search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில்  தண்டவாள கண்காணிப்பு  பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார்
    X

    ரெயில்வே தண்டவாள பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ரெயில்வே போலீசார்.

    தென்காசியில் தண்டவாள கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார்

    • இந்தியா முழுவதும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் ரெயில்வே போலீசார் சோதனைகள், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    ஒடிசாவில் நடைபெற்ற ரெயில் விபத்தை அடுத்து இந்தியா முழுவதும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுகிறதா என கூறி ரெயில்வே போலீசார் ஒவ்வொரு ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி ரெயில்வே நிலையம் அருகில் உள்ள தண்டவாள பகுதிகளில் திருச்சி ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் உத்தர வின்படி, மதுரை ரெயில்வே உட்கோட்ட பொறுப்பு நெல்லை இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுரையின் படியும், நெல்லை வட்டம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தலின் பேரிலும் நேற்று தென்காசி ரெயில்வே காவல் நிலைய எல்லைகள், தண்டவாள பகுதிகள் மற்றும் மேம்பாலம் அருகில் நாசவேலைகள் ஏதும் நடைபெறாத வகையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் தண்டவாள ரோந்து பணிகள் மேற்கொண்டும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டனர்.

    Next Story
    ×