search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய மோட்டார் சைக்கிள் கொள்ளையன்
    X

    சி.சி.டி.வி. காமிராவில் பதிவான மோட்டார் சைக்கிள் கொள்ளையனின் படம் 

    சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய மோட்டார் சைக்கிள் கொள்ளையன்

    • பூதப்பாண்டியில் கைவரிசை
    • போலீசார் தேடுதல் வேட்டை

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே ஞாலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஞாலம் ஊராட்சியில் வரி வசூலிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் தனது மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதையடுத்து சுரேஷ் அக்கம்பக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளை தேடினார். எங்கு தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் சுரேஷ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சுரேஷ் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அதன் அடிப்படையில் விசா ரணை நடத்தப் பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் நாகர்கோவில் ரெயில்வே ரோடு பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோல் வடசேரியைச் சேர்ந்தவர் மைதீன் ராஜித் (வயது 48) இவர் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள நகைக்கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தபோது மர்மநபர்கள் அதை திருடி சென்று விட்டனர்.இது குறித்தும் கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது போன்ற காட்சி சிக்கியது. அதன் அடிப்படையில் போலீசார் பறக்கை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×