search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brain Function"

    • மூளை மனதின் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒரு சிக்கலான உறுப்பு.
    • நினைவாற்றலும், சிந்திக்கும் திறனும் குறைகின்றன.

    வெறும் 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட மூளைதான், 60 கிலோ எடை கொண்ட மனிதனையே இயக்குகிறது. அதே மூளைதான், மனிதர்களை திறமைசாலிகளாகவும், புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும் மாற்றுகிறது. இதற்கு எதிர்மறையான விளைவுகளையும் மூளையே உண்டாக்குகிறது.

    இத்தகைய மூளை, எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கப்பெற்றும், ஒவ்வொருவரின் திறமைகளும், புத்திக்கூர்மையும் ஏன் மாறுபடுகிறது என்ற கேள்வி, எல்லோர் மனதிலும் எழும். இந்த கேள்விக்கு சுவாரசியமான பதில் இருக்கிறது.

     ஆம்..! மனித மூளை என்பது உடல் மற்றும் மனதின் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு சிக்கலான உறுப்பு. அது பெருமூளை, சிறுமூளை, மூளைத்தண்டு, தலாமஸ், ஹைபோதலாமஸ்... என பலவற்றை ஒருங்கிணைத்து இயங்குகிறது. இவை ஒவ்வொன்றுமே, ஒவ்வொரு செயல்பாடுகளை கொண்டுள்ளன. அதன் செயல்பாடுகளை, வேறு எதன் மூலமாகவும் ஈடுசெய்ய முடியாது. இதில் ஏதாவது ஒன்று முழுமையாக செயல்படாத பட்சத்தில்தான், மனிதர்களின் மூளைத்திறன் குறைய ஆரம்பிக்கிறது.

    நினைவாற்றலும், சிந்திக்கும் திறனும் குறைகின்றன. அதன் அடிப்படையில்தான், குழந்தைகளை நாம் நன்றாக படிப்பவர்கள், படிக்க சிரமப்படுபவர்கள் என தரம் பிரிக்கிறோம்.

    சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே, மூளைத்திறன் குறைவாக இருக்கும். ஆனால் சில குழந்தைகள், டிஜிட்டல் உலக மோகத்தினாலும், ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் இதுபோன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். அவர்களுக்கு போதிய நினைவாற்றல் இருக்காது. குழப்பமாகவே காணப்படுவார்கள். சிந்தனை திறனும், ஞாபக சக்தியும் அதிகமாக இருக்காது. இது தீர்வு காணக்கூடிய சிக்கல்தான். ஏனெனில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் மூளையும் வளர்ச்சி பெறும் என்பதால், சில பயிற்சிகள், விளையாட்டு முயற்சிகள் மூலமாக மூளைத்திறனை மேம்படுத்த முடியும்.

    இந்த முயற்சிகள் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை தூண்டி, அவர்களின் நினைவாற்றலையும், புத்திக்கூர்மையையும் செம்மையாக்க உதவுகின்றன.

    குழந்தைகளின் மூளை வளர்ச்சியை எவ்வாறு தூண்டுவது?, விளையாட்டு பயிற்சிகள் மூலமாக குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த முடியுமா?, ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?, மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் எவை?, சிக்கல்களை சமாளிக்க குழந்தைகளை பழக்குவது எப்படி?... இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்வதற்கு முன்பாக மூளை எப்படி இயங்குகிறது, அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கமாக அறிந்து கொள்வோம். இது, நம்முடைய புரிதல் திறனை வலுவாக்கும்.

     

    மனித மூளையின் செயல்பாடுகள்

    பெருமூளை

    பெருமூளைதான் மூளையின் மிகப்பெரிய பகுதி. சிந்திப்பது, முடிவெடுப்பது, மொழி அறிவு மற்றும் தன்னார்வ இயக்கம் போன்ற உயர்மட்ட அறிவாற்றல் செயல்பாடுகளை சிறப்பாக செய்யக்கூடியது. நான்கு வகையான மடல்கள் இந்த செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன.

    1. ப்ரண்டல் லோப்- தன்னார்வ இயக்கம், முடிவெடுத்தல், சிக்கலைத் தீர்ப்பது மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறை ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.

    2. பாரிட்டல் லோப்- தொடுதல், வெப்பநிலை மற்றும் வலி உள்ளிட்ட உடலில் இருந்து உணர்ச்சி தகவல்களை செயலாக்குகிறது.

    3. டெம்போரல் லோப்- செவி வழி தகவல், நினைவகம் மற்றும் மொழி புரிதல் ஆகியவற்றை செயலாக்குகிறது.

    4. ஆக்ஸிபிடல் லோப்- கண்கள் காணும் காட்சிகளை தகவல்களாக மாற்றுகிறது.

     சிறுமூளை

    அடுத்தது, சிறுமூளை. உடல் இயக்கம், சமநிலை, தோரணை மற்றும் செம்மையான இயக்க திறன்களை இது ஒருங்கிணைக்கிறது. `பைன் மோட்டார் ஸ்கில்ஸ்' என்பது, எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல், கத்தரித்தல், கைத்தட்டுதல், பல் துலக்குதல், ஷூ கயிறு கட்டுதல், புத்தகம் திருப்புதல்... போன்ற உடலுக்கு தேவையான செம்மையான இயக்கங்களை குறிக்கும்.

     மூளைத்தண்டு

    மூன்றாவதாக, மூளைத்தண்டு. இது அடிப்படை உயிர் காக்கும் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. மூளையை முதுகெலும்புடன் இணைக்கிறது. சுவாசம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், செரிமானம் மற்றும் விழுங்குதல் போன்ற தன்னிச்சையான செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. இது மூளைக்கும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான உணர்ச்சி மற்றும் இயக்க சமிக்ஞைகளுக்கான பாதையாகவும் செயல்படுகிறது.

     தலாமஸ்

    தலாமஸ் என அழைக்கப்படும் இது உணர்வு தகவல்களை பரிமாற்றும் 'ரிலே' (அஞ்சல்) நிலையமாக செயல்படுகிறது. உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்தப்படும் உணர்வுகளை (வாசனையைத் தவிர) ஆராய்ந்து, அதை பெருமூளையின் வெளிப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறது. நாம் தூங்கும்போதும், சுயநினைவின்றி இருக்கையிலும் இந்த தலாமஸ் இயங்கிக்கொண்டே இருக்கும்.

     ஹைபோதலாமஸ்

    இது மூளைக்குள் இருக்கும் ஆழமான பகுதி. இது உடல் இயக்கத்தின் `ஸ்மார்ட்' ஒருங்கிணைப்பு மையமாக செயல்படும். உடல் மற்றும் மூளை நரம்பு செல்கள் மூலமாக பகிரப்படும் ரசாயன சமிக்ஞைகளை உள்வாங்கி, உடல் இயக்கத்தை சம நிலையாக பராமரிப்பது இதன் முக்கிய வேலை.

    இப்படி மூளையின் பல்வேறு பகுதிகள் பல்வேறு பணிகளை செய்கிறது. அவை சரிவர நடைபெறாத போதும், மூளை திறன் குறையும் போதும் ஞாபக மறதி, குறைந்த புரிதல் திறன், சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாமல் திணறுதல்... போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோல, ஒருசில பயிற்சிகள், விளையாட்டுகளால் மூளைத்திறனை சிறப்பாக மேம்படுத்தி, அதீத நினைவாற்றல் பெற முடியும்.

    • மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
    • மனித உடலில் கொழுப்பால் ஆன முக்கிய உறுப்பும் மூளைதான்.

    மனித மூளையைப் பற்றி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் மூளையின் எடை 1.37 கிலோ. 60 சதவீதம் கொழுப்புகளால் ஆன ஓர் உறுப்பு. அத்துடன் மனித உடலில் கொழுப்பால் ஆன முக்கிய உறுப்பும் மூளைதான்.

    23 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் மனித மூளையிடம் இருக்கிறது. உடலில் உற்பத்தியாகும் ரத்தம் மற்றும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை மூளை எடுத்துக்கொள்கிறது. இன்னும் மூளையின் முக்கியத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம்.

     உடலின் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதிதான் நம்முடைய மூளை. தகவல்களை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் அதிக திறனை கொண்டுள்ளது மூளை பகுதி. மூளையின் அமைப்பானது 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று தனி தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. உடலில் அதிகமாக ஆற்றலை அதிகரிக்கக்கூடியது மூளை பகுதி தான்.

    வயது வந்தவர்களின் மூளையானது சுமார் 1.4 கிலோ கிராம் எடை அளவிற்கு இருக்கும். மனிதரின் உடல் எடையில் மூளையானது 2 சதவிகிதத்தினை கொண்டுள்ளது.

    பெண்கள் மூளையை விட 10% ஆண்களுடைய மூளையானது பெரியது. ஆண்களின் மூளையானது கிட்டத்தட்ட 1274 கன செ.மீ அளவிற்கு இருக்கும். சராசரியாக பெண்களின் மூளையின் அளவானது 1131 கன செ.மீ அளவு இருக்கும்.

    மூளையின் முக்கியப் பகுதியாக இருப்பது பெருமூளை. மண்டை ஓட்டின் முன் பகுதியில் அமைந்துள்ள மூளையின் முக்கிய பகுதியாக விளங்கும் பெருமூளையின் எடை 85 சதவீதம் இருக்கும். மூளையானது 75 சதவீதம் நீரினை கொண்டது. அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும் போது மூளையின் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.

    மனித மூளையானது சுமார் 18 வயதில் இருந்து வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். 25 வயதில் முழு முதிர்ச்சியை மூளை அடைகிறது. முதல் வருடத்தில் இதனுடைய வளர்ச்சி மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

     கழுத்து பகுதி, தலையின் தசைகள் மற்றும் நரம்புகளுடன் சேர்ந்து மூளையில் ஏற்படக்கூடிய ரசாயன எதிர்வினை காரணமாக தலைவலி பிரச்சனை உண்டாகிறது. மனித மூளையில் சுமார் 10,000 கோடி நியூரான்கள் உள்ளது.

    மனிதர்கள் தங்களுடைய மூளையில் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது தவறான விஷயம். உண்மையில் நாம் மொத்த மூளையையும் பயன்படுத்துகிறோம். இரவில் தூங்கும் பொழுது 10 சதவீதத்திற்கும் மேலாக மூளையை பயன்படுத்துகிறோம்.

    நீங்கள் கண்களால் பார்க்கக் கூடிய, மனதால் நினைக்கக்கூடிய, செய்யக்கூடிய எல்லா தகவல்களும் உங்களுடைய மூளையில் உள்ள நியூரான்களுக்கு இடையில் நடைபெறுகிறது. நியூரான்கள் தகவல்களை வேறுபட்ட வேகத்தில் நகர்த்துகிறது. நியூரான்களுக்கு இடையில் தகவல்கள் அதிகபட்சமாக 402 கிலோமீட்டர்கள் வேகத்தில் அனுப்பப்படுகிறது.

    மனித மூளையனாது 20 வயதிற்கு பிறகு சில நினைவு திறன மற்றும் அறிவாற்றல் திறனை இழக்க தொடங்குகிறது. நமக்கு வயது அதிகரிக்கும் போது மூளை பகுதியானது சிறியதாக தொடங்கும். மனித மூளையில் 160000 கிலோமீட்டர் நீளத்திற்கு ரத்த நாளங்கள் உள்ளது.

    மூளையானது நமது உடலில் 20 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் ரத்தத்தை பயன்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் இதயம் துடிக்கும் போது தமனிகள் உங்கள் ரத்தத்தில் 20 முதல் 25 சதவீதம் அளவிற்கு மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நிமிடமும் 750-ல் இருந்து 1000 மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியாக செல்கிறது.

    • இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.
    • இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும்.

    உடலில் ஓய்வு எடுக்காமல் வேலை செய்வது இதயம். அது இடைவிடாமல் துடித்துக்கொண்டிருப்பதால் நம் ஓட்டம் தடைபடாமல் இருக்கிறது. தாயின் கருவறையில் கருவானது 5 வார வளர்ச்சி பெற்றவுடன் இதயமாக உருவாகப்போகும் திசுக்கள் துடிக்கத்தொடங்கும்.

    கடைசி வரை இந்தத்துடிப்பு நிற்காது. இந்த திசுக்கள் குழாய் வடிவம் அடைந்து மடிக்கப்பட்ட நிலையில் இதயமானது உருவம் பெறுகிறது. கருவுக்கு உணவும் பிராண வாயுவும் அளித்து கழிவுப் பொருட்களை நீக்குவது தொப்புள்கொடியில் உள்ள ரத்தக் குழாய்களும் நஞ்சும்தான்.

    பிறந்த பிறகுதான் நாம் நுரையீரல் மூலம் சுவாசிக்கிறோம், பிராண வாயுவைப் பெறுகிறோம். அதுவரை ரத்தம் இதயத்தில் இருந்து கருவின் நுரையீரலுக்கு செல்லாமல் மாற்றுப் பாதையான டக்டஸ் ஆர்டீரியோஸிஸ் என்பதன் மூலம் சென்று தொப்புள்கொடி வழியாகச் சுத்திகரிக்கப்படுகிறது.

     ஆனால் குழந்தை பிறந்து முதல் மூச்சு எடுக்கும போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்கிறது. நுரையீரல் முதன் முறையாக விரியும்போது அந்த சின்ன இதயம் லேசாக திரும்புகிறது. அப்போது அந்த மாற்றுவழிப் பாதையான டக்டஸ் முறுக்கிக் கொண்டு மூடிவிடுகிறது. எத்தனை அழகான திறமையான வடிவமைப்பு இயற்கையால் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இதயம் ஒரு பம்ப். நமது ஜீவ நதிகளான ரத்த நாளங்கள் மூலம் நம் உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் உயிர் வாழத் தேவையானவற்றை அளிக்கிறது. இந்த பம்ப்பின் விசை இதயத் துடிப்புதான். இதை அளிப்பவை வேகஸ், சிம்பதடிக் என்கிற இரண்டு வகை நரம்புகள்தான். வேகஸ் துடிப்பைக் குறைக்கும், சிம்பதெடிக் அதிகரிக்கும். துடிப்பைத் தீர்மானிப்பவை மூன்று நோட்ஸ்.

    வீடுகளில் மின்தடை ஏற்படும்போது அவசரத் தேவைக்காக ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவற்றை வைத்திருக்கிறோம் அல்லவா? அதேபோல் ஒரு நோட் தடைபட்டால், அடுத்தது செயல்படத் தொடங்கும். ஆனால், அதே அளவில் இருக்காது. இவை மூன்றும் செயல் இழந்தாலும் இதயத் தசை தானாக நரம்புகளின் உதவியின்றிச் செயல்பட முடியும்.

    ஆனால், அப்போது இதயம் துடிப்பது நிமிடத்துக்கு 40 முறை மட்டுமே. தேவை அதிகரித்தாலும் துடிப்பு அதிகமாகாது. இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.

    மூளைதான் உணர்வுகளை ஏற்படுத்தி அவற்றின் தேவைக்குரிய மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், பயம், அதிர்ச்சி, ஆனந்தம் போன்ற பல உணர்வுகளுக்குத் தக்கவாறு இதயத்தை செயல்படச் செய்கிறது. இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும். மூளை செயலிழந்த நிலையை அடைந்தாலும் இதயத்தையும் மற்ற உறுப்புகளையும் தானம் செய்ய முடியும்.

    ×