search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

    உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசர்போட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 30) இவர் செம்பியன் மாதேவி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சண்முக தீபிகா (வயது 21) இருவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் குழந்தை இல்லை.

    இதற்கிடையே சம்பத்தன்று வீட்டில் தனியாக இருந்த சண்முக தீபிகா அவரது அறையில் திடீரென தூக்குப்போட்டுக் கொண்டார் இதைப்பார்த்த அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு சண்முக தீபிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    திருமணமாகி 1½ ஆண்டு ஆகிய நிலையில் சண்முக தீபிகா தூக்குமாட்டி இறந்ததையடுத்து எலவனாசூர் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோட்டாட்சியர் சாருஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×