search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னெச்சரிக்கை"

    • பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
    • சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.

    குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம், உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் குரங்கு அம்மையால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இதில் 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 13 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலையை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். நிரஜ் கூறியதாவது:-

    குரங்கு அம்மையால் பாதிக்ப்பட்ட 21 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்த குரங்கு அம்மை பரவுகிறது. எனவே வனப்பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். குரங்கு அம்மை ஏற்பட்டால் அடுத்த 3 முதல் 5 நாட்களில் அதிக காய்ச்சல் இருக்கும். 2 வது முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தப்போக்கு அறிகுறிகள் இருக்கும், உடல் வெப்பநிலையும் உயரக்கூடும் எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகா, தமிழகம் இடையே தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவில் குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. அத்தகைய அறிகுறிகளுடன் கூட யாரும் இல்லை. ஆனாலும் அண்டை மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்ளும். கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளின் தொடர்ச்சியாக தற்போதும் தேவையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும். அதே போன்று குரங்கு அம்மை குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை இவ்வாறு அவர் கூறினார்.

    • தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
    • வடகிழக்கு பருவமழைக்காக மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:-

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கழிவுநீர், செப்டிங் டேங்க் தூய்மை படுத்துபவர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, வார்டு கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது :-

    தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதனை சிலர் முறையாக பயன்படுத்துவதில்லை. எனவே அவர்கள் உபகரணங்களை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். பாதாள சாக்கடையை ரோபோ மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஜே.சி.பி. எந்திரங்கள், ஆட்டோ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்ட எந்த பிரச்சினை என்றாலும் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழைக்காக மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் 7598016621 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் எதிரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையிலும் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரணியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாநகர ஆணையாளர் காந்திராஜ், மாநகர நல அலுவலர் எழில் மதனா, மண்டல குழு தலைவர் சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷ்ணி ராஜா, டாக்டர் காரல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • தீ விபத்தின் போது தற்காத்து கொள்வது எப்படி?
    • தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் நேற்று ஆய்வு செய்தார்.

    திருமருகல் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் திலக்பாபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மழை, வெள்ளம் வரும்போது கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்களை பாதுகா த்துக் கொள்வது, மற்றவ ர்களை காப்பா ற்றுவது குறித்து செயல்முறை நடத்தி காண்பிக்கப்பட்டது.

    மேலும் தீ விபத்தின் போது தற்காத்து கொள்வது குறித்தும், தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், கலைவாணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மழைக்காலங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
    • மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி 2-வது வார்டில் தாழ்வான பகுதியில மழை க்காலங்களில் குடியிருப்பு களை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்து வந்தனர். இதனிடையே மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ரஹமத்நிஷா முபாரக், நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகர னிடம் கோரிக்கை வைத்தார்.

    இதனை அடுத்து நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகர், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறு த்தலின்படி இரணியன் நகர் பகுதியில் வாய்க்கால் ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு தூர் வாரும் பணி தொடங்கியது.

    இந்த பணிகள் மேற்கொள்வதன் மூலம் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழாமல் எளிதில் வடியும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகராட்சி பொறியாளர் குமார், பணி மேற்பா ர்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்நிஷா பாரூக் உடன் இருந்தனர்.

    • கடலாடி ஒன்றியத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும்.
    • ஒன்றிய மேலாளர் முனியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    சாயல்குடி

    கடலாடியில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ஜெய ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, துணை சேர்மன் ஆத்தி, ஒன்றிய கவுன்சிலர் குமரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் முனியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். உதவியாளர் கணேசன் அறிக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் பனைக்குளம், மாரந்தை, ஓரிவயல், ஆகிய கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழைக்காலம் வரும் முன் மழைநீர் தேங்கும் இடங்களை தேர்வு செய்து மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வரத்து கால்வாய்களை சரி செய்து மழை நீர் கண்மாய்களுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிச்சிகுளம், களநீர்மங்களம், தொட்டியபட்டி கிராமங்களில் பெண்கள் குளிப்பதற்கு படித்துறை அமைக்க வேண்டும், சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும், ஏர்வாடி 9-வது வார்டு பகுதியில் குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனங்குடி, கருங்குளம் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    சிறைக்குளம் கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை களை சீரமைக்க வேண்டும், மடத்தா குளம் கிராமத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன் வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் மாயகிருஷ்ணன், முனியசாமி பாண்டியன், அம்மாவாசி, பிச்சை, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், வசந்தா கதிரேசன், ராமலட்சுமி, பெரோஸ் பானு ஜலில், குஞ்சரம் முருகன், பானுமதி ராமமூர்த்தி, செய்யதுஅலி பாத்திமா, முருகன் வள்ளி மலை ராஜ் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    • தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    உடுமலை:

    கேரளாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. இதனைத் தடுக்க கேரள அரசு நோய் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளது.

    இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கால்நடை டாக்டர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய குழுவினர் கல்லாபுரம், மானுப்பட்டி, கோடந்தூர், தளிஞ்சி, ஜல்லிப்பட்டி, செல்லப்பம்பாளையம், வாளவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கால்நடைகளைக் கண்காணிக்கின்றனர்.

    மேலும் இனிவரும் நாட்களில் ஏதேனும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனே அருகில் உள்ள கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற கால்நடை வளர்ப்போரிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-

    மாநில எல்லை கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு கிடையாது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் உள்ள கால்நடைகள் கண்காணிக்கப்படுகிறது.

    கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்தே கேரளாவுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கால்நடைகள் பெருமளவு கொண்டு வரப்படுவதில்லை. இருப்பினும் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்மேற்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    சென்னையில் கொட்டி தீர்த்த மழையில் ஒரே நாளில் தலைநகர் சென்னை தத்தளிக்கிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில், அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 160 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

    மேலும் வரும் 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, கடலூர், கள்ளக் குறிச்சி, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 9 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்ற ஒரு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது.

    கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜூன் மாதத்தில் சென்னையிலே அதிக பட்சமாக மழைபதிவாகி இருப்பதால், 2 நாட்களாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டி ருக்கிறது.

    சென்னை புறநகர் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். சில இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடந்தன. அதே போன்று நங்கநல்லூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார்.

    வேப்பேரி, பெரம்பூர், கோயம்பேடு, திருமங்கலம், கத்திபாரா மேம்பாலம், கணேசபுரம் சுரங்க பாதை என பல்வேறு முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமி ழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 4 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பருவ மழைகாலங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உடன டியாக சீர்படுத்துவதற்கும், பொறுப்பு அதிகாரிகளாக அனுபவம் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, கள ஆய்வுகளை நடத்தி நடவ டிக்கைகளை மேற்கொள் வார்கள்.

    தற்போது தி.மு.க. ஆட்சியில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், தென்மேற்கு பருவ மழை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது போன்ற காலங்களில் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்.

    ரூ.12 கோடியில் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு திருவாரூரில் முகாமிட்டுள்ள முதல்-அமைச்சர், மக்களுக்கு கடமைகளை செய்ய வேண்டாமா? அப்படி நீங்கள் மக்களுக்கு பணி செய்தால் உங்களை வரவேற்பார்கள் என்பதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியா முழுவதும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் ரெயில்வே போலீசார் சோதனைகள், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    ஒடிசாவில் நடைபெற்ற ரெயில் விபத்தை அடுத்து இந்தியா முழுவதும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுகிறதா என கூறி ரெயில்வே போலீசார் ஒவ்வொரு ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி ரெயில்வே நிலையம் அருகில் உள்ள தண்டவாள பகுதிகளில் திருச்சி ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் உத்தர வின்படி, மதுரை ரெயில்வே உட்கோட்ட பொறுப்பு நெல்லை இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுரையின் படியும், நெல்லை வட்டம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தலின் பேரிலும் நேற்று தென்காசி ரெயில்வே காவல் நிலைய எல்லைகள், தண்டவாள பகுதிகள் மற்றும் மேம்பாலம் அருகில் நாசவேலைகள் ஏதும் நடைபெறாத வகையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் தண்டவாள ரோந்து பணிகள் மேற்கொண்டும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டனர்.

    • திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கல்லூரி சார்பில் தூய்மை பணி செய்யப்பட்டது.
    • வெள்ளம், புயல், தீ விபத்து, போன்ற காலங்களில் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 1 சார்பில் மணலியில் நடைப்பெற்று வரும் முகாமின் மூன்றாம் நாள் சிவன் கோயில் தூய்மை பணி செய்யப்பட்டது.

    அப்போது பேரிடரை எதிர் கொள்வோம் என்ற தலைப்பில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் பேசும்போது, எதிர்காலங்களில் காலநிலை மாறுபாடுகளால் பேரிடர் என்பது தவிர்க்க முடியாதததாகிவிட்டது.

    அனைவரும் பேரிடரை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

    வெள்ளம், புயல், தீ விபத்து, போன்ற காலங்களில் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    நம்மை மட்டுமல்ல மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும்.

    அனைவரும் பேரிடர், முதலுதவி பயிற்சிகளை பெற வேண்டும்.

    பாதிப்பு ஏற்படும் நேரங்களில் அரசு துறைகளுக்கும், காவல், தீயணைப்பு துறை, மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும்.

    ஒவ்வொருவரும் முன்கள மீட்பாளர்களாக தயாராக வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சுபத்ரா ரவி தலைமை வகித்தார்.

    வர்த்தக சங்க தலைவர் ரவி, மகளிர் குழு செயலாளர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியை என். எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பன்னீர்செ ல்வம், பேராசிரியர் லோகநாதன் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • உதவி தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
    • போதுமான அளவு குளோரின் மருந்து கலந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலக துணை இயக்குனரிடம் கலந்து ஆலோசனை செய்து மக்களைத்தேடி மருத்துவம் வாகனங்கள் மூலம் கிருஷ்ணாபுரம் மற்றும் மேலக கடையநல்லூர் பகுதிகளில் தனித்தனியே மருத்துவ குழுக்கள் அமைத்து அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு மருத்துவ உதவி தேவைப்படு பவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ பணியாளர்கள் மூலம் அனைத்து பள்ளிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு பள்ளிகளிலேயே மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    பொறியியல் பிரிவு மூலமாக பொதுமக்களுக்கு குடிநீரில் போதுமான அளவு குளோரின் மருந்து கலந்திட உத்தரவிடப்பட்டு உறுதி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரப் பிரிவு பணியாளர்கள் மற்றும் டி.பி.சி. பணியாளர்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களுக்கு நகராட்சி மேலக்கடையநல்லூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிருஷ்ணாபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாகவும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் நகர் எங்கும் முதிர் கொசுக்களை ஒழிக்க புகை மருந்தும், வாறுகால்களில் கொசுப்புழு ஒழிப்பு மருந்தும், அனைத்து வார்டுகளிலும் தங்கு தடையின்றி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    மேலும் பொதுமக்கள் காய்ச்சல் கண்ட விவரத்தினை நகராட்சி பொது சுகாதார பிரிவிலும், கிருஷ்ணாபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேலக்கடைய நல்லூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தெரிவித்து மருத்துவ உதவிகள் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • நாளை மதியம் அணையின் முழு கொள்ளளவான 32 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அணை திறப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    விழுப்பரம்:

    விக்கிரவாண்டி அருகே வீடூர் கிராமத்தில். அமைந்துள்ள வீடூர் அணையிலிருந்து தமிழகத்தில் 2200 ஏக்கர், புதுவையில் 1000 ஏக்கர் என மொத்தம் 3200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வடகிழக்கு பருவ மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து வரக்கூடிய பணமலை பேட்டை, செஞ்சி , மேல் மலையனுார் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்குநீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.அணையின் மொத்த கொள்ளளவு 32 அடியாகும்.இன்று காலை நிலவரப்படி அணைக்கு 472 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையில் .30, 325 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு வருகின்ற நீரின் அளவை கணக்கிட்டு பார்த்தால் நாளை மதியம் அணையின் முழு கொள்ளளவான 32 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதை பொதுப்பணி த்துறை செயற்பொறியாளர் ஷோபனா ,உதவி பொறியாளர் ரமேஷ் இளநிலை பொறியாளர்.பாபு ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அணை திறப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இன்று மதியம் விழுப்புரம் கலெக்டர் மோகன் அணையை பார்வையிட்டு ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது.அணை நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி விபத்துகள் ஏற்படாத வண்ணம் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் போலீசார் அணையில் பொதுமக்கள் , இளைஞர்கள் யாரும் குளிக்காத வகையில் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் நாளை அதன் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்துள்ளனர்.

    ×