search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl suicide"

    • பிரேமா மன அழுத்தம் காரணமாக மருத்துவரை சந்தித்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • இந்நிலையில் நேற்று மாலை பிரேமா தொட்டில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது29). பால் வியாபாரி. இவருக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன் திருமணம் ஆகி பிரேமா (23) என்ற மனைவியும், இரட்டை பெண் குழந்தையும் உள்ளது.

    பிரேமா மன அழுத்தம் காரணமாக மருத்துவரை சந்தித்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது பிரேமா தொட்டில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார். தகவலறிந்ததும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி சம்பவ இடத்திற்கு சென்று பிரேமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குரும்பாபேட்டில் எலி மருந்து தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை குரும்பாபேட் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மனோகர். இவரது மனைவி சுமதி (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

    கடந்த சில நாட்களாக சுமதி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். டாக்டரிடம் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த சுமதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலிமருந்தை தின்று விட்டார். 

    இதனை அவர் தனது கணவரிடம் கூறவில்லை. மறுநாள் காலையில் சுமதி மயங்கி கிடப்பதை கண்டு அவரது கணவர் மனோகர் விசாரித்தார். அப்போது எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதை தெரிவித்தார். 

    உடனே சுமதியை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக  ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், அதன் பின்னர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் சுமதி அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுமதி பரிதாபமாக இறந்து போனார். 

    இதுகுறித்து அவரது உறவினர் தயாளன் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்த 9 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம் சிந்தலப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரும் நெல்லூர் மாவட்டம் ஜலதாங்கிய சேர்ந்த மாலினி (வயது 20) என்பவரும் கடந்த 9 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இருவரும் திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். மதுசூதனன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த மாலினி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மாலினியின் தந்தை தாமோதரன் திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், மகள் மாலினியை வரதட்சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்படுத்தி உள்ளார். அவளது சாவில் மர்மம் உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாலினிக்கு திருமணமாகி 9 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    பொன்னேரி அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணேஷ். சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. தற்போது சசிகலா கர்ப்பமாக இருந்தார்.

    கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்த சசிகலா திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அரூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த புதுகொக்க ராப்பட்டி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சித்ரா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. சித்ரா பூச்சி மருந்தை குடித்து விட்டார். அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    அவர் என்ன காரணத்துக்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை.

    இதுகுறித்து கோபிநாதம் பட்டி கூட்ரோடு இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 5 வருடத்துக்குள் சித்ரா இறந்து போனதால் வரதட்சணை கொடுமை காரணமாக அவர் இறந்தாரா? என்பது குறித்து அரூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார். 
    உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசர்போட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 30) இவர் செம்பியன் மாதேவி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சண்முக தீபிகா (வயது 21) இருவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் குழந்தை இல்லை.

    இதற்கிடையே சம்பத்தன்று வீட்டில் தனியாக இருந்த சண்முக தீபிகா அவரது அறையில் திடீரென தூக்குப்போட்டுக் கொண்டார் இதைப்பார்த்த அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு சண்முக தீபிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    திருமணமாகி 1½ ஆண்டு ஆகிய நிலையில் சண்முக தீபிகா தூக்குமாட்டி இறந்ததையடுத்து எலவனாசூர் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோட்டாட்சியர் சாருஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.
    ஒரத்தநாடு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவரது மனைவி ரேகா (30). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சக்திவேல், அடிக்கடி மனைவி ரேகாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரேகா, நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ரேகாவின் தாய் வேதவள்ளி பாப்பாநாடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

    கோவை அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்காநல்லூர்:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணாம் பாளையத்தை சேர்ந்தவர் ரவி கண்ணன். இவருக்கும் செண்பகம் (வயது 38) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் செண்பகத்துக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று இரவு செண்பகம் வழக்கம் போல தூங்கு வதற்காக சென்றார்.

    இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அறையில் செண்பகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட செண்பகத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை சாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் திலகர் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் சுபா (வயது30). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிலமாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலைக்கு முயன்றார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் சுபா மட்டும் வீட்டில் தனிமையாக இருந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கோரிமேடு போலீசில் சுபாவின் அண்ணன் அண்ணாமலை புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி ஒட்டப் பட்டியைச் சேர்ந்தவர் துரை (வயது 37). இவர் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். 

    இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெர்சின் என்ற மகன் உள்ளார். துரை வேலைக்காக வெளியூருக்கு சென்று விடுவதால் மோனிஷா தனது மாமனார், மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். 

    இந்த நிலையில் வேலைக்கு சென்ற துரை வீடு திரும்பி வந்ததும், மோனிஷா தனிக்குடித்தனம் செல்லலாம் என்று அவரிடம் கூறினார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோனிஷா நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதனை கண்ட மோனிஷாவின் மாமனார், மாமியார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து என்ன காரணத்திற்காக  தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை அருகே திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை ராக்கிப்பாளையம் அருகே உள்ள பாரதி அவன்யூவை சேர்ந்தவர் விஷ்ணுகுமார். இவரது மனைவி சோபா (வயது 33). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சோபா அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சோபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    மேலும் திருமணமான 4 மாதத்தில் சோபா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    தாராபுரம் அருகே கணவர் திட்டியதால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தாராபுரம்:

    தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரிமளா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று பரிமளா தனது குழந்தைகளை அடித்து உள்ளார். இதனை ரங்கநாதன் கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பரிமளா மனவேதனை அடைந்தார். தனது வீட்டுக்கு எதிரே இருந்த கழிவறைக்கு சென்ற பரிமளா அங்கு தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது பரிமளா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அலங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிமளா உடலை மீட்டு பிரே த பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிமளாவுக்கு திருமணமாகி 7 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    ×