search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stomach pain"

    ஆலங்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 23). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதியடைந்து வந்துள்ளார். 

    சம்பவத்தன்று கார்த்திகேயனுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த ஆலங்குடி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜுவ்காந்தி 3-ம் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 70). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். 

    இந்நிலையில் முதுமை காரணமாக லட்சுமணனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவலறிந்த முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திலகவதி (வயது 24). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

    இந்நிலையில் திலகவதி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திலகவதி பரிதாபமாக இறந்தார். 

    இதையடுத்து அவரது உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீரகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குரும்பூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள வடக்குநல்லூரை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது66). விவசாயி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். 

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.
    வயிற்றுவலி மிக மோசமான வலிகளுள் ஒன்று. வயிற்றுவலிக்கான காரணத்தை சோதித்தறிந்து, அதற்கேற்ற சிகிச்சை பெறுவதே புத்திசாலித்தனம்.
    வயிற்றுவலி நம் மண்டையைப் பிராண்டும் மிக மோசமான வலிகளுள் ஒன்று. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்... என இருக்கும். உடனே அது வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா இல்லை வேறு ஏதேனுமா என நாம் குழம்புவோம். மருத்துவரிடம் போனால், `எவ்வளவு நாளா வயிற்றுவலி’ என ஆரம்பித்து, `நெஞ்சு எலும்புக்குக் கீழேயா, மார்பின் நடுப் பகுதியிலா... எங்கே எரிச்சல்?, கொஞ்சம் சாப்பிட தாமதமானால், பசி வரும்போது வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவார்.

    ஒருவேளை பித்தப்பைக் கல் இருந்தாலும் இருக்கலாம் என அனுமானித்து, ஸ்கேன் எடுக்கச் சொல்லும் மருத்துவர்களும் உண்டு. முன்பெல்லாம், ‘இது பித்தப்பை வீக்கமாக இருந்தாலும் இருக்கும்’ என சந்தேகப்பட்டால், மருத்துவர் வயிற்றைக் கைகளால் அழுத்திப் பரிசோதனை செய்வார். மூச்சை நன்கு இழுத்துவிடச் சொல்லி, நோயாளியின் வலதுபக்க விலா எலும்புகள் முடியும் இடத்துக்குக் கீழாக விரல்களால் அழுத்திப் பார்த்து, முடிவு செய்துவிடுவார். இதற்கு `மர்ஃபி சோதனை’ என்று பெயர். இன்றைக்கு அதைப் பலர் ஓரம்கட்டிவிட்டார்கள். நோயாளிகளை ஸ்கேனுக்கு அனுப்புகிறார்கள்.

    ஆனாலும், பித்தப்பைக் கல்லுக்கான காரணம் என்ன என்று மிகத் துல்லியமாக இன்றும் நவீன மருத்துவத்தால் நிர்ணயிக்க முடியவில்லை. நம் ஜீரண மண்டலத்தின் தன்மையே ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றால் குழம்பிப்போய் இருக்கிறது.

    அதோடு, ஜீரோ சைஸ் இடுப்பு வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருந்து உடல் மெலிவது, நார்ச்சத்து, மக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாதது, கொழுப்பைக் கூடுதலாகவும், நார்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுவது, வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பது, மெலடோனின் சுரப்புக் குறைவது... என பித்தப்பை அழற்சிக்கும், கல்லுக்கும் பல காரணங்கள். முதலில் வயிற்றுவலிக்கான காரணத்தை சோதித்தறிந்து, அதற்கேற்ற சிகிச்சை பெறுவதே புத்திசாலித்தனம்.

    வயிற்றுவலிக்கான காரணங்கள் :                                         

    * நடு வயிற்றிலும், வலது பக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப் புண்ணாகவோ, பித்தப்பைக் கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.

    * இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலியை உண்டாக்கலாம்.

    * நடு வயிற்றில் எரிச்சலுடன்கூடிய வலி, வயிற்றுப் புண் சார்ந்த வலியாக இருக்கலாம்.



    * விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின் வலியாக இருக்கலாம்.

    * பெண்களுக்கு அடி வயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடி வயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.

    இவற்றைத் தாண்டி, அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி... என வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிகளுக்குமே `ஒரு சோடா குடிச்சா, சரியாகிடும்’, என்ற அலட்சியமும், ‘ஓ பகவான் கூப்பிட்டுட்டார்’ என்ற பதற்றமும் ஆகாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது முக்கியம்.

    தாரமங்கலம் அருகே வயிற்று வலி காரணமாக தொழிலாளி வி‌ஷம் குடித்து உயிரிழந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர், சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 44). கயிறு திரிக்கும் தொழிலாளி. இவருக்கு சக்திவேல், சந்தியா என 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஆறுமுகம், வாழ்க்கையில் வெறுப்படைந்து அரளி விதையை அரைத்து குடித்துவிட்டார். உயிருக்கு போராடிய அவரை, அவரது தம்பி ஏழுமலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வயிற்று வலி ஏற்படும் பகுதியை வைத்து என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். அதன் பின்னர் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம்.
    வயிறு வலிக்கும் உங்கள் உடல் உறுப்பில் உள்ள பிரச்னைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. நம் வயிறு ஈரல், கல்லீரல், மண்ணீரல், சிறு குடல், பெருங்குடல், மலக் குடல், கணையம், சிறுநீரகம், சிறுநீர் பை, விந்துப் பை, சின்னப்பை உள்ளிட்ட உறுப்புகள் அடங்கியுள்ளன. நம் வயிறு எந்த பகுதியில் வலிக்கின்றதோ, அப்பகுதியில் உள்ள உறுப்பில் பிரச்சனை உள்ளது என்று நாமே கண்டுபிடிக்கலாம்.

    * மேல் வயிறு வலது மூலையில் வலியாக இருந்தால் ஈரல் மற்றும் பித்தப் பை கல் சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம்.

    * மேல் வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்

    * அடிவயிறு வலது மூலை வலித்தால் அது அப்பண்டிஸ்



    * அடிவயிறு நடுவில் வலித்தல் சிறுநீர்ப்பை வீக்கம், கர்பப்பை பிரச்னைகள்

    * அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்

    * நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி இருந்தால் நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன் பிரச்னை

    * தொப்புளை சுற்றி வலி இருந்தால் ஃபுட் பாய்சனாக இருக்கலாம்

    இப்படி வலி ஏற்படும் பகுதியை வைத்து நாமே என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம். 
    வாயுத் கோளாறு இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு ஏற்படுவதுண்டு. இதற்கு வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காணலாம்.
    வாயுத் கோளாறு இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணமாக அமைவது நாம் அன்றாடம் சாப்பிடும்போது, நீர் குடிக்கும்போது அதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுவது.

    அதே போல கரியமில வாயு சேர்த்த குளிர்பானங்கள் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் வாயு நம் வயிற்றினுள் சென்று சேர்கிறது. இப்படி கார்பனேடட் பானங்களைக் குடிப்பதாலும் வாய்வுக் கோளாறு ஏற்படுகின்றது.

    இதனை போக்கும் வீட்டு மருத்துவத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    * ஓமத்தை இளம் வறுப்பாக வறுத்து பொடியாக்கி பனை வெல்லம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் வாய்வு கலைந்து இரைச்சல் நிற்கும்.

    * தேங்காயை துருவி பால் எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் சரியாவதுடன் வயிற்றுவலியும் சரியாகும்.

    * கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை சுத்தம் செய்து, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து இடித்துச் சாறு பிழிந்து அதில் அரை டீஸ்பூன் அளவு சாற்றைக் குடித்து வந்தால் வயிறு உப்புசம் விரைவில் சரியாகிவிடும்.



    * மணத்தக்காளி இலைகளை நன்றாக அரிந்து மண்சட்டியில் போட்டு தாரளாமாக தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்ட அதை காலை மாலை என குடித்து வந்தால் கைகால்களில் வாய்வுத்கோளாறுகளால் ஏற்பட்ட வலிகள் நீங்கும்.

    * இளம் பிரண்டையை நார் உரித்து தேவையான அளவு காய்ந்த மிளகாய், புளி, வெள்ளைப்பூண்டு, தேங்காய், உளுந்து போன்றவற்றைச் சேர்ந்து நல்லெண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து மையாக அரைத்து மூன்றுவேளையும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு வாய்வுக் கோளாறு விலகும்.

    * காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், சுக்கு போன்றவற்றை சம அளவு எடுத்து நெய் விட்டு தனித்தனியாக வறுத்து பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்வுத் தொல்லை விலகும்.

    * இஞ்சியை இடித்துச் சாறு பிழிந்து சிறிது நீர் விட்டு பனைவெல்லம் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அதோடு சிறிதளவு ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் சேர்த்து கிளறி பாகு பதமானதும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வாய்வுத்தொல்லை விலகும்.

    * சுக்கு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை சம அளவு எடுத்து அதனுடன் சிறிது பெருங்காயம் மிளகு சேர்த்து வறுத்துப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் அளவு சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்.

    * சுக்கைப் பொடியாக்கி இரண்டு சிட்டிக்கை எடுத்துக் தேன் சேர்த்துக் குழைத்து காலை, மாலை என இரண்டுவேளைச் சாப்பிட்டால் வயிற்றுவலி சரியாகிவிடும்.

    * ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகளை வெந்நீரில் ஊற வைத்து குடியுங்கள், வயிற்று இரைச்சல் தெரியாமல் போய்விடும்.
    ×