என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக இதய தினம்"

    • இதயம் நான்கு அறைகளைக் கொண்டுள்ளது.
    • இதயத்தின் அறைகளில் உள்ள ரத்தத்தை தமனிகள் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செலுத்துகிறது.

    மனித உடலின் முக்கிய உறுப்பு இதயம். அந்த இதயமானது உடலின் ரத்த ஓட்ட அமைப்புக்கு ஆதாரமான, தசைத்திறன் கொண்ட ஒரு உறுப்பு ஆகும். இதன் முக்கிய வேலை, தமனிகள் மற்றும் நரம்புகள் வழியாக உடலின் அனைத்து செல்களுக்கும் திசுக்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்வதாகும்.

    இதயம் நான்கு அறைகளைக் கொண்டுள்ளது. இதயத்தின் முக்கிய பணி, ரத்தத்தை சுற்றியுள்ள திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் செலுத்துவதும், அதிலிருந்து ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு, கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதுமாகும்.

    இதயத்தின் முக்கிய பணிகள்:

    ரத்தத்தை பம்ப் செய்தல்: இதயம் சுருங்கி விரிவடைந்து, இதயத்தின் அறைகளில் உள்ள ரத்தத்தை தமனிகள் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செலுத்துகிறது.

    ரத்த ஓட்டத்தை உறுதி செய்தல்: இதயத்தில் உள்ள நான்கு அறைகள், மற்றும் வால்வுகள் சரியான நேரத்தில் திறந்து மூடப்படுவதன் மூலம் ரத்தமானது ஒரே திசையில் பாய்வதை உறுதி செய்கின்றன.

    ஊட்டச்சத்துக்கள் வழங்குதல்: இதயத்தின் மூலம் ரத்தமானது உடல் முழுவதும் ஆக்சிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டு சென்று, செல்களுக்கு கிடைக்க உதவுகிறது.

    கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல்: உடலால் உருவாகும் கழிவுப் பொருட்களை திசுக்களில் இருந்து சேகரித்து, அவற்றை வெளியேற்ற உதவுவதற்கும் ரத்த ஓட்டம் உதவுகிறது.

    இதயத்தின் துடிப்பு: இதயத்தில் உள்ள சிறப்பு இதயத்தசை செல்கள், ஒன்று சேர்ந்து, இதயத்துடிப்புக்கான சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இதயமும், ரத்த நாளங்களும் இணைந்து இருதய அமைப்பு என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை உடலின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமானவை.

    • அதிகமான உடல் எடை காரணமாக இதயம் பாதிக்கப்படாமல் இருக்க உணவு மீதான அக்கறை அவசியம்.
    • இதயத்தின் செயல்திறனை சீராக்கி, அதில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

    உலக இதய தினத்தை நாம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந்தேதி கொண்டாடுகிறோம்.

    இதயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும், அதன் செயலிழப்பு மரணத்திற்கு வழிவகுக்கும், எனவே அனைவரும் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம்.

    இதயநோய் வராமலும், வந்து சிகிச்சை பெறுபவர்களும் இதய நலனை பாதுகாக்க சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வது நல்லது. அதன்மூலம் வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    அந்த வகையில்,

    • சீரான உடல் எடை பராமரிப்பு

    • முறையான உணவுப் பழக்கம்

    • அன்றாட உடற்பயிற்சிகள்

    • மதுப்பழக்கம் தவிர்த்தல்

    • புகைப் பழக்கம் தவிர்த்தல்

    • மன அழுத்தமில்லா வாழ்க்கை

    ஆகியவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

    இன்றைய சூழலில் அவரவர் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க முடியாமல் போகும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஒரு காரணமாக அமைகிறது. உடலின் சீரான எடையை பராமரிப்பதற்கு தினசரி உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கம் ஆகியவை அவசியம்.

    மருத்துவ ரீதியாக உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு ஹார்மோன்கள் காரணமாக உள்ளன. அவற்றுக்கெல்லாம் முறையான மருத்துவ சிகிச்சைகள் செய்துகொண்டால் உடல் எடையை தவிர்க்க முடியும். ஒருவருடைய உயரத்திற்கேற்ப இருக்க வேண்டிய உடல் எடையைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தால், உடல் எடை அதிகம் என்றும், 20 சதவீதம் அதிகமாக இருந்தால் உடற்பருமன் என்றும் குறிப்பிடப்படுகிறது.

    அதிகமான உடல் எடை காரணமாக இதயம் பாதிக்கப்படாமல் இருக்க உணவு மீதான அக்கறை அவசியம். அதிகக் கலோரி நிறைந்த உணவு, அதிக உப்பு, சர்க்கரை முதலியன இதய இரத்த நாள நோய்களைத் தூண்டக் கூடியவை. அவ்வகையில், இறைச்சி, வெண்ணெய், பாலாடை, தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய், வனஸ்பதி போன்ற தாவர எண்ணெய் வகைகளில் கொலஸ்ட்ரால் மிகுந்துள்ளது. அது, ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

    அதிகமாக இனிப்பு சாப்பிடுவது இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து தடித்து விட வழிவகுக்கிறது. அதே போல, அதிக உப்பு சேர்த்துக் கொள்வதும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படச் செய்கிறது. அதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் உருவாகின்றன. அன்றாடம் மனித உடலுக்கு 5 கிராம் உப்பே போதுமானது. ஆனால், நம் நாட்டில் ஒவ்வொருவரும் தினமும் 12 முதல் 15 கிராம் அளவு வரை உப்பை உணவு மூலம் பெறுகின்றனர்.

    பாஸ்ட் புட் கலாச்சாரமும் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அந்த உணவு வகைகளில் அதிகப்படியான கொழுப்பும், உப்பும் இருப்பதால் தான் உடலுக்கு தேவையான கலோரி மிக அதிகமாக கிடைத்து இதய நோய்களை உருவாக்குகிறது. மேலும் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் பாஸ்ட் புட் வகைகளில் நார்ச்சத்து பெரிதாக இருப்பதில்லை. அதுவும் ஜீரண கோளாறுகளை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும்.

    வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை உட்கொள்வது ரத்தத்தில் கொலஸ்ட்ரால், கொழுப்பு அளவு அதிகரிக்காமலும், இரத்தம் உறைந்து விடாமலும் பாதுகாக்கிறது. எனவே, தினமும் அவற்றை உணவில் காய்கறிகளோடு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் இதய சம்பந்தமான பாதிப்புகளை தடுக்கும் திறன் பெற்றவை என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், அவை இதயத்தின் இயக்கத்துக்கு நன்மை ஏற்படுத்துவது உண்மை.

    இதயத்தின் செயல்திறனை சீராக்கி, அதில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். மேலும், வாரத்தில் 5 நாட்கள் என ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் ஏரோபிக் வகை பயிற்சிகளான நடத்தல், ஓடுதல், படியேறுதல் உள்ளிட்ட இதர உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். அதன் மூலம், உடலில் உள்ள நல்ல கொழுப்பான எச்.டி.எல் அளவை இரண்டு மாதங்களுக்குள் 5 சதவீதம் வரை உயர்த்த முடியும் என மருத்துவ தெரிவித்துள்ளார்கள்.

    ஒவ்வொரு முறையும் உடல் எடையில் 2.5 கிலோ குறையும்போது நல்ல கொலஸ்டிராலின் அளவு உயர்கிறது. நல்ல கொலஸ்ட்ரால் உள்ள உணவை உட்கொள்வதும் மேற்கூறிய அளவு உடல் எடை குறைவதற்கு உதவும். அத்துடன், புகைப்பிடிப்பதை தவிர்ப்பதன் மூமாகவும், நல்ல கொலஸ்ட்ரால் அளவை கூட்ட முடியும். ஏனென்றால், புகைக்கும் போது உடலில் சேரும் ரசாயனம் நல்ல கொழுப்பின் அளவை குறைக்கிறது. புகைப்பழக்கத்தை தவிர்ப்பதாலும் எச்.டி.எல் அளவு சுமார் 10 சதவீதம் அதிகமாகும்.

    • சில உணவுகளான சர்க்கரை, கார்போஹைட்ரேட், உப்பு அல்லது காரமான மசாலாப் பொருட்கள் கூட இதயத் துடிப்பை அதிகரிக்கலாம்.
    • இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக இருப்பது ஒரு அடிப்படை மருத்துவ பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.

    மன அழுத்தம், பதட்டம், கவலை, காபின், உடற்பயிற்சி, அதிகப்படியான வெப்பம், தைராய்டு சுரப்புக் கோளாறுகள், சில மருந்துகள் மற்றும் உணவுகள் போன்றவை இதயம் வேகமாகத் துடிப்பதற்கான பொதுவான காரணங்களாகும்.

    பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த இதயத் துடிப்பு பாதிப்பில்லாதது. இருப்பினும், இதயத் துடிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்தால் அல்லது மார்பு வலி, மயக்கம் போன்ற பிற அறிகுறிகளுடன் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம். மன அழுத்தம், பயம் அல்லது மன உளைச்சல் ஏற்படும் போது உடலில் அட்ரினலின் என்னும் ஹார்மோன் வெளியிடப்பட்டு இதயத் துடிப்பை அதிகரிக்கும்.

    காபின், நிகோடின் மற்றும் ஆல்கஹால் போன்ற பொருட்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கலாம். சில உணவுகளான சர்க்கரை, கார்போஹைட்ரேட், உப்பு அல்லது காரமான மசாலாப் பொருட்கள் கூட இதயத் துடிப்பை அதிகரிக்கலாம்.

    உடற்பயிற்சி, அதிக வெப்பநிலை அல்லது ஈரப்பதம் ஆகியவை உடலின் இதயத் துடிப்பை அதிகரிக்க வழிவகுக்கும், ஏனெனில் உடல் குளிர்ச்சியடையவும், தசை செல்களுக்கு அதிக ஆக்சிஜனை வழங்கவும் இந்த மாற்றம் ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்பட்டால் (ஹைப்பர் தைராய்டிசம்), இதயம் வேகமாகத் துடிக்கும்.

    ஒழுங்கற்ற இதயத் துடிப்பு: இது இதயத்தின் தாளத்தில் ஏற்படும் ஒரு நிலை, இதில் இதயம் சீரற்ற அல்லது எதிர்பாராத விதமாக வேகமாகத் துடிக்கலாம்.

    இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்போது மார்பு வலி, தலைச்சுற்றல், மயக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக இருப்பது ஒரு அடிப்படை மருத்துவ பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.

    • இதய நோய் ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், நல்ல எண்ணம், நல்ல சுற்றுச்சூழல் ஆகியவை முக்கியமாகும்.
    • தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

    உலகில் புற்றுநோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களைவிட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள்தான் அதிகம். இதய நோய்களால் சராசரியாக ஆண்டுக்கு 1.70 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இது அடுத்த 10 ஆண்டுகளில் 2.30 கோடியாக உயரும் என்கின்றன மருத்துவ ஆய்வு முடிவுகள்.

    புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு, உடல் உழைப்பின்மை போன்றவற்றைத் தவிர்த்தாலே இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவீத மரணங்களைத் தவிர்க்க முடியும் என்கிறது உலக இதயக் கூட்டமைப்பு.

    ரத்தக் கட்டிகள் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதமும் ஏற்படலாம். அதேபோல் காலில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அந்தக் கட்டிகள் உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும். இதயத் தசைகளின் 'பம்பிங்' திறன் குறைவு, சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படவும் சாத்தியம் உண்டு.

    இதய நோய் ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், நல்ல எண்ணம், நல்ல சுற்றுச்சூழல் ஆகியவை முக்கியமாகும். நம் உடல் உறுப்புகளில் முக்கியமானது இதயம். மூளைச்சாவு அடைந்தவர்களுக்குக் கூட இதயம் வேலை செய்து கொண்டிருக்கும். எனவே, இந்த இதயத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் தலையாய கடமை.

    தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். தற்போதைய உணவு உள்ளிட்ட பல்வேறு பழக்கவழக்கத்தால் 15 வயது முதலே மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் செய்தால் மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். இடது கை, தோள் பட்டையில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் உணவுகள், அசைவ உணவுகளை தவிர்த்தல் நல்லது. 19 வயது நபருக்கு கூட பைபாஸ் சர்ஜரி செய்யும் நிலை உள்ளது. உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோய்களை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று இதய நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இதயம் இதமாக இருக்க 10 கட்டளைகள்

    1. உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

    2. வெள்ளைச் சர்க்கரையைத் தவிருங்கள்.

    3. கொழுப்புச் சத்து மிகுந்த உணவைத் தவிருங்கள்.

    4. புகைப் பழக்கத்தை கைவிடுங்கள்.

    5. மது அருந்தாமல் இருங்கள்.

    6. மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    7. உடல் பருமனைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.

    8. குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்குங்கள்.

    9. தினசரி 1 மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

    10. மனித நேயத்துடன் செயல்படுங்கள்.

    இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இதயத்தை இதமாக வைத்துக்கொள்ள முடியும் என்று இதய நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • காலை உணவு என்பது நாம் தவிர்க்கக் கூடாத அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
    • நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு நம்முடைய கெட்ட கொழுப்பினால் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்ய உதவுகிறது.

    இதயம் நம் உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு. பிறந்தது முதல் இறக்கும் வரையில் இடைவெளி இன்றி நமக்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ஒரு உறுப்பு. அந்த இதயத்தை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். இதய நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள், நம்மில் பலர் இதய நலத்திற்காக வாழ்வியல் மாற்றம் செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறும் பொழுது, எனக்கு நேரமில்லை, நிறைய வேலைகள் இருக்கிறது, என் உடல் நலத்திற்காக அதிக நேரம் என்னால் ஒதுக்க முடியவில்லை, இந்த வேலை எல்லாம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பல சமாளிப்பு வார்த்தைகளை கூறுவதை நாம் கேட்கிறோம். சரி, அதிக உடற்பயிற்சி, முழுமையான உணவு கட்டுப்பாடு, தியானம் மனம் தளர்த்தும் பயிற்சிகள் என்று பலவற்றையும் முறைப்படி கற்றுக்கொண்டு என்னால் பின்பற்ற முடியவில்லை என்று கூறும் நண்பர்களுக்காக, உங்கள் இதயத்தைக் காக்க நீங்கள் செய்யக்கூடிய சில சின்ன சின்ன மாற்றங்களை கீழ்வரும் கட்டுரையில் காணலாம்.

    காலை உணவு:

    காலை உணவு என்பது நாம் தவிர்க்கக் கூடாத அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் காலை உணவை நல்ல ஆரோக்கியமானதாகவும் குறைந்த அளவிலும் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் நாம் பொதுவாக சாப்பிடக்கூடிய அதிகமான மாவுச் சத்துள்ள பொருட்கள், எண்ணெயில் செய்த பொருட்கள், அதிக இனிப்பு கொண்ட பொருட்கள் போன்றவற்றை முழுமையாய் தவிர்க்க வேண்டும். காலை உணவில் முழு தானியத்தால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு உணவை அதாவது இட்லி, தோசை, சப்பாத்தி, முழு தானிய கஞ்சி, முழு கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு போன்று ஏதாவது ஒன்றினால் செய்த காலை உணவை சாப்பிடுவது நல்லது.

    மேலும் காலை உணவில் அதிகமான அளவில் நார்ச்சத்து இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு நம்முடைய கெட்ட கொழுப்பினால் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் அது ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து இதனால் இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் நீடித்த அழற்சிகள் உடலில் இருந்தால் அவற்றை சரி செய்யவும் நார்ச்சத்து உணவுகள் நமக்கு உதவுகின்றன. எனவே காலை உணவை ஆரோக்கியமானதாக நார்ச்சத்து நிறைந்ததாக முழு தானியம் கொண்டதாக குறைந்த அளவாக இருந்தாலும் எடுத்துக் கொள்வது சிறந்தது. அத்துடன் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    தனிமையை தவிர்த்தல்:

    இன்று பலர் வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளை செய்யக்கூடிய நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இது பலருக்கும் அனுகூலமாக இருந்தாலும் அது மனதின் ஆரோக்கியத்தை குறைக்க கூடியதாகவும் அதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்க கூடியதாகவும் இருக்கிறது என்பது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள். என்னுடைய வேலைகளை எல்லாம் நான் வீட்டிலிருந்தபடியே கணினி மூலம் செய்கிறேன் அதை தாண்டி சமூக ஊடகங்களில் ஆழ்ந்திருப்பதும் ஏதேனும் சமூக அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் அவற்றின் மீட்டிங்குகளையும் ஜூம், வாட்ஸ் அப், கூகுள் மீட் போன்றவற்றிலேயே நான் செய்து விடுகிறேன் என்று கூறுபவராகவும் நீங்கள் இருந்தால் இதை நீங்கள் நிச்சயமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இந்த முறையில் செயல்படும் பொழுது குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தனிமையான உணர்வும் இதனால் மன அழுத்தமும் ஏற்படும். இது இதய நலத்தையும் பாதிக்கிறது. எனவே அவ்வப்பொழுது சில மீட்டிங்குகளை நேரில் சென்று மனிதர்களை சந்திக்கும் விதமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நண்பருடன் சென்று காபி அல்லது டீ அருந்துவது, நண்பர்களுடன் மதிய உணவு வெளியில் சென்று உண்பது, மாலை நேரங்களில் ஒரு சிறிய நடைபயிற்சியை மேற்கொள்வது அந்த நேரத்தில் பலவிதமான மனிதர்கள் வந்து போகக்கூடிய இடங்களில் சிறிது நேரம் அமர்ந்திருப்பது, பொருட்கள் வாங்க அவசியம் இல்லை என்றாலும் கடைவீதிகளில் அல்லது மால்களில் சிறிது நடந்து விட்டு புதிய மனிதர்களையும் பொருட்களையும் பார்த்து வருவது போன்ற சிறுசிறு நிகழ்வுகளை நம் அன்றாட நடைமுறையில் புகுத்திக் கொண்டால் மனநலம் மட்டுமின்றி இதய நலனையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

    மனம் உடல் தளர்த்தும் தியானம்:

    மனம் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அலைநீளத்தில் செயல்படுகிறது. பெரும்பாலான நேரம் நம் மனம் பீட்டா அலையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே இந்த அலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது நம் உடல் தளர்வாக இருப்பதில்லை. நம் உடல் தசைகள் ஒரு கடினத் தன்மையுடன் தயார் நிலையில் இருந்து கொண்டிருக்கும். உடல் தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது தான் நம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் உடலின் தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது, அது அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக ரத்தஅழுத்தம் மற்றும் மூளை இதயத்திற்கான ரத்தக்குழாய்களில் அடைப்பு போன்றவற்றை தவிர்க்க உதவுகிறது. உடல் தளர்வாக இருக்க வேண்டும் என்றால் அது மனதினால் மட்டுமே முடியும். மனம் தளர்வாக இருக்கும் பொழுது மட்டுமே அதை உடலும் கற்றுக் கொள்கிறது. எனவே மனதைக் கொண்டு தான் உடலை தளர்த்த வேண்டும். மனதை தளர்த்த தியானம் நமக்கு உதவுகிறது.

    ×