இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா...?

தினமும் 6 முதல் 8 மணிநேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.
இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா...?
Published on

மனிதர்களுக்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. தினமும் 6 முதல் 8 மணிநேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். ஆனால் இந்த காலத்தில் அப்படி யாரும் தூங்குவதில்லை. ஏனென்றால் அனைவரும் அதிகமாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.

நீங்கள் இரவு 10 மணிக்கு மேல் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் போனில் இருந்து வரும் வெளிச்சத்தினால் மூளையில் மெலாட்டோனின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.

நீங்கள் சரியாக தூங்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள் அல்லது ஸ்மார்ட் போனில் வேலைபார்க்கிறீர்கள் என்றால் அது மாரடைப்பு வருவதற்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் நெஞ்செரிச்சல் பிரச்சினையும் ஏற்படும்.

இரவுநேரத்தில் நீங்கள் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்திவிட்டு காலையில் அதிகநேரம் தூங்கினால் அதை சரியான தூக்கமாக உங்களது உடல் ஏற்றுக்கொள்ளாது. இதுமாதிரி தொடர்ந்து நீங்கள் செய்தால் ஒரு கட்டத்திற்கு மேல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

தொடர்ச்சியாக இரவில் நீங்கள் மொபைல் போன் பயன்படுத்திவிட்டு பகல் நேரங்களில் தூங்குவீர்கள் என்றால் உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உங்களுடைய ஆயுட்காலம் குறையவும் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை நீங்கள் மொபைல் போன் பயன்படுத்தினால் தூங்க செல்வதற்கு முன்பு 10 நிமிடம் மட்டும் பயன்படுத்துங்கள் மற்றும் நீங்கள் படுத்து இருக்கும் இடத்தில் இருந்து 10 மீட்டர் இடைவெளிவிட்டு மொபைல் போனை வைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com