என் மலர்

    நீங்கள் தேடியது "affect"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து நெல் கொள்முதல் நிலையங் களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.
    • தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிச்சந்தர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும். தஞ்சாவூர் கோட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங் களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கக்கரை சுகுமாரன் கொடுத்துள்ள மனுவில், ஒரத்தநாடு சுற்று வட்டார பகுதியில் சில இடங்களில் சம்பா அறுவடை பணி தொடங்கிவிட்டது. எனவே தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    செல்லப்பன் பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, செல்லப்பன்பேட்டை கிராமத்தில் மழை நீர் செல்ல வழி இன்றி வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மழை பெய்யும் நேரங்களில் அந்தப் பகுதியில் உள்ள வயலுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகி பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வாய்க்காலை மீட்டு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதி கிராமங்களில் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
    • காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை மேற்கொண்டாலும் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளான ஆவுடையானூர், அரியப்பபுரம், நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி, பெத்தநாடார்பட்டி, குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், மேலப்பாவூர், கல்லூரணி, சிவ நாடானூர்,இடையர் தவணை உள்ளிட்ட கிராமங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதேபோன்று அங்கன்வாடி குழந்தைகளுக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் பள்ளி மாணவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளாக சேர்க்கப்பட்டு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் மட்டுமின்றி வாந்தி இருமல் போன்ற அறிகுறிகளும் உள்ளன. அதிகம் சோர்வடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

    காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை மேற்கொண்டாலும் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர். எனவே குழந்தைகளை வேகமாக தாக்கி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் சார்பில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சிறப்பு முகாம்களை அமைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    ×