search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
    X

    திருவள்ளூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

    திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்த 9 மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம் சிந்தலப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரும் நெல்லூர் மாவட்டம் ஜலதாங்கிய சேர்ந்த மாலினி (வயது 20) என்பவரும் கடந்த 9 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் இருவரும் திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். மதுசூதனன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த மாலினி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மாலினியின் தந்தை தாமோதரன் திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், மகள் மாலினியை வரதட்சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்படுத்தி உள்ளார். அவளது சாவில் மர்மம் உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாலினிக்கு திருமணமாகி 9 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    Next Story
    ×