயன்படுத்துங்கள் மற்றும் நீங்கள் படுத்து இருக்கும் இடத்தில் இருந்து 10 மீட்டர் இடைவெளிவிட்டு மொபைல் போனை வைக்க வேண்டும்.

    • செரிமானத்துக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
    • வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

     

    தக்காளி

    ஆரஞ்சு பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பலரும் அதனை விரும்பி ருசிக்கிறார்கள். அதில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இவை வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தவை. ஆனால் சில உணவுப்பொருட்களுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடுவது அஜீரணம், ஒவ்வாமை, அசவுகரியம், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரஞ்சு பழத்துடன் ஒருபோதும் சேர்த்து உட்கொள்ளக்கூடாத உணவுகள் குறித்து பார்ப்போம்.

    தக்காளி, ஆரஞ்சு ஆகியவற்றில் வைட்டமின் சி மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருந்தாலும் கூட இவை இரண்டுமே அசிடிக் உணவுப்பொருட்களாக கருதப்படுகின்றன. ஒரே சமயத்தில் இரண்டு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொள்வது அசிடிட்டி பிரச்சினையை உண்டாக்கும். செரிமானத்துக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

     தயிர்

    பாலை போலவே, ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மை தயிருடன் கலந்தால் சிலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

     வாழைப்பழம்

    வாழைப்பழத்தை ஆரஞ்சுப்பழத்துடன் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக வயிறு சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு பிரச்சினைகளை அதிகப்படுத்தும்.

     காரமான உணவுகள்

    ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மையுடன் காரமான உணவுகள் சேர்வது செரிமான கோளாறுக்கு வழிவகுத்துவிடும். வயிற்றுப் புண் போன்ற வலி பாதிப்புகளையும் உண்டாக்கிவிடும்.

    கொழுப்பு உணவுகள்

    அதிக கொழுப்புள்ள உணவுகளுடன் ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளும்போது அதன் அமிலத்தன்மை கொழுப்புடன் வினைபுரிந்து அசவுகரியத்திற்கு வழிவகுக்கும்.

    பாலாடைக்கட்டி

    பாலாடைக்கட்டியுடன் ஆரஞ்சு பழத்தை ருசிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்கும். அஜீரணத்தை தூண்டும்.

     காபி

    ஆரஞ்சு பழத்துடன் காபி அல்லது பிளாக் டீ உட்கொள்வது வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தலாம். வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.

     பானங்கள்

    ஆரஞ்சுப் பழத்துடன் கார்பனேற்றப்பட்ட பானங்களை நுகர்வது வயிறு உப்புசம், அசவுகரியம் உள்பட பல்வேறு பாதிப்புகளை அனுபவிக்க வைத்துவிடும்.

     மது

    ஆரஞ்சு பழத்துடன் மது பானங்கள் கலப்பது வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற் படுத்தலாம். ஒவ்வாமைக்கும் வழிவகுக்கலாம்.

     பால்

    சிட்ரஸ் பழங்கள், அவற்றின் பழச்சாறுகளுடன் பால் சார்ந்த பொருட்களைச் சேர்ப்பது அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மை பாலில் உள்ள புரதங்களுடன் வினை புரிந்து வயிற்று கோளாறு அல்லது வயிறு உப்புசத்திற்கு வழிவகுத்துவிடும். செரிமானத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    • சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.
    • அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை.

    சாப்பிட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதல்கட்ட செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக் குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு உள்ளது. இது உணவுக்குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது.

    உணவுக்குழாயின் மேல் முனையிலும் கீழ் முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் உள்ளன. மேல் முனையில் இருக்கும் கதவு, நாம் விழுங்கும் உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ் முனையில் இருக்கும் கதவு இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்த கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் செயல்படுகிறது.

    நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலமானது, இந்த எல்லைக்கோட்டை கடந்து, உணவுக்குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை.

     இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும். வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வலது பக்கமாகப் படுத்தால், இரைப்பையைச் சுற்றியுள்ள இடது பக்கக் குடல் இரைப்பையை அழுத்தும். அப்போது இரைப்பையில் நிரம்பி இருக்கிற உணவும் அமிலமும் உணவுக் குழாய்க்குச் சமமாக வந்துவிடும்.

    இதனால், இவை இரண்டும் உணவுக் குழாய்க்குள் எளிதாகப் புகுந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். முக்கியமாக எண்ணெயில் பொரித்த, வறுத்த, மசாலா மிகுந்த உணவைச் சாப்பிட்டதும் இரவில் படுத்துவிட்டால், இந்தத் தொல்லை ஏற்படும்.

    மாறாக, இடது பக்கமாகப் படுக்கும்போது, இரைப்பையில் உள்ள உணவு புவியீர்ப்பு விசை காரணமாக இரைப்பையில் முழுவதும் இறங்கிவிடுவதாலும், உணவுக் குழாய் மேலே இருப்பதாலும், இரைப்பையை எதுவும் அழுத்துவதில்லை என்பதாலும். அமிலமும் உணவும் மேலேற வழியில்லை. இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதில்லை. சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.

    குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து படுக்கச் செல்ல வேண்டும். உணவைச் சாப்பிட்ட பின்னர் குனிந்து வேலை செய்யக்கூடாது, கனமான பொருளைத் தூக்கக் கூடாது, உடற்பயிற்சி செய்யக் கூடாது, படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக் கொள்வது நல்லது என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்வது, உணவுக் குழாய்க்குள் அமிலம் தாவுவதைத் தடுக்கத்தான்.

    வலது பக்கமாகப் படுக்கும்போது உணவு நிரம்பிய இரைப்பை கல்லீரலை அழுத்தும். இடது பக்கமாகப் படுக்கும்போது கல்லீரலுக்கு அந்த அழுத்தம் இல்லை என்பதால், உணவுச் செரிமான நீர் சரியாக சுரந்து செரிமானத்தைச் சிறப்பாக ஊக்குவிக்கும். இடது பக்கமாகப் படுப்பது நிணநீர் சுழற்சியைத் தூண்டுவதால், உடல் அசுத்தங்கள் இதன் வழியாகவும் வெளியேற வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், ரத்தம் சீக்கிரம் சுத்தமாகிறது.

    வழக்கமான ரத்த சுற்றோட்டத்தையும் இது ஊக்குவிக்கிறது. ரத்த ஓட்டம் நன்றாக நடக்கும். இது இதயத்துக்கும் நல்லது. சிலருக்கு வலது பக்கமாகப் படுக்கும்போது நாக்கும், தொண்டைச் சதைகளும் தளர்ந்து, சுவாசக் குழாயை அழுத்தும். அப்போது குறட்டை ஏற்படும். இடது பக்கமாகப் படுப்பது, அந்த தசைகளை சமநிலையில் வைத்துக்கொள்ளும். இதனால் குறட்டை ஏற்படுவதில்லை.

    அநேகர் சொல்லும் சொல்லாக நெஞ்செரிச்சல் என்ற சொல் ஆகிவிட்டது. வயிற்றின் மேற்பகுதி, நெஞ்சு இவற்றில் நெருப்பு போல் எரிச்சல் தாங்கவில்லை என அநேகர் கூறுவர். இதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.
    அநேகர் சொல்லும் சொல்லாக நெஞ்செரிச்சல் என்ற சொல் ஆகிவிட்டது. வயிற்றின் மேற்பகுதி, நெஞ்சு இவற்றில் நெருப்பு போல் எரிச்சல் தாங்கவில்லை என அநேகர் கூறுவர். இதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.

    வயிற்றில் உள்ள அமிலம் மேலேறி உணவுக் குழாய்க்கு வரும் பொழுது உணவுக்குழாயின் உள் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. கார மசாலா உணவுகளே நெஞ்செரிச்சலுக்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    * நிணிஸிஞி எனப்படும் ஆசிட் மேல் எதிர்த்து எழுதல் காரணமாக தீரா நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

    * ஆஸ்ப்ரின் மற்றும் சில வலிநிவாரண மாத்திரைகளால் நெஞ்செரிச்சல் உண்டாகலாம். அதனால்தான் இந்த மாத்திரைகளை உணவுக்குப் பின்பே மருத்துவர் பரிந்துரைப்பார்.

    * ஆல்கஹால் போன்ற பிரிவுகள் வயிற்றில் ஆசிட் சுரப்பினை அதிகம் கூட்டி விடுவதன் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

    * புகை பிடித்தலும் மேற்கூறிய காரணத்தினைப் போன்றதே. இவைகள் உணவுக்குழாயினையே வலுவிலக்கச் செய்துவிடும்.

    * கர்ப்ப காலத்தில் கீழ் வயிற்றில் ஏற்படும் அழுத்தத்தால் அஜீரண கோளாறு மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

    * புற்றுநோய்

    * மாரடைப்பு

    * அதிக எடை

    * மன உளைச்சல்

    * அதிக (அ) குறைந்த வயிற்று ஆசிட் இவை அனைத்துமே நெஞ்செரிச்சலுக்கு காரணமாகின்றன. மிகச் சாதாரண காரணம் முதல், மிக அபாயகரமான காரணம் வரை நெஞ்செரிச்சல் பாதிப்பு இருக்கும் என்பதனை அறிந்துகொண்டால் நாம் கவனத்துடன் இருக்க முடியும். பொதுவாக நெஞ்செரிச்சலைத் தவிர்க்க நாம் கட்டாயம் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    * அதிக உணவு உண்ணாதீர்கள். சிலர் சாப்பிடும் பொழுது அதிகமாக சாப்பிடுவார்கள். பிறகும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு உணவுக்குழாய் சதைகளே பலவீனமாகிவிடும். இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் எப்பொழுதும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும்.

    * எடையினை சரியான அளவில் வைத்திருங்கள்.

    * சில உணவுகள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

    * மது, பால், சாக்லேட், காபி, பொறித்த, வறுத்த உணவுகள், சிலருக்கு பச்சை வெங்காயம், பாஸ்ட் புட்ஸ் போன்றவை நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக் கூடியவை.

    * காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிருங்கள்

    * வயிற்றின் மேல் படுப்பதனைத் தவிர்த்து பக்கவாட்டில் தூங்குங்கள். தலையனை வைத்து சற்று தலையினை உயர்த்தி படுங்கள்.

    * இடது பக்கவாட்டில் படுத்து உறங்குவது நல்லது.

    * வயிறு புடைக்க உணவு உட்கொண்டு தூங்கச் செல்லாதீர்கள். தூங்குவதற்கு 3 மணிநேரம் முன்பே உணவு உட்கொள்வது சரியானது.

    * அதிக உணவு உண்ணாதீர்கள் (எப்பொழுதும்)

    * அதிக கார்போ ஹைட்ரேட்டால் வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்

    * சோற்றுக் கற்றாழையினை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது சோற்றுக்கற்றாழை ஜூஸ் குடியுங்கள். இது வலி நீக்கும். வீக்கத்தினைக் குறைக்கும். நெஞ்செரிச்சலை நீக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியினைக் கூட்டும்.

    * ஒரு லிட்டர் தண்ணீரில் 1/2 எலுமிச்சை சாறு பிழிந்து அதனை குடிநீராகப் பயன்படுத்துங்கள்.

    * இஞ்சி, சிறிது பட்டைதூள் சேர்த்து டீ குடியுங்கள்.

    * தினமும் 15 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இது உணவு செரிமானத்திற்கு உதவுவதோடு மூளையினை சுறுசுறுப்பாய் இயங்கச் செய்கின்றது.

    * முதுகு வலி நீக்குகின்றது.

    * இடுப்பு பருமனை  குறைக்கின்றது.

    * கால்களில் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதினைத் தவிர்க்கின்றது.

    * இருதய பாதிப்பினை குறைக்கின்றது. 
    ×