search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில்  திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    தூத்துக்குடியில் திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

    • பிரேமா மன அழுத்தம் காரணமாக மருத்துவரை சந்தித்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • இந்நிலையில் நேற்று மாலை பிரேமா தொட்டில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது29). பால் வியாபாரி. இவருக்கு கடந்த 1½ ஆண்டுக்கு முன் திருமணம் ஆகி பிரேமா (23) என்ற மனைவியும், இரட்டை பெண் குழந்தையும் உள்ளது.

    பிரேமா மன அழுத்தம் காரணமாக மருத்துவரை சந்தித்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது பிரேமா தொட்டில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார். தகவலறிந்ததும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி சம்பவ இடத்திற்கு சென்று பிரேமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் கவுரவ்குமார் தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×