search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pain"

    • 70 சதவீத பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.

    எங்கும் வேகம், எதிலும் வேகம் என பரபரக்கும் இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் காலை முதல் மாலை வரை ஒரே பதற்றம், பரபரப்பு. அறிவியலின் வளர்ச்சி நமது வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிவிட்டது. இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

    காலையில் பால் பாக்கெட் வராததில் தொடங்கும் டென்ஷன் திடீரென வேலைக்காரி லீவு போடுவது, குழந்தை சாப்பிட அடம் பிடிப்பது, பஸ்சில் கூட்டம் அதிகமாக இருபது என இப்படியே தொடர்கிறது. இதனால் ஏற்படும் மன உளைச்சல், அழுத்தம் நாளடைவில் உடலையும் பாதிக்கிறது. இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில் ஒன்றுதான் குடல் உளைச்சல் நோய். அவசரம், கவலை போன்றவைகளே இதற்கு முக்கிய காரணம்.

    இந்நோய் பாதித்தால் இரைப்பையில் புண் ஏற்படும். 70 சதவீத பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களையும் இது அதிகம் பாதிக்கிறது.

     அறிகுறிகள்:

    வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாப்பிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழித்தல், உணவுக்குழாய், நெஞ்சு ஆகியவற்றில் எரிச்சல், வயிறு உப்புசமாக இருப்பது போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். பெரும்பாலும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு உள்ள அறிகுறிகளே இந்நோய்க்கும் தெரிய வரும்.

    அடிவயிற்றில் வலி இருபதால் பலர் குடல்வால் நோய் என நினைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள். ஆனால் அதன் பின்னரும் வலி இருக்கும். சிலர் அமீபா கிருமியின் தாக்குதல் என நினைத்து அதற்கு மருந்து சாப்பிடுவார்கள். ஆனாலும் வலி தீராது. எனவே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

    எந்தெந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள் என்பதனை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது தொடர்ந்து பெய்து வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் இன்று காலை கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு சென்றனர்.

    இதன் காரணமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் இன்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது. காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்து வருவதால், எந்தெந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள் என்பதனை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அந்த பகுதிக்கு நேரில் சென்று முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் தற்போது 12 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமா னவர்கள் திரண்டதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர்.
    • தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    கடலூர்:

    சென்னையில் இருந்து புதுச்சேரி கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக மிக முக்கிய வழித்தடங்களாக இருப்பதால் கடலூர் நகரின் வழியாக 24 மணி நேரமும் வாகனங்கள் போக்குவரத்து இருந்து வருகின்றன. இதில் மிக முக்கியமாக கருதக்கூடிய பாலமாக கடலூர் அண்ணா பாலம் இருந்து வருகின்றன. இந்த பாலம் கெடிலம் ஆறு குறுக்கே இருந்து வருகின்றது. மேலும் கடலூர் நகரின் முக்கிய இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடலூர் மக்களின் மிக முக்கிய அத்தியாவசிய பாலமாக இருந்து வருவதால் அனைத்து வாகனங்களும் இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் நடுவே தற்போது குண்டு குழியுமாக இருப்பதோடு பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகள் பெயர்ந்து மேலே வந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் பாலத்தின் தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    மேலும் பாலத்தில் அதிகளவில் அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் நாளுக்கு நாள் சாலையில் பள்ளம் அதிகரித்து வருவதோடு வாகனங்கள் சாலை ஓரத்தில் செல்லும்போது பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில நேரங்களில் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்பட்டு வருவதையும் காண முடிகிறது .இந்த நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் சமயத்தில் அதிக அதிர்வலைகள் ஏற்படும் நேரத்தில் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக முக்கியமாக கருதக்கூடிய அண்ணா பாலத்தை உரிய முறையில் ஆய்வு செய்து பாலத்தின் தரமும் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழியுமானதை சரி செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சாலையின் மேலே உள்ள இரும்பு கம்புகளை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தேங்காய் விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    • கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, கா ன்சாபுரம், அத்தி க்கோவில், வ.புதுப்பட்டி, தாணிப்பாறை, மகாராஜபுரம், தம்பிபட்டி, சுந்தரபாண்டியம், கோ ட்டையூர், இலந்தைகுளம், சுரைக்காய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளையும் தேங்காய் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் பல்ேவறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தேங்காய் விளைச்சல் இருந்தும் விலை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டு தென்னையை வளர்த்து வருகின்றனர். தேங்காய் உற்பத்திக்கான செலவு, உர விலை ஆகியவை பன்மடங்கு உயர்த்துள்ள நிலையிலும் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறோம். இந்த நிலையில் தேங்காய் விலை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதாவது கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு காய் தேங்காய் ரூ.7.10 வரை விற்கப்படுகிறது. உற்பத்தி செலவு, கூலி ஆட்கள், உரம் உள்பட பல்வேறு செலவுகளை வைத்து பார்க்கும் போது நஷ்டம் தான் ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து தென்னை சாகுபடி செய்து வருகிறோம்.

    கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ. 140-க்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை போன்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இளைஞர்களைவிட, முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம் வருகிறது. இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக 'இறுக்கமான தோள்பட்டை' எனப்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' உள்ளது.
    ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டுவாதம் தொடர்பாக 2011-ம் ஆண்டு 'போன் அண்ட் ஜாய்ன்ட் டெகேட்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஐந்தில் ஒருவருக்கு மூட்டு வலி ஏற்படுவதாகத் தெரியவந்தது. இதை ஆமோதிக்கும் வகையில், இளைஞர்களைவிட, 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம் வருகிறது. இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக 'இறுக்கமான தோள்பட்டை' எனப்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' உள்ளது. இந்தியாவில் 2 அல்லது 3 சதவீதம் பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    தோள்பட்டையை சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு, இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படுகிறது. சிறுவர்கள் புத்தகப்பை மாட்டிக்கொள்வது முதல் தொழிலாளிகள் மூடை சுமப்பது வரை அடிப்படையாக இருப்பது தோளும், முதுகும்தான். ஆனால், நமது முதுகெலும்பு சுமை தாங்கும் எலும்பு அல்ல.

    நமது முதுகெலும்பு, முழங்கால் மூட்டை போல் கூடுதல் சுமையை தாங்கும் எலும்பு அல்ல. தசைகளும், தசைநார்களும் அதிகம் உள்ள இந்த எலும்பை நாம் தவறான முறையில் பயன்படுத்துகிறோம். அதனால், தோள்பட்டை விறைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. இதை எளிய பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி மூலம் சரிசெய்ய முடியும்.

    இதன் அறிகுறியாக, தோள்பட்டை வலி ஏற்பட்டு, கையைத் தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, இரவில் தூங்கும்போது எந்தப் பக்கம் வலி இருக்கிறதோ, அந்தப் பக்கம் படுக்கும் போது கடுமையான வலி போன்றவை ஏற்படும்.

    இறுக்கமான தோள்பட்டையால் பாதிக்கப்பட்டவர்களில், ஐந்து பேரில் ஒருவருக்கு மற்றொரு தோள்பட்டையிலும் இறுக்கம் ஏற்படலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தோள்பட்டைகளிலும் இறுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் 'ப்ரோசன் ஷோல்டர்' பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது. இதில் சரிசெய்ய முடியாதபட்சத்தில், சிறு துளை அறுவை சிகிச்சை (ஆர்த்ரோஸ்கோபி சர்ஜரி) மூலம் இறுக்கத்தை தளர்த்தி முழுமையாக குணப்படுத்த முடியும். சாதாரணமாக 7 முதல் 8 மணி நேரம் வரை கணினியில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து, வெளியில் சென்று நடந்து வருவது அவசியம். அத்துடன் தோள்பட்டைக்கு ஏதுவான நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்தும்போது, கையை முன் பின்னாக சுழற்றலாம். இதனால், தோள்பட்டைக்கு கூடுதல் பயிற்சி கிடைக்கும்.

    இதுதவிர யோகா, சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, சூரிய நமஸ்காரம் செய்தும் போது, தோள்பட்டைக்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்கிறது.

    வயிற்று வலி ஏற்படும் பகுதியை வைத்து என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். அதன் பின்னர் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம்.
    வயிறு வலிக்கும் உங்கள் உடல் உறுப்பில் உள்ள பிரச்னைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. நம் வயிறு ஈரல், கல்லீரல், மண்ணீரல், சிறு குடல், பெருங்குடல், மலக் குடல், கணையம், சிறுநீரகம், சிறுநீர் பை, விந்துப் பை, சின்னப்பை உள்ளிட்ட உறுப்புகள் அடங்கியுள்ளன. நம் வயிறு எந்த பகுதியில் வலிக்கின்றதோ, அப்பகுதியில் உள்ள உறுப்பில் பிரச்சனை உள்ளது என்று நாமே கண்டுபிடிக்கலாம்.

    * மேல் வயிறு வலது மூலையில் வலியாக இருந்தால் ஈரல் மற்றும் பித்தப் பை கல் சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம்.

    * மேல் வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்

    * அடிவயிறு வலது மூலை வலித்தால் அது அப்பண்டிஸ்



    * அடிவயிறு நடுவில் வலித்தல் சிறுநீர்ப்பை வீக்கம், கர்பப்பை பிரச்னைகள்

    * அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்

    * நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி இருந்தால் நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன் பிரச்னை

    * தொப்புளை சுற்றி வலி இருந்தால் ஃபுட் பாய்சனாக இருக்கலாம்

    இப்படி வலி ஏற்படும் பகுதியை வைத்து நாமே என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம். 
    இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர். ஆனால் கீழ் இடுப்பு வலி இருப்பவர்கள் சில வேலைகளை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.
    இன்றைய பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம். கால்களுக்கும், கைகளுக்கும் சரியான வேலை தருவதே இல்லை. உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.

    இவ்வாறு ஏற்படும் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எதனால் இடுப்பு வலி ஏற்படுகிறது என்று தெரியாமல், அதே வேலைகளை மீண்டும், மீண்டும் செய்து, வலி குறையவில்லை என குமுறுவார்கள்…

    இப்போது கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள் சில உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * நடப்பது, நிற்பது, உட்கார்ந்தே இருப்பது போன்ற வேலைகள் செய்ய வேண்டாம். கீழ் முதுகு வலி ஏற்பட்டால், முடிந்த வரை கால்களை நேராக நீட்டி படுத்து ஓய்வெடுங்கள். இடுப்பு உங்கள் கீழ் உடல், மேல் உடலை இணைத்து இருப்பதால் இதுப் போன்ற வேலைகள் வலியை அதிகரிக்கும்.

    * உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். ஆனால், இடுப்பு வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. எனவே, இடுப்பு வலி முழுமையாக குறையும் வாய் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

    * உடனே வலியை குறைக்கும் நிவாரணத்தை தேடுவதை நிறுத்துங்கள். இவை, அந்த நேரத்திற்கு மட்டுமே தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வை அளிக்காது.

    * ஒரே சிகிச்சையை பின்பற்ற வேண்டாம். 85% இடுப்பு வலி என்ன காரணத்தினால் ஏற்படுகிறது என்றே தெரியாமல் தான் ஏற்படுகிறது. எனவே, எங்கு பிரச்சனை, எதனால் பிரச்சனை என்றே தெரியாமல் நீங்களாக சுயமாக எந்த சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டாம்.

    * அதிக எடையை தூக்க வேண்டாம். மார்கெட், அலுவலகம், வீடுகளில் அதிக எடை தூக்க வேண்டாம். இது மேலும் இடுப்பு வலி அதிகரிக்க காரணமாகிவிடும்.

    * மீண்டும் மீண்டும் குனிந்து, குனிந்து வேலை செய்ய வேண்டாம். இது உங்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும்.

    * நீங்களாக சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைத்து தேய்ப்பது என எதையும் செய்துவிட வேண்டாம். இவை அந்த நேரத்திற்கு இதமாக இருந்தாலும். முழுமையான தீர்வு தரவல்லது இல்லை.

    * வலி சரியாகும் வரை ஓய்வெடுக்கிறேன் என வாரக் கணக்கில் நேரத்தை கடத்த வேண்டாம். ஒரு வாரத்திற்கும் மேலாக உங்களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
    ×