search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் பகுதிகளில்  வேகமாக பரவி வரும் காய்ச்சல் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
    X

    பாவூர்சத்திரம் பகுதிகளில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் பள்ளி மாணவர்கள் பாதிப்பு

    • பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதி கிராமங்களில் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
    • காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை மேற்கொண்டாலும் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளான ஆவுடையானூர், அரியப்பபுரம், நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி, பெத்தநாடார்பட்டி, குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், மேலப்பாவூர், கல்லூரணி, சிவ நாடானூர்,இடையர் தவணை உள்ளிட்ட கிராமங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதேபோன்று அங்கன்வாடி குழந்தைகளுக்கும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் பள்ளி மாணவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளாக சேர்க்கப்பட்டு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் மட்டுமின்றி வாந்தி இருமல் போன்ற அறிகுறிகளும் உள்ளன. அதிகம் சோர்வடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

    காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை மேற்கொண்டாலும் குறைந்தது 3 அல்லது 4 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர். எனவே குழந்தைகளை வேகமாக தாக்கி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் சார்பில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சிறப்பு முகாம்களை அமைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×