search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொண்டை வலி"

    • அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மாதம் வரை பனி, குளிர் இருந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

    சளி, வறட்டு இருமல், தொண்டை வலியுடன் காய்ச்சல் பாதிப்பு ஏற்படு கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல்விட்டாலும் வறட்டு இருமல் ஒரு வாாரம் வரை தாக்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சளி, இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் சிகிச்சை பெறுவதை காண முடிகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது. முதியவர்களுக்கு கை-கால் வலியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    பெரும்பாலானவர்கள் முதலில் சளி, இருமலால் பாதிக்கப்பட்டு பின்னர் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து உஷ்ணம் அதிகமாக உள்ள நிலையில் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பதன் மூலம் பலர் சிக்கிக் கொள்கிறார்கள்.

    இந்த காய்ச்சல் பாதிப்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ளது. மேலும் தற்போது கொசுக்கள் பெருகி வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

    கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகக் கூடிய இந்த காலத்தில் நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டாலும் மழைநீர் கால்வாய்களில் விடப்படும் கழிவுநீர் மூலம் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

    மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் கொசுக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடிக்கிறது.

    இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளி தேர்வு காலத்தில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க சுகாதார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, பருவ நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளிர்சாதனை பெட்டியில் வைத்து குடிநீரை அருந்தக் கூடாது. ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டு சமையலை உண்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்றனர்.

    • ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 2½ லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.
    • அதிகமாக உணவருந்திவிட்டதாக உணர்ந்தால் சுடுநீரை அருந்துங்கள்.

    தண்ணீர் உயிருக்கு ஆதாரம். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 2½ லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும் என்று கூறப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சீரான செரிமானம், உடல் எடை குறைத்தல் மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்துவதற்கு மிதமான சுடுநீரை பருகுமாறு, ஒரு முறையேனும் பரிந்துரைக்கப்பட்டிருப்போம். ஏன் அவ்வாறு பரிந்துரைக்கிறார்கள்? என்பதைப் பார்ப்போம்.

    மூக்கடைப்பு நீங்க

    மூக்கடைப்பு நீங்க வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தினால் சிறந்த பலன் கிடைக்கும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரை அருந்தினால் அதிலுள்ள ஆவி மூக்கில் உள்ள மியூகஸ் மெம்ப்ரேனில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கும். எளிதாக சுவாசிக்க முடியும். தலைவலி நீங்கும். ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீர் மூக்கொழுகுதலை நிறுத்தும். இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும்.

    செரிமானம்

    நீங்கள் என்றைக்காவது அதிகமாக உணவருந்திவிட்டதாக உணர்ந்தால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள். வெதுவெதுப்பான நீர் என்பது நீங்கள் உண்ட உணவு சீக்கிரமாக செரிமானமாக உதவும். 2016-ல் தேசிய மருத்துவ நூலகத்தில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வெதுவெதுப்பான நீர் குடல் சீராக இயங்க உதவுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வயிற்றில் தேங்கும் காற்றை அப்புறப்படுத்தவும்உதவுகிறது.

    சிலருக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படலாம். மலச்சிக்கல் ஏற்படக் காரணம் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமையே. அதனால் மலச்சிக்கல் நீங்க போதிய அளவு வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும். இது குடல் இயக்கத்தை சீராக்கும்.

    மன அழுத்தம்

    மன அழுத்தம் குறைய வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். ஏனெனில் அது மத்திய நரம்பு மண்டலத்தை சீராக்கும். இதனால் உங்களால் மன அழுத்தமின்றி ரிலாக்ஸாக உணர முடியும். போதிய நீர்ச்சத்து இருந்தால் அது மனதை இலகுவாக்கும்.

    உடல் நடுக்கம்

    குளிர் காலத்தில் நம் உடல் நடுங்கக் கூடும். அதுமாதிரியான வேளையில் சுடு தண்ணீர் அருந்தினால் அது நடுக்கத்திலிருந்து விடுதலை தரும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது. வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக செல்லும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும்.

    • அனைத்து வயதினருக்கும் தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
    • எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவா்களுக்கு தீவிர தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.

    சென்னை:

    தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    பருவ காலத்தில் பரவும் வழக்கமான வைரஸ் பாதிப்புதான் இது என்றாலும், முன் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    பகல் வேளைகளில் அதீத வெப்பம் மற்றும் மாலை வேளைகளில் மழைப்பொழிவு என தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பருவ நிலையில் மாற்றங்கள் காணப்படுகின்றன. இதன் எதிர்விளைவாக குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு கடுமையான தொண்டை வலி, உடல் அசதி, காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிகிறது.

    அதன் தொடா்ச்சியாக மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக வரு ரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படத் தொடங்கி 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், தற்போது காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று பரவி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடா்பாக நோய்த் தொற்றியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டா் அப்துல் கபூா் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேவேளையில், சூழலியல் மாற்றங்களால் பரவும் வைரஸ் தொற்றுகள் ஆங்காங்கே பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    அனைத்து வயதினருக்கும் தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் அதற்கு டாக்டர்களை நாடுவதில்லை. 3-ல் இருந்து 5 நாட்களுக்குள் அந்த பாதிப்புகள் குணமாகிவிடுவதே அதற்கு காரணம்.

    எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவா்களுக்கு தீவிர தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது. அவா்களுக்கு பாராசிட்டமால் மற்றும் வைட்டமின் மருந்துகளையே பெரும்பாலும் பரிந்துரைக்கிறோம். வழக்கமான வைரஸ் தொற்று இது என்பதால் ஆன்டிபயோடிக், ஆன்டி வைரல் மருந்துகள் இதற்கு தேவையில்லை. வெது வெதுப்பான நீரில் உப்பு அல்லது கிருமித் தொற்று நீக்க மருந்துகளைக் கலந்து கொப்பளித்தால் போதுமானது.

    காய்ச்சிய தண்ணீரைப் குடிப்பதும், கைகளை சோப்பால் அடிக்கடி கழுவுவதும் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×