என் மலர்
நீங்கள் தேடியது "young girl suicide"
திருவள்ளூர்:
ஆந்திர மாநிலம் சிந்தலப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரும் நெல்லூர் மாவட்டம் ஜலதாங்கிய சேர்ந்த மாலினி (வயது 20) என்பவரும் கடந்த 9 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவரும் திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். மதுசூதனன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த மாலினி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மாலினியின் தந்தை தாமோதரன் திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், மகள் மாலினியை வரதட்சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்படுத்தி உள்ளார். அவளது சாவில் மர்மம் உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாலினிக்கு திருமணமாகி 9 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த வேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணேஷ். சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. தற்போது சசிகலா கர்ப்பமாக இருந்தார்.
கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்த சசிகலா திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவரது மனைவி ரேகா (30). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சக்திவேல், அடிக்கடி மனைவி ரேகாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரேகா, நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரேகாவின் தாய் வேதவள்ளி பாப்பாநாடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
சிங்காநல்லூர்:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணாம் பாளையத்தை சேர்ந்தவர் ரவி கண்ணன். இவருக்கும் செண்பகம் (வயது 38) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் செண்பகத்துக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று இரவு செண்பகம் வழக்கம் போல தூங்கு வதற்காக சென்றார்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். அறையில் செண்பகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட செண்பகத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை சாரம் திலகர் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகள் சுபா (வயது30). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிலமாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலைக்கு முயன்றார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் சுபா மட்டும் வீட்டில் தனிமையாக இருந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோரிமேடு போலீசில் சுபாவின் அண்ணன் அண்ணாமலை புகார் செய்தார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை:
கோவை ராக்கிப்பாளையம் அருகே உள்ள பாரதி அவன்யூவை சேர்ந்தவர் விஷ்ணுகுமார். இவரது மனைவி சோபா (வயது 33). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சோபா அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சோபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் திருமணமான 4 மாதத்தில் சோபா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
தாராபுரம்:
தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரிமளா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று பரிமளா தனது குழந்தைகளை அடித்து உள்ளார். இதனை ரங்கநாதன் கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பரிமளா மனவேதனை அடைந்தார். தனது வீட்டுக்கு எதிரே இருந்த கழிவறைக்கு சென்ற பரிமளா அங்கு தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது பரிமளா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அலங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிமளா உடலை மீட்டு பிரே த பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிமளாவுக்கு திருமணமாகி 7 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
கோவை:
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் செய்யது அபுதாகீர். இவரது மனைவி சபானா பர்வீன் (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சபானா பர்வீனின் தந்தை விபத்தில் சிக்கினார். இதில் அவரது விரல்கள் சேதமடைந்தது. இதனால் சபானா பர்வீன் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சபானா பர்வீனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அடுத்த கொளத்துப்பாளையம் புது காலனியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சரண்யா (வயது 23). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். பின்னர் பூபதி வெளியே சென்று விட்டார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த சரண்யா மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூபதி வீட்டு வந்து கதவை திறந்தார். அப்போது அவரது மனைவி சரண்யா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.