என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வில்லியனூரில் இந்திய-திபெத்திய எல்லை காவல் படையினர் கொடி அணிவிப்பு
    X

    வில்லியனூரில் இந்திய-திபெத்திய எல்லை காவல் படையினர் கொடி அணிவிப்பு

    • புதுவையில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு இந்திய திபெத்திய எல்லை காவல் படையினர் வந்துள்ளனர்.
    • சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுவையில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு இந்திய திபெத்திய எல்லை காவல் படையினர் வந்துள்ளனர். அவர்கள் நேற்று இரவு வில்லியனூரில் நகரப் பகுதியில் கொடி அணிவிப்பு நடத்தினர்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலத்துங்கன், மத்திய தேர்தல் துறை அதிகாரிகள், மற்றும் காவல்துறை டிஐஜி சத்திய சுந்தரம், உத்தரவின் பேரில் ஐஜி மற்றும் சீனியர் எஸ். பி மேற்பார்வையில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொது அமைதியை பேணுதல், குற்ற செயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பதட்டமான ஓட்டு சாவடியை அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய காவல் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதன் முன்னோட்டமாக வில்லியனூர் பகுதியில் சட்டம் ஒழுங்கு காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் மேற்பார்வையில், வட்ட ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் இந்திய திபெத்திய எல்லை காவல் படையினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் சுல்தான்பேட்டை முதல் மாட வீதி, கோட்டைமேடு, கண்ணகி ஹை மாஸ் வழியாக சென்று கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×