search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stomach problems"

    வயிற்றுக் கோளாறுகள் ஏற்படச் சர்க்கரை நோயும் ஒரு முக்கிய காரணம். சர்க்கரை நோயால் என்ன மாதிரியான வயிற்று பிரச்னைகள் ஏற்படும், அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
    இதயநோய், பக்கவாதம், மாரடைப்பு என்ற பல்வேறு தொற்ற நோய்களுக்கு நுழைவு வாயிலாக இருப்பது சர்க்கரை நோய். சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கரை நோய், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைக் கசப்பாக்கிவிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்கள் அவ்வளவு எளிதில் ஆறாது. பார்வையும் கூட பாதிக்கப்படும். இதெல்லாம் எல்லோரும் அறிந்தது தான்.

    ஆனால், சர்க்கரை நோய் வயிற்றையும் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. வயிற்றுக் கோளாறுகள் ஏற்படச் சர்க்கரை நோயும் ஒரு முக்கிய காரணம். ஆனால், இதுபற்றி விழிப்புஉணர்வு இல்லாததால், வயிற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மருந்தகத்தில் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். சர்க்கரை நோயால் என்ன மாதிரியான வயிற்று பிரச்னைகள் ஏற்படும், அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

    பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு விதமான வயிற்றுபிரச்சனைகள் வரலாம். ஒன்று 'டயாபடிக் கேஸ்ட்ரோபேரசிஸ்' (Diabetic Gastroparesis) என்ற பிரச்சனை ஏற்படலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதபோது, அது வேகஸ் நரம்புகளைப் பாதிக்கும். இரைப்பையில், 'எவ்வளவு நேரம் உணவு இருக்கலாம்', 'எப்போது சிறுகுடலுக்கு அனுப்ப வேண்டும்' என்பதையெல்லாம் தீர்மானிப்பதும் செரிமானப் பணிகளை ஒழுங்குபடுத்துவதும் இந்த நரம்புகள்தான். இவற்றில் பாதிப்பு ஏற்படும்போது, அஜீரணக் கோளாறுகள், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வீக்கம், மேல் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.

    மற்றொரு பிரச்சனை, 'இன்டெஸ்டினல் எண்ட்ரோபதி' (Intestinal Enteropathy). இந்தப் பிரச்சனையும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காத நிலையில்தான் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும். சில நேரங்களில் இரண்டு பிரச்சனைகளும் மாறிமாறி வரலாம்.



    தீர்வு என்ன?

    வயிற்று உபாதைகளால் அவதிப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் மட்டும் பயன்தராது. அவற்றிலிருந்து விடுபட வேறுசில வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.

    * திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * மூன்று வேளைச் சாப்பிடும் உணவின் அளவை, ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடலாம்.

    * மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களைக் கைவிடவேண்டும்.

    * அரிசி போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவைக் குறைத்து நார்ச்சத்து, புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

    * ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியுடன் மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ளவேண்டும்.

    இவற்றைப் பின்பற்றுவதோடு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தால் மட்டுமே, அது நிரந்தர தீர்வாக அமையும்.
    வயிற்று வலி ஏற்படும் பகுதியை வைத்து என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். அதன் பின்னர் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம்.
    வயிறு வலிக்கும் உங்கள் உடல் உறுப்பில் உள்ள பிரச்னைக்கும் நிறைய தொடர்பு உள்ளது. நம் வயிறு ஈரல், கல்லீரல், மண்ணீரல், சிறு குடல், பெருங்குடல், மலக் குடல், கணையம், சிறுநீரகம், சிறுநீர் பை, விந்துப் பை, சின்னப்பை உள்ளிட்ட உறுப்புகள் அடங்கியுள்ளன. நம் வயிறு எந்த பகுதியில் வலிக்கின்றதோ, அப்பகுதியில் உள்ள உறுப்பில் பிரச்சனை உள்ளது என்று நாமே கண்டுபிடிக்கலாம்.

    * மேல் வயிறு வலது மூலையில் வலியாக இருந்தால் ஈரல் மற்றும் பித்தப் பை கல் சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம்.

    * மேல் வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்

    * அடிவயிறு வலது மூலை வலித்தால் அது அப்பண்டிஸ்



    * அடிவயிறு நடுவில் வலித்தல் சிறுநீர்ப்பை வீக்கம், கர்பப்பை பிரச்னைகள்

    * அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்

    * நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி இருந்தால் நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன் பிரச்னை

    * தொப்புளை சுற்றி வலி இருந்தால் ஃபுட் பாய்சனாக இருக்கலாம்

    இப்படி வலி ஏற்படும் பகுதியை வைத்து நாமே என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம். மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம். 
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயிற்றுக்கோளாறுகளை நீக்க வல்ல ஓம வாட்டரை வைத்திருப்பது நல்லது. இதில் பக்க விளைவுகள் இல்லை.
    சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வயிற்று உபாதை ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. ருசியான உணவு வகைகளை கண்டதும், வாயை கட்டாது, வயிறு நிறைய உண்டு விட்ட கஷ்டப்படுவது நம் பழக்கம். இதனால் நமக்கு வயிற்று வலி ஏற்படுகிறது.

    முதலில் இந்த வயிற்று வலி எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். நமது இரைப்பையின் உள் தசைச்சுவர்கள் எந்நேரமும் அலை போன்ற அசைவுகளை கொண்டு இருக்கும்.

    இதனை தசை இயக்கம் என்கிறார்கள். நாம் நம் உடலுக்கு ஒத்துவராத உணவுகளை உட்கொள்ளும் போது அது இரைப்பையை அடையும் நிலையில் இரைப்பை செயல்பாடு பாதிக்கப்படுகிறது.

    இந்த உணவு இரைப்பையின் அசைவை சிதைக்கிறது. இந்த சிதைவையே நாம் வயிற்றுவலியாக உணர்கிறோம். நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் உடனே டாக்டரை தேடி ஓடலாம் அல்லது 24 மணி நேரமும் திறந்து இருக்கும் மருந்து கடைகளை நாடி செல்லலாம். ஆனால் கிராமப்புற மக்கள் இதைப்போன்ற வசதிகளை எதிர்பார்க்க முடியாது.

    எனவே கைவசம் இவ்வாறு வயிற்றுக்கோளாறுகளை நீக்க வல்ல ஓம வாட்டரை வைத்திருப்பது நல்லது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. பக்க விளைவுகள் இல்லை. மருத்துவ குணங்கள் பல உடையது.

    செய்முறையும் எளிது. செலவும் மிக குறைவு. எனவே லாபம் அதிகமான தொழிலாக இதனை வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம். 
    ×