search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இதயம்"

    • உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
    • முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மையத்தில் இதயம் தானம் கேட்டு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீகா குளத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.

    இதனையடுத்து முதியவரின் இதயத்தை சிறுமிக்கு பொருத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறப்பு விமான மூலம் திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதன் மூலம் 11 வயது சிறுமி உயிர் பிழைத்தார்.

    இது இந்த ஆஸ்பத்திரியில் 10-வது வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.
    • இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும்.

    உடலில் ஓய்வு எடுக்காமல் வேலை செய்வது இதயம். அது இடைவிடாமல் துடித்துக்கொண்டிருப்பதால் நம் ஓட்டம் தடைபடாமல் இருக்கிறது. தாயின் கருவறையில் கருவானது 5 வார வளர்ச்சி பெற்றவுடன் இதயமாக உருவாகப்போகும் திசுக்கள் துடிக்கத்தொடங்கும்.

    கடைசி வரை இந்தத்துடிப்பு நிற்காது. இந்த திசுக்கள் குழாய் வடிவம் அடைந்து மடிக்கப்பட்ட நிலையில் இதயமானது உருவம் பெறுகிறது. கருவுக்கு உணவும் பிராண வாயுவும் அளித்து கழிவுப் பொருட்களை நீக்குவது தொப்புள்கொடியில் உள்ள ரத்தக் குழாய்களும் நஞ்சும்தான்.

    பிறந்த பிறகுதான் நாம் நுரையீரல் மூலம் சுவாசிக்கிறோம், பிராண வாயுவைப் பெறுகிறோம். அதுவரை ரத்தம் இதயத்தில் இருந்து கருவின் நுரையீரலுக்கு செல்லாமல் மாற்றுப் பாதையான டக்டஸ் ஆர்டீரியோஸிஸ் என்பதன் மூலம் சென்று தொப்புள்கொடி வழியாகச் சுத்திகரிக்கப்படுகிறது.

     ஆனால் குழந்தை பிறந்து முதல் மூச்சு எடுக்கும போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்கிறது. நுரையீரல் முதன் முறையாக விரியும்போது அந்த சின்ன இதயம் லேசாக திரும்புகிறது. அப்போது அந்த மாற்றுவழிப் பாதையான டக்டஸ் முறுக்கிக் கொண்டு மூடிவிடுகிறது. எத்தனை அழகான திறமையான வடிவமைப்பு இயற்கையால் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இதயம் ஒரு பம்ப். நமது ஜீவ நதிகளான ரத்த நாளங்கள் மூலம் நம் உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் உயிர் வாழத் தேவையானவற்றை அளிக்கிறது. இந்த பம்ப்பின் விசை இதயத் துடிப்புதான். இதை அளிப்பவை வேகஸ், சிம்பதடிக் என்கிற இரண்டு வகை நரம்புகள்தான். வேகஸ் துடிப்பைக் குறைக்கும், சிம்பதெடிக் அதிகரிக்கும். துடிப்பைத் தீர்மானிப்பவை மூன்று நோட்ஸ்.

    வீடுகளில் மின்தடை ஏற்படும்போது அவசரத் தேவைக்காக ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவற்றை வைத்திருக்கிறோம் அல்லவா? அதேபோல் ஒரு நோட் தடைபட்டால், அடுத்தது செயல்படத் தொடங்கும். ஆனால், அதே அளவில் இருக்காது. இவை மூன்றும் செயல் இழந்தாலும் இதயத் தசை தானாக நரம்புகளின் உதவியின்றிச் செயல்பட முடியும்.

    ஆனால், அப்போது இதயம் துடிப்பது நிமிடத்துக்கு 40 முறை மட்டுமே. தேவை அதிகரித்தாலும் துடிப்பு அதிகமாகாது. இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.

    மூளைதான் உணர்வுகளை ஏற்படுத்தி அவற்றின் தேவைக்குரிய மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், பயம், அதிர்ச்சி, ஆனந்தம் போன்ற பல உணர்வுகளுக்குத் தக்கவாறு இதயத்தை செயல்படச் செய்கிறது. இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும். மூளை செயலிழந்த நிலையை அடைந்தாலும் இதயத்தையும் மற்ற உறுப்புகளையும் தானம் செய்ய முடியும்.

    • இதயத்துக்கென தனியே மின்சார செயல்பாடு உள்ளது.
    • மூளை செயலிழப்பு ஏற்பட்டாலும் இதயத்துடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு முதலில் உருவாகுவது இதயம்தான். 20 வயது வரை இதயம் தொடர்ந்து வளர்ச்சி அடையும். இதயத்துக்கென தனியே மின்சார செயல்பாடு உள்ளது. மூளை செயலிழப்பு ஏற்பட்டாலும் இதயத்துடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

    மேலும், இதயத்துடிப்புக்கான சக்தியை இதயமே உற்பத்தி செய்து கொள்ளும். இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறையும், வாழ்நாளில் சராசரியாக 2.5 பில்லின் முறையும் துடிக்கிறது. மேலும், நமது வாழ்நாள் முழுவதும் சுமார் 117.34 லிட்டர் ரத்தத்தை இதயம் 'பம்ப்' செய்கிறது.

    இடது கையின் நடுவிரலின் கீழ்ப்பகுதி மற்றும் வலது கை மணிக்கட்டு பகுதியில் இதயத்துக்கான புள்ளிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட அழுத்தம் கொடுப்பதன் மூலம் இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.

    பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிரோஜெஸ்டிரோன் ஹார்மோன் இதய நோயிலிருந்து உடலை பாதுகாக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பானது பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் வரை செயல்படும். ஆண்களை விட பெண்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 8 முறை அதிகமாக இதயம் துடிக்கிறது.

    நாம் தும்மும் போது ஒரு வினாடி கண்கள் தன்னிச்சையாக மூடுவதுடன், இதயத் துடிப்பில் சிறிய மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. நம் சுவாசம் சீரானவுடன் மீண்டும் இதயம் சீராக துடிக்க ஆரம்பிக்கும். இதயத்துடிப்பானது மாரடைப்பு ஏற்படும் போது மட்டுமே நின்றுபோகும்.

    நாம் அதிக அளவு உணர்ச்சி வசப்படும்போதும், மன அழுத்தத்தில் இருக்கும்போதும் இதயம் முழுமையாக சுருங்கும். அதேபோல் அதீத மகிழ்ச்சி மற்றும் சிரிக்கும்போது வழக்கத்தைவிட இதயம் 20 சதவிகிதம் அதிகமாக ரத்தத்தை 'பம்ப்' செய்யும்.

    ரத்த அழுத்தம். கொலஸ்ட்ரால் அளவுகள், உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தான் இதயத்துக்கான வயது கணக்கிடப்படுகிறது. இதயத்துக்கான வயதைப் பொறுத்தே அதன் ஆரோக்கியம் மதிப்பிடப்படுகிறது. இதயத்தின் வயது நம்முடைய உண்மையான வயதைவிட குறைவாக இருக்கலாம்.

    பொதுவாக காலை வேளையில் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவை அதிகமாக ஏற்படும். மற்ற நேரங்களை விட காலை வேளையில் மன அழுத்தத்துக்கான ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். வாரத்தின் மற்ற நாட்களை விட திங்கட்கிழமை காலை வேளையில் அதிகமானோருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    இது தவிர, பூனை, நாய் மற்றும் குதிரை ஆகிய விலங்குகள் மனிதனின் இதயத்துடிப்பை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் உணர்வு ரீதியான பதிலை வெளிப்படுத்தும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன

    • உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர்.
    • ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்புகள் வராமல் தடுப்பது மிகவும் அவசியம் ஆகும்.

    தற்போது உலகில் பலர் மாரடைப்பால் திடீரென்று இறப்பதற்கு முக்கிய காரணமே கொழுப்புத் தேக்கம் தான். உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர்.

    கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின்றனவோ, அங்கெல்லாம்,ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது.

    இதய ரத்தக்குழாய்களில் மட்டும் அல்ல, உடலுக்குள் செல்லும் எல்லா ரத்தக்குழாய்களிலும் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. உதாரணமாக, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பக்கவாதம் உண்டாகிறது. சிறுநீரக ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீரக செயலிழப்பு நேரிடுகிறது. கால்களுக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது கால் அழுகும் நிலை ஏற்பட்டு காலையே இழக்க நேரிடுகிறது.

    ஆனால், மற்ற உறுப்புகளை விட இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பாதிப்புகளும், உயிர் ஆபத்தும் அதிகம் நேரிடுகிறது. இதனால் தான் இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மனித உடல் முழுவதும் ரத்தம் கொண்டு செல்லும் பணியை இதயம் செய்கிறது. அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டால் அது உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இது போன்ற ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்புகள் வராமல் தடுப்பது மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் "வரும் முன் காப்போம்" என்ற நிலைப்பாட்டில் இதய பராமரிப்பு மிக முக்கிய இடம் வகிக்கின்றது. சரிவிகித உணவு உண்பது, மது-புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்ப்பது, மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் மன அமைதியை பராமரிப் பது அவசியம். மேலும், முறையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைகள் போன்றவற்றின் மூலம் ஆரோக்கியமான இருதய நலத்தையும், உடல் நலத்தையும் பெறலாம்.

    இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தற்போது இதய நோயால் ஏராளமானோர் உயிரை இழக்கின்றனர்.
    • இதய ரத்தக்குழாய் அடைப்பிற்கு 3 வகையான தீர்வுகள் உள்ளன.

    தற்போது இதய நோயால் ஏராளமானோர் உயிரை இழக்கின்றனர். இதய நோய் வருவதற்கு கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் அதிகமாக சாப்பிடுவதுடன், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்வது தான். இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளையும் உட்கொண்டு வர வேண்டும்.

    ஆஞ்சியோ (ஆஞ்சியோகிராம்) என்பது இதய ரத்தக்குழாய் அடைப்பை கண்டறியும் ஒரு பரிசோதனை முறையாகும். ஆஞ்சியோ என்பது ஒரு சிகிச்சை முறையோ அல்லது தீர்வோ அல்ல. ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பின் அளவு, தன்மை ஆகியவற்றுக்கு ஏற்பவும், நோயாளியின் வயது, உடல்நிலை போன்றவற்றின் அடிப்படையிலும் அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை தேவை என்பதை இதய நோய் சிகிச்சை நிபுணர் முடிவு செய்வார்.

    பொதுவாக இதய ரத்தக்குழாய் அடைப்பிற்கு 3 வகையான தீர்வுகள் உள்ளன. அவை:

    1) மருந்தின் மூலம் அடைப்பை நீக்கலாம்,

    2) ரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்க ஆஞ்சியோபிளாஸ்ட்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல் முறையை கையாளலாம். இந்த முறையில் ரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்க வலை போன்ற அமைப்புள்ள ஸ்டென்ட் பொருத்தப்படும். இது ரத்தக்குழாயை விரிவடையச்செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

    3) இதய பைபாஸ் ஆபரேஷன். ரத்தக்குழாயில் உள்ள அடைப்பின் அளவு அதிகபட்சமாக இருப்பது, ஸ்டென்ட் பொருத்த முடியாத நிலை போன்ற சூழ்நிலைகளின் போது பைபாஸ் ஆபரேஷன் பரிந்துரைக்கப்படும்.

    இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால் இந்த மூன்றில் ஏதாவது ஒரு தீர்வின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இதய நோயாளிக்கு இம்மூன்றில் எது தேவை, எந்த சிகிச்சை முறை பொருத்தமானது என்பதை இதய நிபுணர் தான் முடிவு செய்வார்.

    இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நாம் செய்யும் சில பழக்கங்கள் இதய நோய் வரக்காரணமாக இருக்கும்.
    • அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    அன்றாடம் பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள் இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றன. பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் அவை இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    * தூக்கத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது. தினமும் சில மணி நேரமாவது தடையற்ற ஆழ்ந்த தூக்கம் அவசிய மானது. தூக்கமின்மை மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும். இதயத்தின் செயல்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    * குறட்டை விடும் பழக்கமும் இதயத்திற்கு கேடு தரும். குறட்டை விடும்போது தொண்டை தசைகள் காற்று செல்லும் பாதைக்கு இடையூறு ஏற்படுத்தும். அதனால் சுவாசத்தில் கலந்து செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். குறட்டை பிரச்சினை நீண்டகாலமாக பின் தொடர்ந்து கொண்டிருந்தால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நல கோளாறுகளை எதிர்கொள்ள நேரிடும்.

    * தினமும் ஒரே இடத்தில் உட்கார்ந்து அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பது புகைபிடிக்கும் பழக்கத்தை காட்டிலும் மோசமானது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடமாடுவது அவசியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்தாலும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதயத்திற்கு நல்லதல்ல.

    * மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதும் முக்கியமானது. நீண்ட கால மன அழுத்தம் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழிவகுத்துவிடும். அதனால் தமனி சுவர்கள் சேதமடையும். மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகளை கற்றுக்கொள்வது உடலுக்கும், மனதுக்கும் பலனளிக்கும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஆழ்ந்த சுவாச பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

    * சமையலில் உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது. அதில் இருக்கும் சோடியம் தண்ணீரிலும், ரத்தத்திலும் அதிகம் கலக்கும்போது ரத்தத்தின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும். இதயத்திற்கும் அழுத்தம் கொடுக்கும். அதனால் இதய செயலிழப்பு ஏற்பட வழி வகுக்கும். உடலின் தேவைக்கேற்ப போது மான ரத்தத்தை இதயம் பம்ப் செய்ய முடியாத போது இதய செயலிழப்பு உண்டாகும்.

    * இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், கோழி, மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

    * இதயத்தை ஆரோக்கியமாக வைத் திருப்பதற்கு ஈறுகளின் ஆரோக்கியத்தை பேணுவது இன்றியமையாதது. வாய் வழியாக பல நோய்கள் உருவாகின்றன. முதலில் பற்களில் தொற்றுகள் பரவி இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும்.

    * தினமும் தவறாமல் ஒரு கப் காபி பருகுவது இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. காபியை தவறாமல் உட்கொள்ளும்போது இதய தமனிகளில் கால்சியம் சீராக இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    * கைகளை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அதில் பாக்டீரியாக்கள் படிந்து விடும். சாப்பிடும்போது உடலுக்குள் புகுந்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    • ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவிற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் நேரடி சம்பந்தம் உண்டு.
    • கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்.டி.எல். ரத்தத்தில் அதிகம் இருப்பது ஆபத்தானது.

    புகை பிடித்தலையும், மது அருந்துவதையும், இன்றைய இளைய தலைமுறையினர் (பெண்கள் உட்பட) நவீன வாழ்வியல் பண்பாடாக கருதுகிறார்கள். மேலும், இளைய சமுதாயம் பார்ட்டி என்ற பெயரில் ஜங்க் புட் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர் பானங்களை அதிகம் உட்கொள்கிறார்கள். இவை அனைத்தும் சிறுவயது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.

    ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவிற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் நேரடி சம்பந்தம் உண்டு. குறிப்பாக, கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்.டி.எல். ரத்தத்தில் அதிகம் இருப்பது ஆபத்தானது. இவை இருதய ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும். எனவே, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், நல்ல உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, தகுந்த மாத்திரை போன்றவற்றை வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டும்.

    வாகனம் வைத்துள்ளவர்கள் தங்கள் வாகனங்களை ஆறுமாதத்திற்கு ஒருமுறை பரிசோதித்து பராமரிக்கின்றனர். ஆனால், ஏனோ தங்களின் உடலை வருடத்திற்கொருமுறை பரிசோதித்து கொள்ள பெரிதும் தயக்கம் கொள்கின்றனர். இந்த நிலை மாறி ஒவ்வொருவரும் நம் உடலையும் அவ்வப்போது பரிசோதித்து, வள்ளுவன் சொன்ன வழியில் உணவே மருந்தென உட்கொள்வதும், மது மற்றும் புகைப் பழக்கத்தை விடுத்தலும், உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியத்தை பராமரித்தலும் ஹார்ட் அட்டாக்கிலிருந்து விலக்கி வைக்கும்.

    நெஞ்சு வலி (மார்பின் மத்தியில் அழுத்தம்), இடது கைக்கும் தாடை பகுதிக்கும் வலி பரவுதல், அதிக வியர்வை, மயக்கம், மூச்சு திணறல் போன்றவை மாரடைப்பு வந்தவுடன் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். 30 சதவீதம் இருதய நோயாளிகளுக்கு (குறிப்பாக முதியோர், சர்க்கரை வியாதி உள்ளவர்கள்) மாரடைப்பு வரும்போது எந்த ஆரம்ப அறிகுறிகளும் தெரிவதில்லை - இதை 'சைலன்ட் ஹார்ட் அட்டாக்' என்று கூறுவார்கள்.

    இருதய நோய் நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ)

    • மாரடைப்பு போன்ற இருதய நோய் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும்.
    • உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    இருதய நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்துகடலூர் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கல்யாணராமன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆரோக்கியமான உணவு முறை

    ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய நோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இருதய நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாரடைப்பு போன்ற இருதய நோய் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பிடித்தல், காற்று மாசு ஆகியவை இருதய நோய் வருவதற்கான காரணங்களாக உள்ளன. சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை, தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

    உடற்பயிற்சி

    ஒவ்வொரு நாளும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து உண்ண வேண்டும். உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும். மேலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் இயங்கும் வகையில், இருத்தல் நல்லது.

    புகைப் பிடிப்பதையும், புகையிலை பயன்படுத்துவதையும், அறவே தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய ஓர் சிறந்த விஷயமாக விளங்குகிறது. புகைப்பிடிப்பதை கைவிட்ட, 2 ஆண்டுகளுக்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது. மேலும் 15 ஆண்டுகளுக்குள் புகை பிடிக்காதவர்களின் இருதய நிலைக்கு வந்துவிடுவீர்கள். புகைப்பிடிப்பதை தவிர்ப்பதன் மூலம், உங்கள் இருதய பிரச்சினைகள் குறைவது மட்டும்இன்றி, அருகில் இருக்கும் சகமனிதர்களின் இருதய பிரச்சினைகளும் குறைய வழி வகை செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஒவ்வொவருக்கும் வேறுபடும்.
    • நமது வாழ்க்கை முறை மூலம் இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

    ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு திடீரென ஏற்படாது. பெரும்பாலும் மக்கள் மாரடைப்பிற்கான அறிகுறிகள் தென்படும் போது அதை கண்டு கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிடுவார்கள். இப்படி மாரடைப்பு வருவதற்கு முன் உணர்த்தும் அறிகுறிகளை சாதாரணமாக விட்டுவிட்டால், பின் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

    சில மணி நேரங்கள் முன்போ, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் முன்போ சில எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும். அதன் சில முக்கிய அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிக்பெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றும். எனவே ஒவ்வொருவரும் மாரடைப்பிற்கான அறிகுறிகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஒவ்வொவருக்கும் வேறுபடும்.

    குடும்பத்தில் ஒருவருக்கு (குறிப்பாக பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோருக்கு) மாரடைப்பு வந்தால், அந்தக்குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு மாரடைப்பு வர 30 சதவிகிதம் வாய்ப்பு அதிகமாக உண்டு. மரபு வழியாக இது வரக்கூடியது என்பதால் இதை தடுக்க வழி எதுவும் இல்லை. அதே நேரத்தில் நமது வாழ்க்கை முறை மூலம் இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

    அவை:

    1) ஆரோக்கியமான உணவுகள், போதிய உடற்பயிற்சி, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது,

    2) கோபம், குரோதம், பொறாமை போன்ற தீய எண்ணங்கள் எதுவும் இன்றி மனதையும், எண்ணங்களையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது,

    3) சிறந்த வாழ்க்கை முறையை கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் இருப்பது,

    4) அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து பாதிப்புகள் எதுவும் இருந்தால் தொடக்க நிலையிலேயே சிகிச்சை எடுப்பது நல்லது,

    5) சிலர் சமூக வலைத்தளங்களில் கூறப்படும் மருத்துவ முறைகளை சுயமாக பயன்படுத்துவதுண்டு. இது மிகவும் தவறாகும். அரசு அங்கீகாரம் பெற்ற, தகுதியான மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்துகளையும் எடுக்கக்கூடாது. இவற்றை கடைப்பிடித்து வந்தால் நீண்ட காலம் நோய் ஆபத்து இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

    இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
    • உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    சென்னை:

    அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

    இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

    தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    நீரிழிவு நோயை போல இதய நோயால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' எனப்படும் கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் ஏற்படும் மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் கை, கழுத்து, தாடை பகுதியில் வலி, மார்பில் குத்துவது போன்ற வலி, தலைச்சுற்றல், பதற்றம், வியர்வை போன்ற மாரடைப்புகளுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாது.

    இரைப்பை பகுதியில் அசவுகரியம் ஏற்படுவதுபோல் சாதாரணமாக தெரியும். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு சில அறிகுறிகள் வெளிப்பட்டாலும் சாப்பிட்ட உணவு ஏதோ ஒத்துக்கொள்ளவில்லை என்று வாயு தொல்லை, அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சினையாகத்தான் பலரும் கருதுகிறார்கள்.

    பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள் இத்தகைய அறிகுறிகளை எளிதில் உணரமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் நரம்புகள் வலி பற்றிய அறிகுறிகளை சட்டென்று வெளிப்படுத்தாது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாமலேயே சில சமயங்களில் மாரடைப்பு ஏற்படக்கூடும்.

    'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்படுவது எப்படி தெரியும்?

    வயிற்றின் மேல் பகுதியிலோ அல்லது மார்பின் மையப் பகுதியிலோ இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண அறிகுறிகளோ, வலியோ 20 முதல் 25 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம். ஈ.சி.ஜி. பரிசோதனை எடுத்துக்கொள்வதும் முக்கியமானது. அதன் மூலமே நோய் பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம். டிரோபோனின் டி பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.

    இது இரத்தத்தில் உள்ள டிரோபோனின் ஐபுரோடீன்களின் தன்மையை அளவிடும். இந்த புரதங்கள் இதய தசை சேதமடைவதை சுட்டிக்காட்டும். இதயம் எவ்வளவு சேதமடைகிறதோ, அந்த அளவுக்கு ரத்தத்தில் ட்ரோபோனின் டி அளவு அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற அசவுகரியம் தோன்றினாலோ, சிறிது நேரத்திற்கு பிறகு மறைந்தாலோ இவை இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

    35 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் எக்கோ கார்டியோகிராம் ஆகியவை அதில் உள்ளடங்கி இருக்க வேண்டும். நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு கொண்டவர்கள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் கொண்டவர்கள், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்கள், ஏற்கனவே இதய நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. முதல் முறை 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டது தெரியாமலேயே கடந்து சென்றுவிட்டால், இரண்டாவது முறை ஏற்படும்போது கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன.
    • மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை தடுக்கும் 5 உணவு வகைகளை பார்ப்போம்.

    இதய நோய்கள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடாமல் புறக்கணிப்பதால் மாரடைப்பு அபாயம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை தடுக்கும் 5 உணவு வகைகளின் பட்டியலை பார்ப்போம்.

    1. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு முக்கிய பங்குண்டு. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட சால்மன், டுனா போன்ற மீன்களை உண்பது, டிரைகிளிசரைடுகளை குறைத்து, உடலில் ஏற்படும் வீக்கத்தை போக்கும். அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் ராஜ்மா போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தத்தை இயல்பான அளவில் வைத்திருக்கவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.

    2. முழுதானியங்கள்:

    பதப்படுத்தப்பட்ட தானியங்கள் பல்வேறு செயல் முறைகளின் மூலம் வடிகட்டப்படுகின்றன. அப்போது அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் வீரியம் குறைந்து போய்விடக்கூடும். ஆனால் முழு தானியங்களை கழுவி சுத்தம் செய்யும்போது இத்தகைய பாதிப்பு கள் நேராது. மேலும் முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளடங்கி இருக்கும். அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக தக்க வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. நீரிழிவு மற்றும் இதய நோய் ஆபத்துக்களை குறைக்கவும் செய்யும். ''முழு தானியங்களை பதப்படுத்தும்போது, அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் நீக்கப்படக்கூடும். அவற்றை அதிகம் உட்கொள்வது உடல் பருமனையும், ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியையும், வழக்கமான பாஸ்தாவை விட முழு கோதுமை நீக்கப்படாத பாஸ்தாவையும், கார்ன் பிளேக்குகளுக்கு பதில் ஓட்ஸையும் தேர்வு செய்யலாம்'' என்கிறார் மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பாட்டீல்.

    3. பழங்கள்- காய்கறிகள்: வளமான வாழ்க்கைக்கு பழங்கள், காய்கறிகளை உண்ணுங்கள் என்கிறார்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, பொட்டாசியம், போலிக் அமிலம் ஆகியவை நிரம்பியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவுவதோடு உடலில் ஏற்படும் தேய்மானத்தை சரி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    4. நிறைவுற்ற கொழுப்பு: இறைச்சி வகைகள் மற்றும் பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு காணப்படுகிறது. இவை எல்.டி.எல் கொழுப்பின் அளவை உயர்த்தலாம். தமனிகளின் செயல்பாடுகளை முடக்கி விடலாம். எனவே நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான இறைச்சி வகைகளை தேர்வு செய்ய வேண்டும். வெண்ணெய்க்கு பதில் நெய், கடுகு எண்ணெய் போன்ற நல்ல கொழுப்பு கொண்ட உணவு பொருட்களை சமையலுக்கு தேர்ந்தெடுக்கலாம்.

    5. பால் பொருட்கள்: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன. ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது அவற்றில் உள்ள கொழுப்பு உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்துவிடும். பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். இருப்பினும் அவற்றில் குறைந்த கொழுப்பு வகை கொண்டவற்றை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை குறைக்கும்.

    ×