search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband scold"

    தாராபுரம் அருகே கணவர் திட்டியதால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தாராபுரம்:

    தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரிமளா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று பரிமளா தனது குழந்தைகளை அடித்து உள்ளார். இதனை ரங்கநாதன் கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பரிமளா மனவேதனை அடைந்தார். தனது வீட்டுக்கு எதிரே இருந்த கழிவறைக்கு சென்ற பரிமளா அங்கு தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கழிவறைக்கு சென்று விட்டு வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது பரிமளா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அலங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிமளா உடலை மீட்டு பிரே த பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிமளாவுக்கு திருமணமாகி 7 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    பாபநாசம் அருகே இரவில் வாலிபருடன் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பொன்மான் மேய்ந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 35). விவசாயி. இவரது மனைவி ராஜஸ்ரீ(32), இவர்களுக்கு அஜிலேஸ் (10) என்ற மகனும், அனுஜ்ஸ்ரீ(8) என்ற மகளும் உள்ளனர்.

    ராஜஸ்ரீக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே நீண்டநாளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    இந்நிலையில் ராஜஸ்ரீ, கடந்த ஜனவரி மாதம், அந்த வாலிபருடன் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சார்லஸ் மனைவியை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

    இதுபற்றி அவர் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜஸ்ரீயை மீட்டு, சார்லசிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த வாலிபரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி இரவு ராஜஸ்ரீ,  தனது செல்போனில் கள்ளக்காதலனுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதை சார்லஸ் கவனித்து விட்டார். இதனால் அவர் யாரிடம் இந்த இரவு நேரத்தில் பேசுகிறாய்? என்று கேட்டார். இதில் பயந்து போன, ராஜஸ்ரீ பீதியில் செல்போனை தூக்கி போட்டு விட்டு, கொல்லைப்புறமாக தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து சார்லஸ், செல்போனை எடுத்து பார்த்தபோது மனைவி, கள்ளக்காதலனுடன் பேசியது தெரியவந்தது. இதற்கிடையே ஏமாற்றி விட்டு தப்பி ஓடிய ராஜஸ்ரீ அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் பலன் இல்லாமல் போனது. இந்த நிலையில் அதே கிராமரத்தில் அழகர் என்பவரது திடலில் உள்ள மா மரத்தில் ராஜஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி சார்லஸ் பாபநாசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    செல்போனில் கள்ளக்காதலனுடன் பேசியதால் ராஜஸ்ரீ உயிரை மாய்த்து கொண்டார். இதனால் இன்று அவரது 2 குழந்தைகளும் தாயை இழந்து விட்டதே என்று கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    செல்போன் வாங்கியதாக கணவர் திட்டியதால் மனைவி குழந்தையுடன் மாயமானார்.

    மதுரை:

    மதுரை பாலமேடு செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 24). இவரது கணவர் கணேசன். இவர்களுக்கு தர்‌ஷன் (4) என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் நந்தினி சமீபத்தில் புதிதாக செல்போன் வாங்கினார். அதற்கு கணேசன் ‘எனக்கு தெரியாமல் நீ எப்படி செல்போன் வாங்கலாம்?’ என்று கண்டித்தார்.

    இதையடுத்து கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நந்தினி சம்பவத்தன்று காலை மகன் தர்‌ஷனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக கணேசன் பாலமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகனை தேடி வருகிறார்.

    தொட்டியம் அருகே கணவர் திட்டியதால் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். டிரைவர். இவரது மனைவி லதா (42). இவர்களுக்கு சூர்யா (12), பிருந்தா (10), சரண்யா (6) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் செல்வம் லதா இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வம் லதாவை திட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். 

    இதில் மனமுடைந்த லதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பக்கத்தில் உள்ள வயலுக்கு சென்று அங்கு அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த  அக்கம் பக்கம் உள்ளவர்கள் லதாவை தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×