என் மலர்
நீங்கள் தேடியது "husband scold"
தாராபுரம்:
தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரிமளா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று பரிமளா தனது குழந்தைகளை அடித்து உள்ளார். இதனை ரங்கநாதன் கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பரிமளா மனவேதனை அடைந்தார். தனது வீட்டுக்கு எதிரே இருந்த கழிவறைக்கு சென்ற பரிமளா அங்கு தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது பரிமளா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அலங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிமளா உடலை மீட்டு பிரே த பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிமளாவுக்கு திருமணமாகி 7 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மதுரை:
மதுரை பாலமேடு செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 24). இவரது கணவர் கணேசன். இவர்களுக்கு தர்ஷன் (4) என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் நந்தினி சமீபத்தில் புதிதாக செல்போன் வாங்கினார். அதற்கு கணேசன் ‘எனக்கு தெரியாமல் நீ எப்படி செல்போன் வாங்கலாம்?’ என்று கண்டித்தார்.
இதையடுத்து கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நந்தினி சம்பவத்தன்று காலை மகன் தர்ஷனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக கணேசன் பாலமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகனை தேடி வருகிறார்.






