search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old man suicide"

    • கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்

    தேனி:

    தேனி மாவட்டம் குச்சனூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி(71). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இருந்தபோதும் நோய்குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அழகர்சாமி விஷம் குடித்து சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 6 மாதங்களாக கோபால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • வலி தாங்க முடியாத கோபால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் புல்லலூர் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 67). இவர் கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வலி தாங்க முடியாத கோபால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆட்டோ மூலம் காஞ்காஞ்சிபுரம்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோபால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து காஞ்காஞ்சிபுரம்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுரண்டை வடக்குத்தி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொரிமுத்து கடந்த சில மாதங்களாக இவருக்கு காலில் புண் ஏற்பட்டுள்ளது.
    • நேற்று அவரது குடும்பத்தினர் அனைவரும் அம்பையில் நடைபெற்ற ஒரு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டனர்.

    நெல்லை:

    சுரண்டை வடக்குத்தி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சொரிமுத்து(வயது 70). கடந்த சில மாதங்களாக இவருக்கு காலில் புண் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அவரது குடும்பத்தினர் அனைவரும் அம்பையில் நடைபெற்ற ஒரு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த சொரிமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரண்டையை அடுத்த அச்சங்குன்றம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா
    • உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    சுரண்டையை அடுத்த அச்சங்குன்றம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா(வயது 45). கடந்த சில நாட்களாக இவர் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அவரது உறவினர்கள் பிச்சையா உடலை அங்குள்ள சுடுகாட்டில் தீவைத்து எரித்தனர். பாதி உடல் எரிந்து கொண்டிருந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த சுரண்டை போலீசார், பிச்சையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக அச்சங் குட்டம் கிராம நிர்வாக அலுவலர் அந்தோணி ராஜ் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர் மனமுடைந்து வீட்டில் அரளிவிதையை அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்(55). இவருக்கு கடந்த சில வருடங்களாக பிரசர் இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த லட்சுமணன் வீட்டில் அரளிவிதையை அரைத்து தின்று மயங்கினார்.

    கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அவரை பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில் அருகே மனைவி இறந்த துக்கத்தில் அவரது கல்லறையில் முதியவர் திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் காட்டாத்துறையை அடுத்த நெடியான்கோட்டை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 75). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். செல்லப்பனின் மனைவி முத்தாபரணம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    மனைவி இறந்ததில் இருந்து செல்லப்பன் மிகுந்த மனவேதனையுடன் இருந்து வந்தார். மேலும், யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். சில நாட்கள் வீட்டின் அருகில் உள்ள மனைவியின் கல்லறையின் அருகிலேயே தூங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வெளியே சென்ற செல்லப்பன் அதன் பிறகு வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. அப்போது, கல்லறையின் அருகே ரப்பர் ஷீட் தயாரிக்க பயன்படுத்தும் திராவகத்தை குடித்து விட்டு செல்லப்பன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே, அவருடைய மகன் ராஜேஷ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லப்பன் பரிதாபமாக இறந்தார்.

    மனைவி இறந்த துக்கத்தில் அவரது கல்லறை அருகில் முதியவர் திராவகம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    நைனார் மண்டபத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை நைனார் மண்டபம் நாகம்மன் நகர் முத்தமிழ் வீதியை சேர்ந்தவர் பாவாடை (வயது 65). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பாவாடை வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவர் தனது மனைவியுடன் வீட்டின் கீழ் தளத்திலும், அவரது மகன் கதிர்வேலு வீட்டின் மாடியிலும் வசித்து வந்தனர்.

    பாவாடைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தினால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி பாவாடையின் மனைவி அம்பிகா தனது மகளை பார்ப்பதற்காக கடப்பாக்கத்துக்கு சென்றார். 18-ந்தேதி பாவாடையின் மகன் கதிர்வேலு தனது திருமண நாளையொட்டி மனைவியுடன் ரெட்டியார் பாளையத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று கதிர்வேலு வீடு திரும்பிய போது பெற்றோர் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதையடுத்து கதவை திறந்து பார்த்த போது அங்கு மின் விசிறியில் வேட்டியால் தூக்குபோட்ட நிலையில் தனது தந்தை பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கதிர்வேலு தனது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு சென்ற அதே நாளில் பாவாடை தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி, உதவி சப்- இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் வானூர் அருகே அருவாப் பாக்கத்தை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 55). இவர் கோரிமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது மனைவி புஷ்பவேணி (50)யுடன் சஞ்சீவி நகரில் உள்ள பள்ளிக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்தார்.

    புஷ்பவேணி நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் வாரந்தோறும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பணி முடிந்து காத்தவராயன் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர சஞ்சீவி நகருக்கு சென்றார். அப்போது வீட்டில் புஷ்பவேணி சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் ஏட்டு வெங்கடேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அய்யங்குட்டி பாளையத்தில் நோய் கொடுமையால் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யங்குட்டி பாளையம் அமைதி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 71). இவரது மனைவி அகிலாம்பாள். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    ராமலிங்கத்துக்கு நோய் அதிகமானதால் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் நோய் கொடுமை அதிகமானதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கயிற்றால் ஊஞ்சலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது வீட்டுக்கு வந்த அவரது மகன் ரமேஷ் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தூத்துக்குடியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜுவ்காந்தி 3-ம் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 70). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். 

    இந்நிலையில் முதுமை காரணமாக லட்சுமணனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவலறிந்த முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவிந்தசாலையில் உடல்நிலை பாதிப்படைந்த முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கோவிந்தசாலை சின்னசந்து பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது60). இவருக்கு புஷ்பா என்ற மனைவியும் 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வயது முதிர்ச்சி காரணமாக முருகன் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் புஷ்பா வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இதற்கிடையே முருகனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு இருந்து வந்தது. அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைபெற அழைக்கும் போதேல்லாம் ஊசி போட்டுக்கொள்ள பயந்து முருகன் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டுவேலை செய்ய புஷ்பா சென்று விட்டார். மகள்களும், மகனும் வெளியே சென்றிருந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவதி அடைந்து வந்த முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் மாடியில் கேபிள் வயரால் தூக்குபோட்டு தொங்கினார்.

    வேலைமுடிந்து வீட்டுக்கு வந்த புஷ்பா மாடியில் சென்று பார்த்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குரும்பூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள வடக்குநல்லூரை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது66). விவசாயி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். 

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.
    கோவில் கட்டுவதற்காக வசூலித்த பணத்தின் கணக்கு- வழக்குகளை அந்த பகுதி பொதுமக்கள் முதியவரிடம் கேட்டதால் மனம் விரக்கி அடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 65). இவர் அந்த பகுதி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அங்கு ஒரு கோவில் கட்டி வருகிறார்.

    இந்த நிலையில் கோவில் கட்டுவதற்காக வசூலித்த பணத்தின் கணக்கு- வழக்குகளை அந்த பகுதி பொதுமக்கள் கேட்டனர். இதனால் மனம் விரக்தி அடைந்த ரத்தினசாமி நேற்று இரவு அவர் கட்டி வரும் கோவிலின் உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ரத்தினசாமி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய ரத்தினசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×