search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    பொன்னேரி அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை

    பொன்னேரி அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணேஷ். சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது. தற்போது சசிகலா கர்ப்பமாக இருந்தார்.

    கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்த சசிகலா திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×