search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுரையீரல்"

    • குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.
    • உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.

    சென்னை:

    காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளான 50 வயது நோயாளி ஒருவர், வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் பெருமூளை ரத்த நாள அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த 43 வயது பெண் ஒருவர் அண்மையில் மூளைச் சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது நுரையீரல் தானமாகப் பெறப்பட்டது.

    அங்கிருந்து 2 மணி நேரத்துக்குள் சென்னைக்கு நுரையீரல் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூரில் இருந்து வடபழனி வரை போக்குவரத்து தடைகளோ, நெரிசலோ இல்லாமல் உறுப்பை கொண்டுவர மாநகர போலீசார் பசுமை வழித்தட வசதி செய்து தரப்பட்டது.

    இதன் காரணமாக, விரைந்து கொண்டுவரப்பட்ட நுரையீரல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது அவர் நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழந்தை தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது.
    • குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்ட யம் பகுதியை சேர்ந்த 7 மாத குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்த குழந்தை தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை கோட்டயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்ததில், குழந்தையின் நுரையீரலின் கீழ் பகுதியில் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். அதனால் தான் குழந்தைக்கு தொடர் இருமல் ஏற்பட்டது மட்டுமின்றி, மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து குழந்தைக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தையின் வலது நுரையீரலில் சிவப்பு நிற சிறிய எல்.இ.டி.பல்ப் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து உடனடியாக அகற்றினர்.

    இதன்மூலம் அந்த குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றினர். குழந்தை விளையாடிய பொம்மை யில் இருந்து எல்.இ.டி. பல்ப் தெரியாமல் வாய் வழியாக உடலுக்குள் சென்றிருக்கலாம் என்றும், இதுபோன்ற நிகழ்வு மிகவும் அரிதாக நடக்கக்கூடியது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். உயிருக்கு ஆபத்தில்லாத விளையாட்டு பொருட்களையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • ஆண்டுதோறும் 7 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்றினால் ஏற்படும் குறைந்த சுவாச பாதை நோய்த்தொற்றுகளால் இறக்கின்றனர்.
    • குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி குறைகிறது.

    திருப்பதி:

    வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகைகளால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    உலகம் முழுவதும் சுத்தமான காற்று கிடைப்பது அரிய பொருளாக மாறி வருகிறது. இதன் விளைவாக நுரையீரலில் அதிக மாசு ஏற்படுகிறது. இது முக்கியமாக குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் வளரும் நிலையில் அவர்களின் சுவாசம் மற்றும் நரம்பு மண்டலங்களை சேதப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது. காற்று மாசுபாடு குறைந்த பகுதியில் உள்ள குழந்தைகளின் நுரையீரல் திறன் மேம்பட்டுள்ளது என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    காற்று மாசுபாடு அதிகமாக இருந்தால், குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி குறைகிறது. ஆஸ்துமா ஆபத்து அதிகரிக்கிறது. குழந்தை பருவத்தில் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் மாசுபட்ட காற்றை அதிகமாக சுவாசிப்பதால் அவர்களுக்கு முன்கூட்டியே குழந்தை பிறக்கலாம். குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

    உலகளவில் ஆண்டுதோறும் 7 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்றினால் ஏற்படும் குறைந்த சுவாச பாதை நோய்த்தொற்றுகளால் இறக்கின்றனர். குழந்தை பருவத்தில் அதிக அளவு காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு முதிர்ந்த வயதில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

    கடந்த 20 ஆண்டுகளில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    2002-04-ம் ஆண்டை விட 2016-19 ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    நல்ல காற்றின் தரம் உள்ள பகுதிகளில் இளைஞர்களின் நுரையீரல் செயல்பாடு மேம்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    மாசு பாதிப்பை சிறிதளவாவது குறைக்க முடிந்தாலும் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு குழந்தை பருவத்தில் இருந்து இளமைப் பருவம் வரை வளர்ச்சி காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

    நிமோனியா ஜுரம், வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளால் நுரையீரலில் ஏற்படும் தொற்று ஆகும். நிமோனியாவால் குழந்தைகள் மட்டுமா பாதிக்கப்படுகின்றனர்? வயதில் மூத்தவர் மற்றும் ஏனையோர் பாதிக்கப்படுகின்றனர்.
    இன்று (நவம்பர் 12-ந் தேதி) உலக நுரையீரல் அழற்சி தினம்.

    மனிதனின் வாழ்க்கையில் சுவாசமானது முக்கிய பங்கு வகிக்கிறது. மூச்சு நின்றுவிட்டால் ஒரு மனிதனின் வாழ்க்கை முடியப்போகிறது என்று அர்த்தம். எனவே மூச்சு வாங்குதல் அல்லது திணறல் ஏற்படுவது ஒருவருக்கு அபாய எச்சரிக்கையாகும். நாம் காற்றை சுவாசிப்பதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் நுரையீரல் மூலமாக உள்ளே செல்கிறது. இதற்கு நுரையீரலில் இரண்டு பாகங்கள் உள்ளன. இவை காற்றை நுரையீரலுக்குள் எடுத்துச்செல்லும் மூச்சுக்குழாய் மற்றும் காற்றில் இருந்து ஆக்ஸிஜன் உடலுக்குள் அனுப்பும் பலூன் போன்ற மெல்லிய பாகம் ஆகும். மூச்சுக்குழாய் பாதிப்பு ஏற்படும் நோய்கள் ஆஸ்துமா தொடர் மூச்சிறைப்பு நோய் போன்றவையாகும்.

    இந்த பிரச்சினைகள் இருமல் மூச்சிறைப்பு மற்றும் விசில் சத்தத்துடன் சுவாசம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். சுவாசக்குழாய் பிரச்சினைகள் பெரும்பாலும் தூசி, புகை, பலூன் போன்ற மெல்லிய பாகம் பெரும்பாலும் கிருமிகள் அல்லது நுரையீரல் அழற்சி நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றால் பாதிக்கப்படும். இவை நிம்மோனியா அல்லது நுரையீரல் அழற்சி நுரையீரல் வீக்கம் போன்றவை ஆகும். நுரையீரல் அழற்சி பாதிப்பு உள்ளவர்கள் சளியுடன் கூடிய இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகளோடு மருத்துவரிடம் வருவார்கள்.

    நுரையீரல் வீக்கம் உள்ளவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவார்கள். ஆக மொத்தத்தில் சுவாசப்பிரச்சினைகள் நுரையீரலை மையமாக வைத்தே வருகின்றன. பொதுவாக நுரையீரல் பிரச்சினைகள் குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும். இதில் மிக முக்கியமான ஒன்று நுரையீரல் அழற்சியாகும் (நிமோனியா ஜுரம்). பெரும்பாலும் நிமோனியாவால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். நிமோனியா ஜுரம், வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளால் நுரையீரலில் ஏற்படும் தொற்று ஆகும்.

    உலக சுகாதார அமைப்பின் அறிவிப்புகள், குழந்தைகள் இறப்பு விகிதம், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் அதிகமாக காணப்படுவதை பறைசாற்றுகிறது. இதை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 12-ந் தேதி ‘உலக நுரையீரல் அழற்சி தினம்’ ஆக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. நுரையீரல் அழற்சி குழந்தைகளை பாதிக்காமல் இருக்க இந்த அமைப்பு சில நிபந்தனைகளை பரிந்துரை செய்துள்ளது. அவை, 1) தாய்ப்பால் மற்றும் சுகாதாரமான உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பது. 2) நிமோனியா தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதுடன், கைகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எய்ட்ஸ் நோயாளிகள் பாதுகாப்பு அவசியம். 3) இது தவிர நிமோனியா பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு விரைவாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கிடைக்க செய்வது.

    நிமோனியாவால் குழந்தைகள் மட்டுமா பாதிக்கப்படுகின்றனர்? வயதில் மூத்தவர் மற்றும் ஏனையோர் பாதிக்கப்படுகின்றனர். இதில் நமக்கு வில்லனாக அமைவது பன்றி காய்ச்சல் ஏற்படுத்தும் நுரையீரல் தொற்று ஆகும். இந்த வருடம் இந்த காய்ச்சல் ஏற்படுத்திய பாதிப்பு சொல்லில் அடங்காது. இதைப்பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

    பன்றி காய்ச்சல் 2009-ல் மனிதனை முதன் முதலாக தாக்கியது. இது எச்1 என்1 என்ற வைரஸ் கிருமியால் வரும் ஒரு வகையான புளூ ஜுரமாகும். பாதிக்கப்பட்டவர்கள் ஜுரம், உடல் வலி, மூக்கில் நீர் வருதல், தொண்டை வலி, இருமல் மற்றும் மூச்சிரைப்பு போன்றவற்றால் அவதிப்படுவர். இது இருமல் மற்றும் தும்மல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.

    மற்றும் பாதிக்கப்பட்டவர் கைகளில் உள்ள வைரஸ்கள் கைப்பிடி மற்றும் கதவுகளில் தொற்றிக்கொள்கிறது. மற்றவர்கள் இந்த இடத்தை தொட்டு விட்டு தங்கள் மூக்கு அல்லது கண்களைத் தொடும் போதும் அவர்களை இந்த வைரஸ் தாக்குகிறது. பன்றி காய்ச்சல் எல்லோரையும் சமமாக தாக்குகிறதா? இல்லை. ஆஸ்துமா மற்றும் தொடர் மூச்சிரைப்பு நோய் போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்கள் மற்றும் சிறு நீரகம், கல்லீரல், இருதய நோயாளிகள், இதனால் தீவிரமாக பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் வென்டிலேட்டர் வரை சமயங்களில் செல்வதுடன், இறக்கவும் நேரிடுகிறது.

    இந்த எமனிடம் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படிமேற் கூறியவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் இதற்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். நோய் உள்ளவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வாயை மூடி கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுவது, கண், மூக்கு பகுதிகளை கைகளால் தொடாமல் இருப்பது அவசியம். பொது இடங்களை தவிர்ப்பது நல்லது.

    பாதிக்கப்பட்டவர்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    டாக்டர் ஆ.சுரேஷ், நுரையீரல் சிறப்பு மருத்துவர்

    ×