சுரண்டையில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை - பாதி எரிந்த உடலை போலீசார் மீட்டனர்

சுரண்டையை அடுத்த அச்சங்குன்றம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையாஉடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சுரண்டையில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை - பாதி எரிந்த உடலை போலீசார் மீட்டனர்
Published on

நெல்லை:

சுரண்டையை அடுத்த அச்சங்குன்றம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா(வயது 45). கடந்த சில நாட்களாக இவர் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அவரது உறவினர்கள் பிச்சையா உடலை அங்குள்ள சுடுகாட்டில் தீவைத்து எரித்தனர். பாதி உடல் எரிந்து கொண்டிருந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த சுரண்டை போலீசார், பிச்சையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அச்சங் குட்டம் கிராம நிர்வாக அலுவலர் அந்தோணி ராஜ் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com