search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.சி.டி.வி. காமிரா"

    • ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதி தெருக்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்தினர்.
    • புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் ரிப்பன் வெட்டி கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ரஹ்மானியபுரம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை குறிவைத்து முகமூடிக் கொள்ளையர்களால் தொடர் திருட்டு நடைபெற்றது. இந்த குற்றசம்பங்களை கட்டுப்படுத்தவும், நகரின் முக்கிய பகுதிகளில் காமிராக்களை பொருத்தவும், கடையநல்லூர் காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்டது.

    இந்நிலையில் ரஹ்மானியாபுரம் மேற்குப் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தக்வா ஐக்கிய கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் சார்பில் பொதுமக்களின் உதவியுடன் ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதியில் பல்வேறு தெருக்களில் 12 இடங்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்தினர்.

    கண்காணிப்பு காமிராக்கள் பயன்பாட்டிற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார், துணைத் தலைவர் யூசுப், செயலாளர் சதக்கத்துல்லா, துணைச் செயலாளர் செய்யது அலி, பொருளாளளர் செய்யது முஹம்மது, ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் ரிப்பன் வெட்டி கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, ஹைதர் அலி, யாஸர் கான் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அப்துல் மஜீத், மைதீன்அப்துல் மஜீத், திவான் மைதீன், நத்தகர் பாதுஷா மற்றும் போலீசார், பொதுமக்கள் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் கண்ணன், முருகன் உள்பட 28 நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    • நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலை மையில் நடந்தது.

    நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணை யாளர் சுகந்தி, பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், மே லாளர் சண்முகவேலு, சுகாதார அலுவலர் பிச்சை யா பாஸ்கர், உதவி பொறி யாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், முருகன், முகைதீன் கனி, அ.தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை கருப்பையா தாஸ், எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர்கான் உட்பட 28 உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர் கான் கூறுகையில், நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் தொடர்ந்து பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது.

    இதனை தடுக்கும் விதத்தில் நகரில் உள்ள முக்கிய வீதியான மணிக் கூண்டு, பஸ் நிலையம், மேலக்கடைய நல்லூர் பூங்கா, மாவடிக்கால், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நகராட்சி சார்பில் சி.சி.டி.வி. காமிராக் களை பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் காவல் துறை, நகராட்சி அதிகாரி களின் ஆலோசனைகளை பெற்று நகரின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. காமி ராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

    அதன் பின்னர் நகராட்சி பகுதிகளில் அதிக அளவு தெருநாய்கள் சுற்றி திரிவ தால் அதனை கட்டுப் படுத்துகின்ற விதத்தில் நகரில் ரூ.19 லட்சம் மதிப் பீட்டில் தெரு நாய்களுக்கு கருத்தடை மையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் உட்பட 50 தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் சிக்கினார்
    • தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் டெரிக் ஜங்ஷனில் வர்த்தக நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

    மறுநாள் கடைக்கு வந்தபோது மேஜை டிராயரில் இருந்த ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதையடுத்து சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் மேஜையை திறந்து பணத்தை எடுத்துச்செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் இம்மானுவேல், நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கொள்ளையனின் உருவம் சிக்கியது. அதை கைப்பற்றி விசாரணையை தொடங்கினார்கள்.

    விசாரணையில் வர்த்தக நிறுவனத்துக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது வடசேரி பகுதியை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்தனர். பிடிபட்ட நபரை நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்னர் வர்த்தக நிறுவனத்தில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரித்தபோது, வர்த்தக நிறுவனம் பூட்டுவதற்கு முன்பாகவே அந்த நிறுவனத்திற்குள் சென்று ஒருபுறத்தில் மறைந்து கொண்டதாகவும் கடை ஊழியர்கள் கடையை பூட்டி சென்ற பிறகு பணத்தை எடுத்து விட்டு மாடி வழியாக தப்பி சென்றதாகவும் கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • ஒருவன் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துள்ளான்.

    கருங்கல் :

    கருங்கல் அருகே உள்ள நடுத்தேரியை சேர்ந்தவர் அனீஸ்பிரபு. இவர் கருங்கலில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சுஜாதா (வயது 38). இவர் வீட்டில் இருந்து தங்களது ஓட்டலுக்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்றும் ஓட்டலுக்கு சென்று விட்டு சுஜாதா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த பேப்பரை சுஜாதா வாங்கி பார்த்த நேரத்தில், ஒருவன் அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துள்ளான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜாதா, திருடன்...திருடன்... என கூச்சலிட்டார். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். ஆனால் அதற்குள் 2 வாலிபர்களும் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசில் சுஜாதா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து நகையை பறித்துச்சென்ற 2 பேரை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.
    • மோட்டார் சைக்கிளை 2 பேர் திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கடை வீதியில் நிறுத்தப்படும் பைக்குகள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் விலை உயர்ந்த பைக்குகளை மர்ம நபர்கள் திருடி செல்கிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. திருடர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து பைக் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    நாகர்கோவில் புதுகுடியி ருப்பு டிஸ்லரி ரோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ஜெயின் ஜெனிஸ் (வயது 42) காங்கிரஸ் பிரமுகர். இவர் தனது விலை உயர்ந்த பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. இதையடுத்து மரிய ஜெயின் ஜெனிஸ் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது மரிய ஜெயின் ஜெனிஸ் மோட்டார் சைக்கிளை 2 பேர் திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மோட்டார் சைக்கிளை திருடி யது நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வேறு வழக்கில் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது
    • கடந்த 30-ந்தேதி காரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி டென்னிசன் ரோடு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருடப்பட்டது. இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கார்திருட்டு தொடர்பாக களியக்காவிளையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தவுடன் திருடப்பட்ட காரையும் மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட மணிகண்டனி டம் போலீசார் விசாரணை நடத்திய போது கார் திருட்டு வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மணிகண்டன் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளையை சேர்ந்த ஜெயன் (வயது59) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் ஜெயனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெயனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருவனந்தபுரம் கருமானூர் பகுதியை சேர்ந்தவர் சுஜின்(33). இவரது சொகுசு காரை நித்திரவிளை பணமுகம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அனில்மோன் இடத்தில் நிறுத்தியிருந்தார். கடந்த 30-ந்தேதி காரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து நித்திரவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அந்த கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தநிலையில் காப்புக்காடு பகுதியில் திருடப்பட்ட கார் நின்றதை பார்த்த பொதுமக்கள் அந்த வந்தவர்களை பிடிக்கமுயன்றனர். அப்போது காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

    ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பாறசாலை இஞ்சிவிளை பகுதியை 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    இந்த கடத்தல் வழக்கில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அஜித் 21 சரத் 20 மேலும் ஒரு 16 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • புகாரில் தன்னுடைய மகன் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும்

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட கீழ வண்ணான்விளையை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கோபி (வயது 21). இவர் அந்த பகுதியில் நர்சரி கார்டன் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 6-ந்தேதி கோபி திடீர் என்று மாயமானார். அன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களிலும் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் டி.சி.நகர் பகுதியில் முட்பு தர்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் நேற்று இரவு ஆண் பிணம் கிடப்ப தாக கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்தது கடந்த 6-ந்தேதி மாயமான கீழ வண்ணான்விளையை சேர்ந்த கோபி என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை ரவி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னுடைய மகன் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கோபி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் அப்பா, அம்மாவை கவனித்து கொள்ளுமாறும் எழுதி இருந்தார்.

    அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து தனது சகோதரருடையது இல்லை என்று கோபியின் அண்ணன் தெரிவித்துள்ளார். இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கோபியின் மோட்டார் சைக்கிளும், செல்போனும் மாயமாகியுள்ளது.

    கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கோபிக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த நபரை போலீசார் தேடினார்கள். அவரும் தலைமறைவாகியுள்ளார். இன்று காலையில் கோபி பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கோபியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. பிரேத பரிசோதனையில் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்ற விபரம் தெரியவரும்.

    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    சிவகாசி

    சிவகாசி சிந்துராஜபுரம் தேவி நகர் பகுதியில் பத்மநாபன் என்பவர் வீடு உள்பட 4 வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது சிவகாசி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை உடனடி யாக பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், சிவகாசி டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி, சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீ சார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் 2 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூதப்பாண்டியில் கைவரிசை
    • போலீசார் தேடுதல் வேட்டை

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே ஞாலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஞாலம் ஊராட்சியில் வரி வசூலிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் தனது மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதையடுத்து சுரேஷ் அக்கம்பக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளை தேடினார். எங்கு தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் சுரேஷ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுரேஷ் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அதன் அடிப்படையில் விசா ரணை நடத்தப் பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் நாகர்கோவில் ரெயில்வே  ரோடு பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோல் வடசேரியைச் சேர்ந்தவர் மைதீன் ராஜித் (வயது 48) இவர் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள நகைக்கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தபோது மர்மநபர்கள் அதை திருடி சென்று விட்டனர்.இது குறித்தும் கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது போன்ற காட்சி சிக்கியது. அதன் அடிப்படையில் போலீசார் பறக்கை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பண்டிகை காலத்தை யொட்டி அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து இரவு ரோந்து பணியை தீவிரப் படுத்துவதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே அந்த பகுதி களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
    • பழைய கொள்ளையர்கள் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த படங்களை அறி விப்பு பலகையாக பொது இடங்களில் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    நாகர்கோவில், அக்.13-

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து நாகர்கோவில் நகரப் பகுதி களில் காலை, மாலை நேரங் களில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வரு கிறது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான பொதுமக்கள் குடும்பத்தோடு கடை வீதிகளுக்கு வந்து செல் கிறார்கள். இதனால் வடசேரி பஸ்நிலையம், மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் செயின் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அண்ணா பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் நீண்ட நாட்களாக பூட்டி கிடக்கிறது. பண்டிகை காலமான தற்பொழுது கூட்டம் அலைமோதி வரும் நிலையில் அங்கு போலீசாரை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை தீவிரபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை யாக உள்ளது.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவடிக்கையாக அண்ணா பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை திறந்து அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுமார் 8 கேமிராக்கள் பஸ் நிலை யத்தில் உள்ளது. இதில் ஒரு சில கேமராக்கள் செயல் படாமல் பழுதடைந்து உள் ளது.

    எனவே பழுதடைந்துள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புற காவல் நிலையம் திறப்பதுடன் சி.சி.டி.வி. கேமிராக்கள் சரி செய்யும் பட்சத்தில் குற்ற சம்பவங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதே போல் வடசேரி பஸ் நிலையத்தில் தற்போது புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    பண்டிகை காலத்தை யொட்டி அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து இரவு ரோந்து பணியை தீவிரப் படுத்துவதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே அந்த பகுதி களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

    பழைய கொள்ளையர்கள் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த படங்களை அறி விப்பு பலகையாக பொது இடங்களில் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    • ரங்கம்மாள் கோவில் வீதியில் மோட்டார் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
    • லேப்டாப், 2 செல்போன்கள், ரூ. 4 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றனர்.

    கோவை:

    கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 33). இவர் பாப்பநாயக்கன்பாளையம் ரங்கம்மாள் கோவில் வீதியில் மோட்டார் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ரமேஷ்குமாரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

    அவர் கடைக்கு சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த ஒரு லேப்டாப், 2 செல்போன்கள், ரூ. 4 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மர்ம நபர் தனது அடையாளம் தெரியாமல் இருக்க கடையில் இருந்த சி.சி.டி.வி காமிராவை உடைத்து சென்றார்.

    இது குறித்து ரமேஷ்குமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடையின் பூட்டை உடைத்து லேப்டாப், செல்போன்களை திருடி சென்றது அம்மன்குளம் ஏரிமேட்டை சேர்ந்த முருகன் (எ) குண்டு முருகன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×