என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dairy"
- உணவு விரைவாக செரிமானமாக வேண்டும்.
- உணவின் வகையை பொறுத்து செரிமான முறை அமையும்.
இருக்கிறது. எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும் என்பது பற்றி பார்ப்போம்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/07/2000277-14.webp)
தண்ணீர்
தண்ணீர் விரைவாக செரிமானம் ஆகக்கூடியது. இருப்பினும் வயிறு நிரம்பியுள்ளதை பொறுத்து அது ஜீரணமாகும் நேரம் மாறுபடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் ஐந்து நிமிடங்களுக்குள் அது உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால் அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டு அதன் பிறகு தண்ணீர் பருகினால் அது உறிஞ்சப்படுவதற்கு சில மணி நேரமாகிவிடும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/07/2000278-15.webp)
ஜூஸ்
பழச்சாறு பருகினால் அது சுமார் 20 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்பட்டு உடல் உறுப்புகளை சென்றடைந்துவிடும். அதன் மூலம் ஆரோக்கியம் வலுப்படும். ஸ்மூத்திகளை பருகினால் அவை செரிமானம் ஆவதற்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படும். எந்த உணவுகளை உட்கொண்டாலும் அதனுடன் இது போன்ற நார்ச்சத்துமிக்க உணவுகளையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். அவைதான் செரிமான மண்டலத்திற்கு சிறந்தவை.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/07/2000279-16.webp)
பழங்கள்
முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும். தர்பூசணி பழம் விரைவாக செரிமானமாகக்கூடியது. அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செரிமான செயல்முறை ஒட்டுமொத்தமாக நடைபெற்று முடிந்துவிடும். குடல் இயக்கம் சுமூகமாக நடைபெறுவதற்கும் உதவி புரியும். அதேவேளையில் செரிமான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு உணவுகளுடன் பழங்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/07/2000280-17.webp)
காய்கறிகள்
பழங்களை விட காய்கறிகள் ஜீரணிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். இருப்பினும் கீரை, வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் செரிமானமாகி வயிற்றை விட்டு வெளியேற சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்களில் செரிக்கப்படும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட வேர் காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/07/2000281-19.webp)
தானியங்கள்
பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் ஒன்றை மணி நேரம் ஆகலாம். அதுபோல் பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/07/2000282-18.webp)
இறைச்சி
எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். அதே நேரத்தில் சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் செரிமானம் அடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சிகளை உட்கொண்டால் அவை ஜீரணமாவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/07/2000283-20.webp)
பால் பொருட்கள்
கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகள் ஜீரணிக்க சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக்கட்டிகள் ஜீரணமாக5 மணி நேரம் கூட ஆகலாம். முட்டையின் மஞ்சள் கரு மட்டும் ஜீரணமாகுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/01/07/2000284-21.webp)
நட்ஸ்கள்-விதைகள்
எள், சூரியகாந்தி, பூசணி விதைகள் ஜீரணமாக சுமார் 2 மணி நேரம் தேவைப்படும். பச்சை வேர்க்கடலை, பாதாம், முந்திரி பருப்புகள், அக்ரூட் பருப்புகள் போன்றவை ஜீரணமாகுவதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
- கறவைமாடு தொழில் கடனுதவியாக ரூ.40 லட்சம் வழங்கப்பட்டது.
- 62 பெண் விவசாயிகள் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் வங்கி கடனுதவி.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவனத்தில் கல்யாணபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் சார்பில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த பெண் விவசாயிகள் 25 இணை பொறுப்புக் குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கறவைமாடு கடனுதவிகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் கற்பக விநாயகம் வழங்கினார்.
கருப்பூர், மாத்தூர், சாத்தனூர், பனையூர், வீரசிங்கம்பேட்டை, சின்னகண்டியூர், லிங்கத்தடி புதுத்தெரு போன்ற கிராமங்களில் செயல்பட்டு வரும் 25 ஜே.எல்.ஜி. இணை பொறுப்பு குழுக்களுக்கு கறவைமாடு தொழில் கடனுதவியாக ரூ.40 லட்சம் வழங்கப்பட்டது.
அப்போது வங்கி மேலாளர் கற்பக விநாயகம் பேசும்போது, பெற்ற கடனை தவணை தவறாமல் திரும்ப செலுத்துவதன் மூலம் தொடர்ச்சியான வங்கி கடனுதவிகளை விவசாய மகளிர் குழுக்கள் பெற முடியும்.
கடந்த 8 மாத காலத்தில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சார்ந்த 62 பெண் விவசாயிகள் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டது என்றார்.
முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் செயலாளர் மற்றும் வினோ–பாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான கருணாமூர்த்தி வரவேற்புரை வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வங்கி பணியாளர்கள் மற்றும் கவ்டெசி தொண்டு நிறுவன பணியாளர்கள் அஸ்வினி, சுவர்ண ராஜ், சுபாஷினி, கோமதி ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.
- அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைரி.
- இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அருள்நிதி நடிப்பில் ஜூலை 22-ஆம் தேதி வெளியான 'தேஜாவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'டைரி'. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2022/07/24/1735150-1.jpg)
டைரி
இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து 'டைரி' படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யோகான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Thrilled to announce that Red Giant Movies have acquired the Tamil Nadu theatrical distribution rights of @arulnithitamil's #Diary
— Red Giant Movies (@RedGiantMovies_) July 23, 2022
A crime thriller coming 🔜 @kathiresan_offl @udhaystalin @innasi_dir @RonYohann @AravinndSingh @5starcreationss @DoneChannel1 @teamaimpr pic.twitter.com/PJdRZgkxUF
- தொண்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
- 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் மீனவர்கள் அதிமாக வசிக்கும் பகுதியான கடற்கரை எதிரே கடல் சூழ்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் முன்பு அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். வலைகளில் அதிகமாக மீன் விழவேண்டும், புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிக்கொண்டு செல்வார்கள்.
2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது திருவிழாநடைபெறும் நிலையில் மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் தொண்டியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதய நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அதற்கு ஒரு அருமருந்தாக பால் பொருட்கள் திகழ்கின்றன என சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மனிதர்கள் தங்களது அன்றாட உணவில் ஒரு டம்ளர் பால், ஒரு கப் தயிர் அல்லது ஒரு துண்டு பாலாடை கட்டி, எப்போதாவது வெண்ணை அல்லது நெய்யை சேர்த்துக் கொண்டால் போதுமானது.
உணவில் அன்றாடம் பால் பொருட்கள் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 5 கண்டங்களில் உள்ள 21 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1 லட்சத்து 36 ஆயித்து 384 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் 9 வருடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் பாலில் உள்ள கொழுப்பு சத்து மனிதர்களை இதய நோய்களில் இருந்து காப்பாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 22 சதவீதம் இதய நோய்களில் இருந்தும், 34 சதவீதம் பக்கவாதம் நோயில் இருந்தும் காக்கும் திறன் கொண்டது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201809151342068523_1_milkhealth._L_styvpf.jpg)
1990-ம் ஆண்டில் 2 கோடியே 50 லட்சம் பேர் இதய மற்றும் பக்கவாதத்தால் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 45 லட்சமானது.
இதய நோய் தாக்குதல்களால் கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஆந்திரா, இமாச்சல பிரதேசம், மராட்டியம், கோவா மற்றும் மேற்கு வங்காளத்தில் மரண விகிதம் அதிகமாக உள்ளது.
எனவே இதய நோயில் இருந்து தப்பிக்க பால் பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். #Milk #Heart #Dairy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)