search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

    காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி ஒட்டப் பட்டியைச் சேர்ந்தவர் துரை (வயது 37). இவர் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். 

    இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெர்சின் என்ற மகன் உள்ளார். துரை வேலைக்காக வெளியூருக்கு சென்று விடுவதால் மோனிஷா தனது மாமனார், மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். 

    இந்த நிலையில் வேலைக்கு சென்ற துரை வீடு திரும்பி வந்ததும், மோனிஷா தனிக்குடித்தனம் செல்லலாம் என்று அவரிடம் கூறினார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோனிஷா நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதனை கண்ட மோனிஷாவின் மாமனார், மாமியார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து என்ன காரணத்திற்காக  தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×