search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "digestive problems"

    • வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
    • தீவிரமான வலியையோ, அசவுகரியத்தையோ ஏற்படுத்தும்.

    லேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது. அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது. ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.

    நெஞ்சுவலிக்கு வாய்வுத் தொல்லையும் காரணமாக இருக்கலாம், மாரடைப்பும் காரணமாக இருக்கலாம். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று பார்க்கலாம்.

    வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனாலும், அறிகுறிகளை வைத்து ஓரளவு வகைப்படுத்தலாம்.

    மாரடைப்பாக இருந்தால், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அவை பரவும். உதாரணமாகத் தோள்பட்டை, கை, முதுகுத் தண்டுவடம், கழுத்து, பற்கள், வாயின் தாடைப் பகுதிக்கு வலி பரவும். குறிப்பிட்ட ஒரே பகுதியில் மட்டும் தீவிரமான வலியையோ, அசவுகரியத்தையோ ஏற்படுத்தும்.

    வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் அப்படியல்ல. வாய்வுத் தொல்லை அல்லது நெஞ்செரிச்சலின்போது குறிப்பிட்ட பகுதியின் உள்ளே இருந்து யாரோ குத்துவது போன்ற உணர்வும், இழுப்பதுபோன்ற உணர்வும் ஏற்படும். அதேபோல் மூச்சுத்திணறலோ, தோள்பட்டையில் வலியோ, தொண்டையில் அழுத்தமோ ஏற்படாது.

    வாய்வுத் தொல்லையின்போது வாய்நாற்றம், பற்சிதைவு, உணவு விழுங்குவதில் சிக்கல், வாந்தி, எதுக்களித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிலருக்கு, நெஞ்சுப் பகுதியில் இல்லாமல், பின்முதுகு அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ளே இருந்து ஏதோவொன்று இழுப்பதுபோன்ற உணர்வு ஏற்படலாம்.

    நெஞ்செரிச்சலின்போது, புளித்த ஏப்பம் அதிகமாக ஏற்படும். மூச்சுக் குழாயில் ஏற்படும் எரிச்சலால், உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதை உணர முடியும். அதேபோல நெஞ்செரிச்சல், சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடாத நேரங்களில்தான் அதிகம் ஏற்படும். அமிலத்தன்மை அதிகம் இருக்கும் என்பதால், ஆரோக்கியமான உணவு உண்டதும் இந்தப் பிரச்னை உடனடியாகச் சரியாகிவிடும்.

    இவற்றை அடிப்படையாக வைத்து, உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலி மாரடைப்பா அல்லது வாயுத் தொல்லையா என்பதை நீங்களாகவே கணித்துக்கொள்ளலாம். சிலருக்குப் பதற்றம் அதிகரிக்கும்போது, அதன் காரணமாகக்கூட நெஞ்சு வலி ஏற்படலாம். இது, மருத்துவ மொழியில் பேனிக் அட்டாக் (Panic Attack) எனப்படும்.

    நெஞ்சுப்பகுதியின் நடுப்பகுதியில் வரக்கூடிய வலி இதயத்தில் ஏற்படும் வலியாக இருக்கும். இடது பக்கம் வரக்கூடிய வலி பெரும்பாலும் வாயுப்பிடிப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால் இதயத்துக்கும், இரைப்பைக்கும் இடையில் டயாப்ரம் என்ற ஒரு சவ்வு தான் இருக்கும். இது நாம் இரவு நேரம் கடந்து சாப்பிடும் போதோ அல்லது நிறையை தண்ணீர் குடிக்கும் போதோ அல்லது வயிறு நிறைய சாப்பிடும் போதோ இந்தமாதிரி வாயுப்பிடிப்பு ஏற்படும். சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாத போது கூட வாயுப்பிடிப்பு ஏற்படும்.

    இதற்கு சிறந்த வழி என்னவென்றால் ஆரோக்கியமான சாப்பாடு, அளவான தண்ணீர் தான். இந்த வாயுப்பிடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுவும் இரவு சாப்பாடு 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதுவும் அளவான தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், வயுறு முட்ட நீர் அருந்தக்கூடாது. இவ்வாறு செய்தால் மட்டுமே வாயுப்பிடிப்பை தவிர்க்க முடியும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.

    வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் வெந்நீரை குடிப்பதால் விலகும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், வெந்நீரைக் குடிப்பது அதில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது.

    நாம் வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். சரியான ரத்த ஓட்டம் காரணமாக, ரத்த அழுத்த அளவு சாதாரணமாக இருக்கும்.

    ரத்த அழுத்தத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது நாம் அனைவருக்கு தெரியும். இதன் பொருள் ரத்த அழுத்தம் சீராக இருந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயமும் குறைகிறது.

    நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை ஒன்று அல்லது இரண்டு கப் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி வெந்நீர் குடிப்பதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    உண்மையில், நீங்கள் சூடான தண்ணீரைக் குடிக்கும்போது, உடல் குளிர்ச்சியடையும் செயல்முறையைத் தொடங்குகிறது.

    இந்நிலையில், வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது, இது எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடல் பருமன் இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    எனவே, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மொத்தத்தில், சூடான நீரைக் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல விளைவைக் கொண்டிருக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆனால், எதையும் அதிகமாகச் செய்வது சரியல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    வெந்நீரிலும் இதே நிலைதான். வெந்நீரை அதிகமாக குடித்தால், உணவுக்குழாயில் உள்ள நல்ல திசுக்களை சேதப்படுத்தி, சுவை மொட்டுக்களை கெடுத்து, நாக்கில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, நீங்கள் தொடர்ந்து சுடுநீரை குடிக்க விரும்பினால், அதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்வது நல்லது.

    • உணவு விரைவாக செரிமானமாக வேண்டும்.
    • உணவின் வகையை பொறுத்து செரிமான முறை அமையும்.
    உண்ணும் உணவு விரைவாக செரிமானமாக வேண்டும். அப்போதுதான் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். வயது, பாலினம், வளர்சிதை மாற்றம், உணவின் வகை உள்ளிட்டவற்றை பொறுத்து செரிமான செயல்முறை அமையும். இருப்பினும் சாப்பிடும் உணவை பொறுத்து செரிமான செயல்முறை 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நடைபெறலாம் என்பது உணவியலாளர்களின் கருத்தாக

    இருக்கிறது. எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும் என்பது பற்றி பார்ப்போம்.

     தண்ணீர்

    தண்ணீர் விரைவாக செரிமானம் ஆகக்கூடியது. இருப்பினும் வயிறு நிரம்பியுள்ளதை பொறுத்து அது ஜீரணமாகும் நேரம் மாறுபடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் ஐந்து நிமிடங்களுக்குள் அது உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால் அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டு அதன் பிறகு தண்ணீர் பருகினால் அது உறிஞ்சப்படுவதற்கு சில மணி நேரமாகிவிடும்.

     ஜூஸ்

    பழச்சாறு பருகினால் அது சுமார் 20 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்பட்டு உடல் உறுப்புகளை சென்றடைந்துவிடும். அதன் மூலம் ஆரோக்கியம் வலுப்படும். ஸ்மூத்திகளை பருகினால் அவை செரிமானம் ஆவதற்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படும். எந்த உணவுகளை உட்கொண்டாலும் அதனுடன் இது போன்ற நார்ச்சத்துமிக்க உணவுகளையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். அவைதான் செரிமான மண்டலத்திற்கு சிறந்தவை.

     பழங்கள்

    முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும். தர்பூசணி பழம் விரைவாக செரிமானமாகக்கூடியது. அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செரிமான செயல்முறை ஒட்டுமொத்தமாக நடைபெற்று முடிந்துவிடும். குடல் இயக்கம் சுமூகமாக நடைபெறுவதற்கும் உதவி புரியும். அதேவேளையில் செரிமான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு உணவுகளுடன் பழங்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

     காய்கறிகள்

    பழங்களை விட காய்கறிகள் ஜீரணிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். இருப்பினும் கீரை, வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் செரிமானமாகி வயிற்றை விட்டு வெளியேற சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்களில் செரிக்கப்படும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட வேர் காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

     தானியங்கள்

    பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் ஒன்றை மணி நேரம் ஆகலாம். அதுபோல் பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.

     இறைச்சி

    எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். அதே நேரத்தில் சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் செரிமானம் அடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சிகளை உட்கொண்டால் அவை ஜீரணமாவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகும்.

     பால் பொருட்கள்

    கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகள் ஜீரணிக்க சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக்கட்டிகள் ஜீரணமாக5 மணி நேரம் கூட ஆகலாம். முட்டையின் மஞ்சள் கரு மட்டும் ஜீரணமாகுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.

     நட்ஸ்கள்-விதைகள்

    எள், சூரியகாந்தி, பூசணி விதைகள் ஜீரணமாக சுமார் 2 மணி நேரம் தேவைப்படும். பச்சை வேர்க்கடலை, பாதாம், முந்திரி பருப்புகள், அக்ரூட் பருப்புகள் போன்றவை ஜீரணமாகுவதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

    • ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 2½ லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.
    • அதிகமாக உணவருந்திவிட்டதாக உணர்ந்தால் சுடுநீரை அருந்துங்கள்.

    தண்ணீர் உயிருக்கு ஆதாரம். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 2½ லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும் என்று கூறப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சீரான செரிமானம், உடல் எடை குறைத்தல் மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்துவதற்கு மிதமான சுடுநீரை பருகுமாறு, ஒரு முறையேனும் பரிந்துரைக்கப்பட்டிருப்போம். ஏன் அவ்வாறு பரிந்துரைக்கிறார்கள்? என்பதைப் பார்ப்போம்.

    மூக்கடைப்பு நீங்க

    மூக்கடைப்பு நீங்க வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தினால் சிறந்த பலன் கிடைக்கும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரை அருந்தினால் அதிலுள்ள ஆவி மூக்கில் உள்ள மியூகஸ் மெம்ப்ரேனில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கும். எளிதாக சுவாசிக்க முடியும். தலைவலி நீங்கும். ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீர் மூக்கொழுகுதலை நிறுத்தும். இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும்.

    செரிமானம்

    நீங்கள் என்றைக்காவது அதிகமாக உணவருந்திவிட்டதாக உணர்ந்தால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள். வெதுவெதுப்பான நீர் என்பது நீங்கள் உண்ட உணவு சீக்கிரமாக செரிமானமாக உதவும். 2016-ல் தேசிய மருத்துவ நூலகத்தில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வெதுவெதுப்பான நீர் குடல் சீராக இயங்க உதவுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வயிற்றில் தேங்கும் காற்றை அப்புறப்படுத்தவும்உதவுகிறது.

    சிலருக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படலாம். மலச்சிக்கல் ஏற்படக் காரணம் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமையே. அதனால் மலச்சிக்கல் நீங்க போதிய அளவு வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும். இது குடல் இயக்கத்தை சீராக்கும்.

    மன அழுத்தம்

    மன அழுத்தம் குறைய வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். ஏனெனில் அது மத்திய நரம்பு மண்டலத்தை சீராக்கும். இதனால் உங்களால் மன அழுத்தமின்றி ரிலாக்ஸாக உணர முடியும். போதிய நீர்ச்சத்து இருந்தால் அது மனதை இலகுவாக்கும்.

    உடல் நடுக்கம்

    குளிர் காலத்தில் நம் உடல் நடுங்கக் கூடும். அதுமாதிரியான வேளையில் சுடு தண்ணீர் அருந்தினால் அது நடுக்கத்திலிருந்து விடுதலை தரும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது. வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக செல்லும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும்.

    ×