search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lungs problem"

    • செஸ்ட் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரும், ஆஸ்துமா, அலர்ஜி, டி.பி., நுரையீரல் சிறப்பு மருத்துவருமான டாக்டர் கே.பொம்முசாமி தொடங்கி வைத்தார்.
    • 15 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் செஸ்ட் ஆஸ்பத்திரி மற்றும் திருப்பூர் மைக்ரோ லேப் சார்பில் இலவச நுரையீரல் ஆலோசனை மற்றும் பொது மருத்துவ முகாம் சிறுபூலுவப்பட்டி பிரிவில் உள்ள திருப்பூர் மைக்ரோ லேப் வளாகத்தில் நடைபெற்றது. முகாமை திருப்பூர் செஸ்ட்ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரும், ஆஸ்துமா, அலர்ஜி, டி.பி., நுரையீரல் சிறப்பு மருத்துவருமான டாக்டர் கே.பொம்முசாமி தொடங்கி வைத்தார். டாக்டர் கபித் கான் நோயாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் 15 பேர் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.

    முகாமில் நுரையீரல் செயல்திறன் அறியும் பரிசோதனை, காசநோய்க்கான சளி பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை ஆகியவை இலவசமாகவும், மற்ற ரத்த பரிசோதனைகள் 50 சதவீத சலுகை கட்டணத்திலும், முழு உடல் பரிசோதனைகள் சிறப்பு சலுகை கட்டணத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

    எளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற இயலாமை, இருமும் பொழுது வெளி வரும் சிறு ரத்த கசிவு இவை நுரையீரலின் சிறிது அல்லது பெரிய பாதிப்பாக இருக்கக் கூடும்.
    உங்கள் நுரையீரல் நன்கு இல்லை என்பதைச் சொல்லும் சில அறிகுறிகள் :

    எளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற இயலாமை, இருமும் பொழுது வெளி வரும் சிறு ரத்த கசிவு இவை நுரையீரலின் சிறிது அல்லது பெரிய பாதிப்பாக இருக்கக் கூடும்.

    ஒரு காலில் மட்டும் வலி, வீக்கம்-இது உங்கள் காலின் ஆழ்ந்து உள்ள ரத்த நாளத்தின் ரத்த உறைவு அடைப்பின் காரணமாக இருக்கலாம். இதில் ஆபத்து என்னவென்றால் இந்த உறைவு உடைந்து சிறு துகல்களாக ரத்த ஓட்டத்தில் பயணம் செய்யலாம். அது நுரையீரலை அடைந்து அங்குள்ள ரத்த குழாயில் ரத்த ஓட்டத்தினை நிறுத்தி ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி போன்ற ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

    (சாதா சளி, ஜீரம் என்பதே மனிதனை தளர்வாக்கி விடுகின்றது. நுரையீரலில் சளி, கூடவே மனஉளைச்சல் இவை கிருமி தாக்குதலை அதிகப்படுத்தும். முறையான ஆன்டிபயாடிக் மருந்து எடுத்தே இதனை சரி செய்ய முடியும்.)

    மாடி ஏறி இறங்குவதில் மூச்சு வாங்குதல் இருந்தால் வயது காரணம் என நீங்களே அலட்சியமாய் இருந்து விடாதீர்கள். விடாது புகை பிடிப்பவர்களா? யார் எவ்வளவு சொன்னாலும் கேட்காதவரா? அடிக்கடி மருத்துவரிடம் உங்கள் நுரையீரலை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதையாவது செய்யுங்கள்.
    சளி, இருமலில் ரத்தம் இருந்தால் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகுங்கள்.

    இன்று உலகம் செய்தி மயமானதாகி விட்டது. சரியான செய்திகளும், தவறான செய்திகளும் மக்களை சென்றடைகின்றன. மருத்துவத்தினைப் பொறுத்த வரை ‘ஒரே மாதத்தில் சர்க்கரை நோயினை சரி செய்யலாம்’. ‘உணவுக் கட்டுப்பாடு இல்லாமலே 20 கி குறைக்கலாம் போன்ற தவறான கவர்ச்சி செய்திகள் மக்களை வெகுவாய் ஈர்க்கின்றன.

    மருத்துவ ஆய்வுகள் கூறும் செய்திகள் விஞ்ஞான ஆதாரத்தினை கொண்டதாக இருக்கும். எந்த முறை மருத்துவமாக இருந்தாலும் அது தீர ஆராயப்பட்டு மக்களை சென்றடைந்தால் நன்மையே.

    அது போல இருதய பாதிப்பினைப் பற்றி ஆய்வுகள் கூறும் பொழுது ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளே இருதய பாதிப்பினை ஏற்படுத்துவதில் முக்கிய காரணமாகின்றன என்று கூறுகின்றன. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கிருமி தாக்குதல், சிகரெட், சுருட்டு பிடித்தல் போன்றவையும் ரத்த குழாய் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    ×