search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரிசல்"

    • கட்டுப்படுத்த மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ் அரசுக்கு கோரிக்கை
    • கனிம வளங்களை எடுத்து செல்வதால் ரோடுகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    திருவட்டார் :

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் எம்.சான்ட், என்-சான்ட், ஜல்லி, கல் ஆகிய கனிம வளங்களை இரவு பகலாக கேரளாவிற்கு எடுத்து செல்கிறார்கள். கல்குவாரிகளை சுற்றி ஏராளமான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.

    இந்த கல்குவாரிகளில் இருந்து தினமும் இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் பாறைகள் உடைப்பதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் வீடுகள் உறுதிதன்மை இல்லாமல் நிற்கிறது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இரவு நேரங்களில் வீட்டில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிபடுகிறார்கள். அதிக எடையுடன் 16, 18 சக்கரம் உடைய கனரக வாகனங்களில் இரவு நேரங்களில் கனிம வளங்கள் எடுப்பதற்காக வரிசையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிக சத்தத்துடன் லோடு ஏற்றி செல்வதால் அந்த பகுதியில் உள்ள கல் குவாரிகளை சுற்றி குடியுருப்புகளில் வசிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி அதிகாலை வரை ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்து கொண்டோ சித்திரங்கோடு சந்திப்பில் இருக்கும் எடைமேடையில் ஒவ்வொரு வாகனமும் எடை போடுவதற்கு வரிசையில் நிற்பதால் அந்த பகுதியில் வீட்டில் உள்ளவர்க ளுக்கும், கனரக வாகன டிரைவர்க ளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிக எடையுடன் கனரக வாகனங்களில் கனிம வளங்களை எடுத்து செல்வதால் ரோடுகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    காலை, மாலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செல்லும் நேரங்களில் அதிக எடையுடன் கனரக வாகனங்கள் செல்வதால் பெரிய அளவில் போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் பல விபத்துக்கள் நடை பெறுகிறது. எனவே அந்த பகுதியில் செயல்படும் கல்குவாரிகள் அதிக சத்தத்துடன் வெடி வைத்து பாறைகள் உடைப்பதை தவிர்த்து சிறிய அளவில் வெடி வைத்து பாறைகள் உடைக்க வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து அதிக சத்தத்துடன் கற்களை உடைக்கும் கல்குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.
    • பாலத்தில் உள்ள விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்

    நாகப்பட்டினம்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.

    இந்த பாலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

    இந்த பாலம் வழியாக திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், மதுரை, விழுப்புரம், சென்னை, வேலூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதனால் இந்த சாலை போக்குவரத்து அதிகம் கொண்ட முக்கிய சாலையாக உள்ளது.

    இந்த நிலையில் முடிகொண்டான் ஆற்று பாலத்தில் இணைப்பு பகுதிகளில் உள்ள இரும்பு தகடுகள் சேதம் அடைந்து பாலத்தில் விரிசல் விழுந்து வருகிறது.

    இந்த விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில், பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்ய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சக்கரங்களுக்கு மேலே பெட்டியை தாங்கும் பகுதியான அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
    • எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் வழக்கம் போல் நேற்று மதியம் 12.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டது. செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை நாள்தோறும் கண்காணித்து வருவது வழக்கம்.

    நேற்றும் அவர்கள் செங்கோட்டைக்கு வந்த கொல்லம் ரெயிலை கண்காணித்தனர். அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 என்ற 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பெட்டியை தாங்கும் பகுதியான அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேற்கொண்டு அந்த ரெயில் இயக்கப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர். பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது.

    எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரெயில் விபத்து அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளாத நிலையில் அதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடிச்சட்டம் விரிசலை துரிதமாக கண்டுபிடித்த ஊழியர்களை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

    • ரெயிலானது செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது.
    • ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும்.

    நெல்லை:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்படுகிறது. வழக்கம் போல் இந்த ரெயில் கொல்லத்தில் இருந்து நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டது. ரெயிலானது செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை கண்காணித்தனர்.

    அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த அடிச்சட்டத்தில் (பெட்டியை தாங்கும் பகுதி) விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர்.

    பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது. எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.

    இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் ரெயில் கோர விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
    • மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி முட்டியங்கிணறு ஏடி காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இங்கு ஏராளனோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏ.டி. காலனியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எதற்காக திடீரென வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.

    இந்நிகழ்வில் ஒன்றிய பேரவை செயலாளர் எஸ் எம் பழனிச்சாமி, ஒன்றிய கழக பொருளாளர் சிவசாமி, யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி அன்பழகன், ராசப்பன் நிர்வாகிகள் காளிமுத்து, யுவராஜ், ராமசாமி, ராம்குமார், சையது, சாமிநாதன், நல்லசாமி, மூர்த்தி, கொண்டான் உள்ளிட்டோரும் பொதுமக்களும் இருந்தனர்.

    • இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர்.
    • தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    கடலூர்:

    சென்னையில் இருந்து புதுச்சேரி கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக மிக முக்கிய வழித்தடங்களாக இருப்பதால் கடலூர் நகரின் வழியாக 24 மணி நேரமும் வாகனங்கள் போக்குவரத்து இருந்து வருகின்றன. இதில் மிக முக்கியமாக கருதக்கூடிய பாலமாக கடலூர் அண்ணா பாலம் இருந்து வருகின்றன. இந்த பாலம் கெடிலம் ஆறு குறுக்கே இருந்து வருகின்றது. மேலும் கடலூர் நகரின் முக்கிய இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடலூர் மக்களின் மிக முக்கிய அத்தியாவசிய பாலமாக இருந்து வருவதால் அனைத்து வாகனங்களும் இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் நடுவே தற்போது குண்டு குழியுமாக இருப்பதோடு பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகள் பெயர்ந்து மேலே வந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் பாலத்தின் தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

    மேலும் பாலத்தில் அதிகளவில் அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் நாளுக்கு நாள் சாலையில் பள்ளம் அதிகரித்து வருவதோடு வாகனங்கள் சாலை ஓரத்தில் செல்லும்போது பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில நேரங்களில் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்பட்டு வருவதையும் காண முடிகிறது .இந்த நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் சமயத்தில் அதிக அதிர்வலைகள் ஏற்படும் நேரத்தில் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக முக்கியமாக கருதக்கூடிய அண்ணா பாலத்தை உரிய முறையில் ஆய்வு செய்து பாலத்தின் தரமும் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழியுமானதை சரி செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சாலையின் மேலே உள்ள இரும்பு கம்புகளை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • இந்த சாலையில் தினமும் அதிகளவு கணரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி கேரளாவுக்கு இரவு நேரத்தில் கொண்டு செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை நெடுஞ்சா லையில் ஏராளமான வாக னங்கள் செல்கிறது. கடந்த ஆண்டு புதியதாக தார் போடப்பட்டது.

    இதில் திருவட்டார் அரசு உயர்நி லைப்பள்ளி எதிரில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து பார்த்து ஆய்வு செய்து அவசரகதியில் தற்காலிக மாக அந்த பகுதியை தார் போட்டு சரி செய்தனர்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் காலையில் மீண்டும் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி எதிர் புறமிருந்து சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் ரோட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டை யொட்டியுள்ள பகுதியில் இருந்து தார்க்கலவை முழுமையாக பெயர்ந்து சிதறியது.

    "காங்கரை தேரி" எனப்ப டும் இந்த பகுதி மேடான பகுதியாகும். சாதாரணமாக வாகனங்கள் இந்த ரோட்டில் வரும் போது மேடான பகுதியாக இருப்பதால் மிகவும் சிரமத்துடன் ஊர்ந்து ஊர்ந்து செல்லும். அதிலும் அதிக பாரத்துடன் வரும் கனரக வாகனங்கள் சிலவேளைகளில் நகர முடி யாமல் திணறும். அவ்வாறு திணறும் லாரி உள்ளிட்ட கனரக வாகனத்தில் இருந்து சிறிய வாகனங்களில் பொருட்கள் மாற்றப்பட்ட

    பின்னரே கனரக வாக னங்கள் நகர்ந்து செல்லும். இவ்வாறு வாகனங்கள் அதிக அளவில் வரும்போது ரோட்டில் அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் தினசரி ஆயிரக்கணக்கான லோடு கனிம வளங்கள் இந்த ரோட்டின் வழியாக சென்றுவருவதால் ரோடு பாதிப்புக்குள்ளாகிறது

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவோடு இரவாக ஒப்பந்தக்காரர் தரப்பில் இருந்து வெடித்திருந்த சாலையின் ஒரு பகுதியில் உள்ள தார்க்கலவையை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றி விட்டு புதிய தார்க்கலவை போட்டு ரோடு ரோலர் இயந்திரத்தை ஓட்டிச்சென்றுள்ளனர். இதனால் தற்போது தார்க்கலவை போடப்பட்ட இடத்திலிருந்து, சாலையில் தார்க்கலவை செட் ஆகாமல் மீண்டும் வெடிப்பு ஏற்படத்துவங்கி விரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறுகின்றன. இரு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்குளாகின்றனர்.

    எனவே நெடுஞ்சா லைதுறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மே ற்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தரமான முறையில் சாலையை செப்பனிட முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த பகுதி வழியாக தான் தினமும் அதிகளவு கணரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி கேர ளாவுக்கு இரவு நேரத்தில் கொண்டு செல்கிறார்கள்.

    இப்பகுதி ரோட்டின் இருபுறமும் நடைபாதை ரோட்டில் இருந்து 1 முதல் 2 அடி பள்ளத்தில் உள்ளதால் பொதுமக்கள் ரோட்டின் இருபுறமும் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் ரோட்டை சரி செய்வதோடு ரோட்டின் இருபுறமும் வர்ண கற்கள் பதித்து நடைபாதை வசதி செய்யவும் நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • கோவை, பெங்களூர் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
    • பயணிகள் அவதி

    வேலூர்:

    வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே உள்ள நியூ டவுன் ரெயில்வே கேட் அருகே இன்று காலை தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது.

    இதனை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து சென்னையில் இருந்து கோவை சென்ற கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு நோக்கி சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மற்றும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    வாணியம்பாடி ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தண்டவாளம் சரி செய்யப்பட்டது. தொடர்ந்து நடுவழிகளில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன.

    • அம்மன்ஹட்டி பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
    • விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நஞ்சநாடு, இத்தலார் ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கல்லக்கொரை முதல் பி.மணிஹட்டி சாலை, இத்தலார் முதல் குந்தா சாலையில் சேதமடைந்த பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.மேலும் அம்மன்ஹட்டி பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் நிருப ர்களிடம் கூறியதாவது:-

    கூடலூர், தெய்வம லையில் ஏற்பட்டு உள்ள விரிசலை புவி யியல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் விதிமுறை களை மீறி கட்டப்பட்ட குடியிருப்பு களை அகற்றி விட்டு, அவர்களுக்கு மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இதுவரை ரூ.50 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது. விரிசல் ஏற்பட்ட 50 வீடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ், குந்தா தாசில்தார் இந்திரா உடனிருந்தனர்.

    ×