search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையநல்லூர்"

    • தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த லட்சுமணன் செருப்பு தைக்கும் இரும்பால் மாரியப்பனின் மார்பில் குத்தினார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). அதே பகுதியில் வசிப்பவர் லட்சுமணன் (50).

    நேற்று மாலை மாரியப்பன் தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக லட்சுமணன் வீட்டுக்கு அருகே சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    தகராறு முற்றவே, ஆத்திரம் அடைந்த லட்சுமணன் செருப்பு தைக்கும் இரும்பால் மாரியப்பனின் மார்பில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மாரியப்பனை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகை, ரூ.2,500 மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதுத் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன்.

    கடந்த வாரம் 13-ந்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு கணவன்-மனைவி 2 பேரும் பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்கு சென்றார்.

    தொழுகை முடிந்த பிறகு இரவு வீட்டுக்கு வந்த போது, 10 பவுன் நகை, ரூ.2,500 மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சுதாகர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டது கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தீன் முகமது பாதுஷா (வயது 20) என்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அந்த வாலிபரிடம் இருந்த அனை த்து பொருள்களையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    • துராப் சைபுல்லா ஹாஜா தர்கா கந்தூரி விழாவையொட்டி கடந்த 14-ந் தேதி பிறைக்கொடியேற்றம் நடைபெற்றது.
    • கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் பஜார் சாலையில் உள்ள துராப் சைபுல்லா ஹாஜா தர்கா கந்தூரி விழாவையொட்டி கடந்த 14-ந் தேதி பிறைக்கொடியேற்றம் நடைபெற்றது. 7-வது நாளான நேற்று கொடி ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கி அலங்கரிக்கப்பட்ட யானையில் பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பெரிய தெரு, புதுத்தெரு, பஜார்ரோடு, தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு இடங்கள் வழியாக யானை மீது பச்சை களை ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து சந்தனக் கூடும் நடைபெற்றது.

    இரவு 10 மணிக்கு தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ராத்திப் மஜ்லீஸ் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சந்தனம் பூசுதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மவுலதுசரீப் ஓதி நேர்ச்சை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஜமாத் தலைவர் பசுலுதீன், தர்கா பரம்பரை ஹக்தார் அனீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நேற்று காலை சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது.
    • விரதமிருக்கும் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் வழிபாடு செய்து நேர்த்தி கடனை செலுத்துவர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 10 நாள்கள் நடைபெற்றது. இவ்விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருமலைக்கோவில் மலையடிவாரமான வண்டாடும் பொட்டலில் 17-ந் தேதி பெருந்திருப்பாவாடை நடைபெற்றது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று காலை சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. தமிழகத்தில் முருகன் கோவில்களில் ஒன்றான பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் விரதமிருக்கும் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் வழிபாடு செய்து நேர்த்தி கடனை செலுத்துவர். இந்தாண்டு ஏற்கெனவே மழை பெய்து தேர் செல்லும் பாதை ஈரமான நிலையில் இருந்த போதும் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு சரணம் நேர்த்திக் கடனை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதி தெருக்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்தினர்.
    • புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் ரிப்பன் வெட்டி கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ரஹ்மானியபுரம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் வீடுகளை குறிவைத்து முகமூடிக் கொள்ளையர்களால் தொடர் திருட்டு நடைபெற்றது. இந்த குற்றசம்பங்களை கட்டுப்படுத்தவும், நகரின் முக்கிய பகுதிகளில் காமிராக்களை பொருத்தவும், கடையநல்லூர் காவல்துறை தீவிர முயற்சி மேற்கொண்டது.

    இந்நிலையில் ரஹ்மானியாபுரம் மேற்குப் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தக்வா ஐக்கிய கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் சார்பில் பொதுமக்களின் உதவியுடன் ரஹ்மானியாபுரம் மேற்கு பகுதியில் பல்வேறு தெருக்களில் 12 இடங்களில் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்தினர்.

    கண்காணிப்பு காமிராக்கள் பயன்பாட்டிற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார், துணைத் தலைவர் யூசுப், செயலாளர் சதக்கத்துல்லா, துணைச் செயலாளர் செய்யது அலி, பொருளாளளர் செய்யது முஹம்மது, ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் ரிப்பன் வெட்டி கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, ஹைதர் அலி, யாஸர் கான் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் அப்துல் மஜீத், மைதீன்அப்துல் மஜீத், திவான் மைதீன், நத்தகர் பாதுஷா மற்றும் போலீசார், பொதுமக்கள் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் கண்ணன், முருகன் உள்பட 28 நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    • நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலை மையில் நடந்தது.

    நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணை யாளர் சுகந்தி, பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், மே லாளர் சண்முகவேலு, சுகாதார அலுவலர் பிச்சை யா பாஸ்கர், உதவி பொறி யாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், முருகன், முகைதீன் கனி, அ.தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை கருப்பையா தாஸ், எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர்கான் உட்பட 28 உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர் கான் கூறுகையில், நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் தொடர்ந்து பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது.

    இதனை தடுக்கும் விதத்தில் நகரில் உள்ள முக்கிய வீதியான மணிக் கூண்டு, பஸ் நிலையம், மேலக்கடைய நல்லூர் பூங்கா, மாவடிக்கால், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நகராட்சி சார்பில் சி.சி.டி.வி. காமிராக் களை பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் காவல் துறை, நகராட்சி அதிகாரி களின் ஆலோசனைகளை பெற்று நகரின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. காமி ராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

    அதன் பின்னர் நகராட்சி பகுதிகளில் அதிக அளவு தெருநாய்கள் சுற்றி திரிவ தால் அதனை கட்டுப் படுத்துகின்ற விதத்தில் நகரில் ரூ.19 லட்சம் மதிப் பீட்டில் தெரு நாய்களுக்கு கருத்தடை மையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் உட்பட 50 தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • புதிய அங்கன் வாடி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • விழாவில் பொறியாளர் அப்துல் காதர், இளநிலை பொறியாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட ரெயில்வே பீடர் ரோட்டில் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன் வாடி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

    கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். கவுன்சிலர் வேல்சங்கரி முத்துக்குமார், நகராட்சி ஆணையாளர் சுகந்தி, தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அங்கன்வாடி மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ் பின் சகாய பிரமிளா, குழந்தை கள் நல அலுவலர் பர்கத் சுல்தானா வரவேற்றனர்.

    விழாவில் பொறியாளர் அப்துல் காதர், இளநிலை பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் சிவா, தி.மு.க. வார்டு செயலாளர் ராமையா, தி.மு.க. தன்னார்வலர் ரொட்டேரியன் வினோத், சீனிச்சாமி, சுப்புராஜ், தாவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், முனியசாமி, சமுதாய நிர்வாகிகள் கண்ணன், வேலுச்சாமி, பழனிச்சாமி, தொழிலதிபர் வைரவச்செல்வம், அழகு ராஜ், நகராட்சி ஒப்பந்ததாரர் கருப்பையா தாஸ் மற்றும் பொதுமக்கள், அங்கன்வாடி மைய குழந்தைகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேங்காய் வியாபாரி சர்தார் சொக்கம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சர்தார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி காந்தாரி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சர்தார்(வயது 65). தேங்காய் வியாபாரி.

    இவர் சொக்கம்பட்டி அருகே உள்ள பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கேரளாவில் இருந்து தூத்துக்குடி மீன் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக சர்தார் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சர்தார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சொக்கம்பட்டி போலீசார் சர்தாரின் உடலை மீட்டு மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சகாயம் பிரபாகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
    • விழாவில் நகர செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் மீனாட்சி தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். உதவி பயிற்சி அலுவலர் சேகர் வரவேற்று பேசினார். விழாவில் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    விழாவில் நகர செயலாளர் அப்பாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ், யூனியன் சேர்மன் சுப்பம்மாள், துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், நகர்மன்ற துணைத் தலைவர் ராசையா, திரிகூடபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீரான், நகர துணை செயலாளர் காசி, நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், மதி, நல்லையா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • 200-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
    • 40-க்கும் மேற்பட்டோரை கண் புரை அறுவை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    கடையநல்லூர்:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் கடையநல்லூரில் நடைபெற்றது. டவுன் கிளை தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் அன்வர் சாதிக், துணைச் செயலாளர்கள் பிலால் ஜலாலுதீன், பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாவட்டத் தலைவர் அப்துல் சலாம் தொடங்கி வைத்தார். முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நவீன் மற்றும் அன்னரோஸ்லின் ஆகியோர் தலைமையிலான குழுவினர் 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 40-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்வ தற்காக அழைத்து சென்றனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டவுன் கிளை நிர்வாகிகள் செயலாளர் ஹாலித், பொருளாளர் முகமது கனி, துணைத்தலைவர் அப்துல் அஜீஸ் ஆகியோர் செய்தனர். முகாமில் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதி யில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் -பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் 19 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குமரன் தலைமை தாங்கினார்.

    ஷிபா மருத்துவமனை மருத்துவர் ஜவகர் சலீம், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பிரேமா வரவேற்று பேசினார். பேராசிரியர் பால் மகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 19 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் இந்திய கபடி அணி தலைவர் மணத்தி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். குரு சித்திர சண்முக பாரதி போட்டி யினை ஒருங்கிணைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், தென்காசி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சரவணன், நகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் முகைதீன் கனி, நகர்மன்ற உறுப்பினர் சிட்டி திவான், அறங்காவலர் குழு உறுப்பினர் இடைகால் குமார், இளைஞரணி முருகானந்தம், வார்டு செயலாளர் சையது மசூது, நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன், முன்னாள் கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுலைமான் மற்றும் பேராசிரியர்கள் கிருத்திகா, சண்முகப்பிரியா, சண்முக வடிவு, முருகன், மரகத கோமதி, ஆறுமுகம், சாம்சங் லாரன்ஸ்பால், மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.

    • லாரியை திருவனந்தபுரத்தை சேர்ந்த லிஜு (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.
    • இன்ஸ்பெக்டர் ராஜா லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார்.

    கடையநல்லூர்:

    சிவகிரியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு பால் டேங்கர் லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை திருவனந்தபுரத்தை சேர்ந்த லிஜு (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அதிகாலை 4 மணி அளவில் கடையநல்லூர் போலீஸ் குடியிருப்பு அருகே வந்த போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.

    இதனால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செல்லும் வாகனங்களால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார். இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தடுப்பு சுவரில் சிக்னல் அமைக்காததால் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×