search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையன்"

    • கடந்த 34 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
    • தனது திருட்டு வாழ்க்கை மற்றும் சிறை வாழ்க்கை பற்றி அனைத்தையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவங்காடு பகுதியை சேர்ந்தவர் சித்திக். சிறுவயதிலேயே திருட்டு சம்பவங்களில் ஈடுபட தொடங்கிய இவர், தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 219 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் கடந்த 34 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

    இனியாவது கொள்ளையில் ஈடுபடாமல் திருந்தி குடும்ப வாழ்க்கை வாழ முடிவு செய்திருக்கும் அவர், கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த மாத இறுதியில் ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார். தனது வாழ்வின் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்துள்ள அவர், தன்னை பற்றி சுயசரிதை எழுதியிருக்கிறார். கள்ளந்தோ ஆத்மகதா (ஒரு திருடனின் சுயசரிதை) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் சுயசரிதையில் தனது திருட்டு வாழ்க்கை மற்றும் சிறை வாழ்க்கை பற்றி அனைத்தையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    சித்திக் தனது 14 வயது வயதில் தனது சகோதரியின் மகனின் தங்க மோதிரத்தை திருடி தனது முதல் திருட்டை தொடங்கியிருக்கிறார். பின்பு ரேசன்கடையில் தனது மாமாவின் பணத்தை திருடியது, தாயின் தங்க செயினை திருடியது என்று அடுத்தடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி சிறை தண்டனையை அனுபவித்து வந்திருக்கிறார்.

    1989-ம் ஆண்டு கண்ணூர் மத்திய சிறையில் இருந்தபோது, சிறைத்தோழர் ஒருவரிடம் பூட்டு உடைக்கும் கலையை கற்றுக்கொண்டு, பின்பு சிறையை விட்டு வெளியே வந்ததும் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்க தொடங்கினார். கொள்ளையடித்த பணத்தை சில நேரங்களில் அனாதை இல்லங்களுக்கும் கொடுத்திருக்கிறார். இதுபோன்ற தனது வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தனது சுயசரிதையில் சித்திக் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

    • சுமார் 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 23 ஆயிரம் கொள்ளை போயிருந்தது
    • கைது செய்யப்பட்ட சிவா இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    குளச்சல் :

    குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பிள்ளவி ளையை சேர்ந்தவர் காட்சன் (வயது41). இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீசுதா (39) சென்னை திருவல்லிக்கேணி யில் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    இதனால் பிள்ளவிளை யில் உள்ள வீட்டில் யாரும் இல்லை. ஆலங் கோட்டில் உள்ள காட்சனின் மைத்துனர் சேகர், அடிக்கடி வீட்டுக்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி அவர் வந்த போது கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்த போது, மாடியில் உள்ள 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது.அதில் இருந்த சுமார் 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 23 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளை யர்களை பிடிக்க குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலும் தனிப்படை கள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் குளச்சல் போலீசார் நேற்று செம்பொன்விளையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப் போது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர் ஸ்ரீசுதா வீட்டில் புகுந்து கொள்ளையடித்தவர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவரது பெயர் சிவா (29) என்பதும் குளச்சல் வெள்ளியாகுளம் பனவிளையை சேர்ந்தவர் என்பதும், தெரிய வந்தது. அவரிடமிருந்து 4 பவுன் நகை மற்றும் மேற்கு கல் லுக்கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் பால்மணி (46)வீட்டின் ஓடு பிரித்து திருடிய செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • முகமூடி கொள்ளையன் வங்கி முழுவதும் நகை பணம் ஏதாவது உள்ளதா என தேடி பார்த்தார்.
    • முகமூடி கொள்ளையன் எழுதி வைத்த கடிதத்தை வங்கி அதிகாரிகள் படித்து பார்த்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நென்னல் நகரப் பகுதியில் கிராமப்புற வங்கியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. தனியாக வீடு வாடகை எடுத்து அதில் வங்கி செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வங்கியின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். லாக்கர் அறைக்கு சென்ற முகமூடி கொள்ளையன் அங்குள்ள லாக்கரை திறக்க முயன்றார். அவரால் லாக்கரை திறக்க முடியவில்லை. பின்னர் லாக்கரை உடைக்க முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து முகமூடி கொள்ளையன் வங்கி முழுவதும் நகை பணம் ஏதாவது உள்ளதா என தேடி பார்த்தார். எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால் விரக்தி அடைந்த முகமூடி கொள்ளையன் சிரமப்பட்டு கதவை உடைத்து வந்தும் எதுவுமே கிடைக்கவில்லையே என வருத்தம் அடைந்தார்.

    பின்னர் வங்கியில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து ஸ்கெட்ச் பேனா மூலம் இந்த வங்கியில் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என்னை தேட வேண்டாம் என்னுடைய கைரேகை எதுவும் இங்கு பதிவு ஆகி இருக்காது.

    இது ஒரு நல்ல வங்கி என அதிகாரிகளுக்கு தெலுங்கில் பாராட்டு கடிதம் எழுதிவிட்டு சென்றார். நேற்று காலை வங்கி திறக்க வந்த அதிகாரிகள் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வங்கியின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் திறக்கப்படாமல் இருந்ததை கண்ட அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    பின்னர் முகமூடி கொள்ளையன் எழுதி வைத்த கடிதத்தை வங்கி அதிகாரிகள் படித்து பார்த்தனர்.

    இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே கன்னக்குறிச்சி நடுவூரில் ஈஸ்வரி பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப் பட்டிருந்தது.

    இதுகுறித்து கோவில் தலைவர் ஸ்ரீதர் சிதம்பர நாதன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் உண்டி யலை உடைத்து பணத்தை எடுத்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சி.சி.டி.வி. காமிரா வில் பதிவாகி இருந்தது ஆலங் கோட்டை யை சேர்ந்த மகேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகேஷை தேடி வந்தனர். போலீசார் தேடுவது அறிந்த அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் பதுங்கி இருந்த மகேசை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பறக்கை அருகே புல்லுவிளை முத்தாரம்மன் கோவிலில் கதவை உடைத்து தங்க நகைகள், வெண்கல குத்துவிளக்குகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஈத்தாமொழி தெற்கு சூரங்குடி கீரிவிளையை சேர்ந்த அரவிந்த் பிரியன் (21) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப் பட்டவ ரிடம் இருந்து 4 குத்து விளக்குகள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப் பட்டது. கைது செய்யப்பட்ட அரவிந்த் பிரியன் மீது ராஜாக்கமங்கலம், வெள்ளிச் சந்தை பகுதி களில் கோவில் களில் கொள்ளை சம்பவங்க ளில் ஈடுபட்ட வழக்கு உட்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட அரவிந்த் பிரியனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 8-ந் தேதி தனது மனைவி சைதன்யா, மாமனார் ராம்நாத், மாமியார் கலைச்செல்வி ஆகியோ ருடன் வெளிநாட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
    • ஆடிட்டர் விக்னேஷ் வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த பொது மக்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சின்னத்திருப்பதி சந்திரன் கார்டன் அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். ஆடிட்டர். இவர் கடந்த 8-ந் தேதி தனது மனைவி சைதன்யா, மாமனார் ராம்நாத், மாமியார் கலைச்செல்வி ஆகியோ ருடன் வெளிநாட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    இந்த நிலையில் ஆடிட்டர் விக்னேஷ் வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த பொது மக்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குடும்பத்தினர் நேரில் வந்து பார்த்தால் மட்டுமே என்னென்ன பொருட்கள் திருட்டு போனது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முகமூடி அணிந்து சென்றது தெரியவந்தது.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி சினிமா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (35), இவர் கடந்த மே மாதம் 28-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்ற வீராணத்தை சேர்ந்த முருகன் என்பவரை வழி மறித்து மிரட்டி ரூ.450-ஐ பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருடுதல், மோட்டார் சைக்கிள்கள் திருட்டு உள்பட தொடர் குற்றங்களில் ஈடுபட்டதும், பாண்டியன்மீது சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் இதனால் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

    இந்நிலையில் பாண்டியன் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என டவுன் போலீசார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு சேலம் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

    • வேலை பார்த்து கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து தனது சகோதரிகள் சிலருக்கு திருமணம் செய்து வைத்தார்.
    • இன்னும் சில சகோதரிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது40).

    சம்பவத்தன்று இவர் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து திருடன்... திருடன்... என வடிவேல் கூச்சலிடவே, அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர். மேலும் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கதவை பூட்டியதால் உள்ளே சிக்கிய திருடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்தான். பொதுமக்களிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த சேலையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றான்.

    இதனிடையே அங்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்த முஸ்தபா மகன் இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இஸ்மாயில் கொள்ளையில் ஈடுபட்டதற்கான காரணங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.

    கைதான இஸ்மாயிலுக்கு உடன்பிறந்த சகோதரிகள் 9 பேர் உள்ளனர். இவர்களில் சிலர் திருமணமாகி திருப்பூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் வசித்து வருகின்றனர். சகோதரிகள் சிலருக்கு திருமணமாகவில்லை. இஸ்மாயில் ஒரே மகன் என்பதால் அவர்தான் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை.

    இருப்பினும் வேலை பார்த்து கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து தனது சகோதரிகள் சிலருக்கு திருமணம் செய்து வைத்தார். இன்னும் சில சகோதரிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் எவ்வளவோ முயன்றும் சகோதரிகளின் திருமண செலவுக்கான பணத்தை சேர்க்க முடியவில்லை.

    இதனால் என்னசெய்வதென்று யோசித்துள்ளார். அப்போது அதிக பணம் வேண்டுமென்றால் திருட்டில்தான் ஈடுபட வேண்டும் என்று எண்ணிய அவர் திருடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு அவினாசியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார். ஆனால் அவரை அப்பகுதி பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து 6 மாத சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்த அவர், எப்படியாவது பணத்தை புரட்டி விட வேண்டும் என்பதற்காக மீண்டும் 2022-ம் ஆண்டு பெருமாநல்லூர் பகுதியில் உள்ள வீட்டில் திருட முயன்றுள்ளார். அப்போதும் அவர் பொதுமக்கள் பிடியில் சிக்கி கொண்டார்.

    நேற்று முன்தினம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்த வடிவேல் என்பவரது வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார். அங்கேயும் அவர் சிக்கிக்கொண்டார். இஸ்மாயிலை வீட்டிற்குள் வைத்து பூட்டியதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர் அவமானமும் அடைந்தார். மேலும் தனது சகோதரிகளின் திருமண செலவுக்காக 3 முறை முயற்சி செய்தும் தனது கொள்ளை திட்டம் நிறைவேறாததால் மிகவும் வருத்தமடைந்தார்.

    வெளியே சென்றாலும் யாரிடமும் தலை காட்ட முடியாது என்று எண்ணிய அவர், வடிவேல் வீட்டின் பீரோவில் இருந்த சேலையை எடுத்து அங்கிருந்த கொக்கியில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் போலீசார் வந்து இஸ்மாயிலை மீட்டனர்.

    மேலும் இஸ்மாயில் போலீசாரிடம் கூறுகையில், 3 முறை முயன்றும் என்னால் கொள்ளையடிக்க முடியவில்லை. எனவே எனக்கு திருடுவதற்கு சரியான பயிற்சி இல்லை. அதனால்தான் பொதுமக்களிடம் சிக்கினேன் என தெரிவித்துள்ளார். உடன் பிறந்த 9 சகோதரிகளின் திருமண செலவுக்காக பனியன் தொழிலாளி கொள்ளையனாக மாறிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர்.
    • விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது40). இவர் தனது மனைவி காயத்ரி, தாயார் நாகம்மாள் (60) மற்றும் 2 குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். வடிவேல் மற்றும் காயத்ரி இருவரும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

    நாகம்மாள் அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வடிவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். மாலை வேலைக்கு சென்ற தனது தாயாரை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.பின்னர் தனது தாயாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து திருடன்... திருடன்... என வடிவேல் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர். மேலும் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கதவை பூட்டியதால் உள்ளே சிக்கிய திருடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்தான். பொதுமக்களிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த சேலையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றான்.

    இதனிடையே அங்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்த முஸ்தபா மகன் இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கொள்ளையில் ஈடுபட முயன்ற வாலிபர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பிக்க தூக்கு ப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஊட்டியில் நிலம் வாங்கிய அம்பலம்
    • அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில், மே.26-

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் முதலிமார் தெரு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் கார்த்திக் (வயது 34). நகை மதிப்பீட்டாளர். இவரது மனைவி பார்வதி (23). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்கள் முதலிமார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த மாதம் 12-ந்தேதி மகேஷ் கார்த்திக் வேலை விஷயமாக சென்னை சென்றார். இதையடுத்து மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது மகேஷ் கார்த்திக் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    வீட்டில் இருந்த 17 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன் வீட்டின் மாடி வழியாக புகுந்து பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றினார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையன் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் வாத்தியார்விளையை சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவது அறிந்த ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஆனந்திடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனந்த் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும் அந்த பணத்தை பெண்களுக்கு ஜாலியாக செலவு செய்துள்ளார். ஊட்டி பகுதியில் அவர் நிலம் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிங்கம்புணரி அம்மன் கோவிலில் பணத்துடன் உண்டியலை திருடிச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
    • அங்கு கண்காணிப்பு காமிரா வசதி இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பது தெரியவில்லை.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி- வேங்கை பட்டி ரோட்டில் தனியா ருக்கு சொந்தமான கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா சன்னதியும் உள்ளது.

    இங்கு ஒரு அடி உயரத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இதில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் கோவிலை வழக்கம் போல் மூடிவிட்டு கோவில் ஊழி யர்கள் சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையன் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து சாய்பாபா சன்னதி யில் பணத்துடன் இருந்த உண்டியலை திருடிச்ெசன்று விட்டான்.

    இன்று காலை வழக்கம் வழக்கம் போல் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் கோவிலை திறந்தார். அப்போது சாய்பாபா சன்னதியில் இருந்த உண்டி யல் திருட்டு போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந் தார். இது பற்றி அவர் கோவில் நிர்வாகிக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உண்டியல் திருடப்பட்டது பற்றி சிங்கம்புணரி போலீசில் கோவில் நிர்வாகி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது திருடப்பட்ட உண்டியல் அருகில் உள்ள வர்த்தக சங்க கட்டிடத்தின் மாடியில் கிடப்பது தெரியவந்தது. அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையன் உண்டியலை அங்கு போட்டு சென்று உள்ளான். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை.

    அங்கு கண்காணிப்பு காமிரா வசதி இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பது தெரியவில்லை. இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நகை பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
    • தலைமறைவாகிய 5 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சதாசிவம் நகரை சேர்ந்தவர் பிரேம் குமார் (வயது 43). இவர் திரைப்படங்க ளுக்கான பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவராகவும் உள்ளார். பிரேம்குமார் நண்பர் பாண்டியுடன் காரில் பாண்டி கோவில் ரிங் ரோட்டுக்கு சென்றார். அங்குள்ள மதுபான பாரில், பாண்டி சரக்கு வாங்கு வதற்காக சென்றார். அங்கு வந்த 5 பேர் கும்பல் பிரேம் குமாரை அரிவாள் முனையில் கடத்தியது.

    அவர்களது கார் சிவகங்கை மாவட்டம், இடையமேலூர், புதுப்பட்டி கண்மாய்க்கு சென்றது. அந்த கும்பல் பிரேம் குமாரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியது. இதற்கு பிரேம்குமார், "என்னிடம் அவ்வளவு பணம் இல்லை" என்று தெரிவித்தார்.

    அப்போது அந்த கும்பல், "உன் வீட்டில் இருக்கும் நகைகளை கொடு. இல்லை யென்றால் கொலை செய்து விடுவோம்" என்று மிரட்டியது. பயந்து போன பிரேம்குமார் உடனடியாக மனைவிக்கு போன் செய்தார். பின்னர் கடத்தல் கும்பலில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் கருப்பாயூரணியில் உள்ள பிரேம் குமார் வீட்டுக்கு சென்று 34 பவுன் தங்க நகைகளை வாங்கிச் சென்றான்.

    இதையடுத்து அந்த கும்பல் பிரேம்குமாரை கே.கே. நகரில் இறக்கி விட்டு தப்பியது.

    இது குறித்து அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலபனங்காடி அழகுமலையான் நகரை சேர்ந்த குண்டு சரவணன் (42) என்பவர் ஒத்தக் கடையில் பதுங்கி யிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாய்ஸ் மணி, இடையபட்டி தன பால், அவரது சகோதரர் தனசேகர், பாய்ஸ் மணியின் நண்பர் உள்பட 5 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

    • பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பரவையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி சசிகலா (வயது 46). இவர் சம்பவத்தன்று மதுரை-திண்டுக்கல் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் சசிகலா அணிந்தி ருந்த தங்க செயினை பறித்தான்.

    அப்போது அவர் செயினை பிடித்துக் கொண்டதால் அது 2 துண்டானது. இதில் ஒரு பகுதியை மர்ம நபர் கொண்டு சென்று விட்டான். இதுபற்றி சசிகலா செல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.இதுபற்றி தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் சம்பந்தப் பட்ட குற்றவாளியை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், செல்லூர் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நகைபறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி அவற்றில் இடம் பெற்று உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சசிகலாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண் தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செயின்பறிப்பில் ஈடுபட்டவர் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த விஜயகாந்த் என்பது தெரியவந்தது. வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் வேறு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×