வடசேரியில் நடந்த கார் திருட்டில் களியக்காவிளையை சேர்ந்தவர் கைது

சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டதுகடந்த 30-ந்தேதி காரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
வடசேரியில் நடந்த கார் திருட்டில் களியக்காவிளையை சேர்ந்தவர் கைது
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் வடசேரி டென்னிசன் ரோடு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருடப்பட்டது. இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கார்திருட்டு தொடர்பாக களியக்காவிளையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தவுடன் திருடப்பட்ட காரையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டனி டம் போலீசார் விசாரணை நடத்திய போது கார் திருட்டு வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மணிகண்டன் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளையை சேர்ந்த ஜெயன் (வயது59) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் ஜெயனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெயனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

திருவனந்தபுரம் கருமானூர் பகுதியை சேர்ந்தவர் சுஜின்(33). இவரது சொகுசு காரை நித்திரவிளை பணமுகம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அனில்மோன் இடத்தில் நிறுத்தியிருந்தார். கடந்த 30-ந்தேதி காரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து நித்திரவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அந்த கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தநிலையில் காப்புக்காடு பகுதியில் திருடப்பட்ட கார் நின்றதை பார்த்த பொதுமக்கள் அந்த வந்தவர்களை பிடிக்கமுயன்றனர். அப்போது காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பாறசாலை இஞ்சிவிளை பகுதியை 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த கடத்தல் வழக்கில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அஜித் 21 சரத் 20 மேலும் ஒரு 16 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com