search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seriousness"

    • மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தெரிவித்தனர்.
    • மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் மீனாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைவர் பேசுகையில், திருப்பத்தூர் ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கண்மாய் மற்றும் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படாத வண்ணம் மணல் மூடைகளை அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மழைக்கால பிரச்சினை தொடர்பாக அலுவலகத்தில் இது சம்பந்தமான அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் சாலை வசதி, மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும், பிராமணபட்டி அங்கன்வாடி மையத்திற்கு மின்இணைப்பு வழங்க வேண்டும், ரணசிங்கபுரம் மின்நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், கீழநிலை, நெடுமரம், வடக்கு இளையாத்தங்குடி பள்ளிகளை மேம்படுத்த வேண்டும், ஆ. தெக்கூர் அங்கன்வாடி மையத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் ராமசாமி, சகாதேவன், சுமதி, கலைமகள்ராஜீ, கலைமாமணி, பழனியப்பன் ஆகியோர் வலியுறுத்தினர். இதற்கு அரசு பொறியாளர் பதிலளித்தார்.

    வேளாண் அலுவலர் தனலட்சுமி பயிர் காப்பீடு குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக மேலாளர் செழியன் வரவேற்றார். மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் இளையராஜா நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் நகை மோசடியில் மேலும் 4 பேருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
    • இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய பாலமுருகன், முத்துபகவதி, சண்முகவள்ளி, கோபிநாத் ஆகிய 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள காருகுடி பகுதியை சேர்ந்த இளங்கண்ணன் என்பவரின் மகள் மீராலெட்சுமி (வயது26). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் மனைவி வளர்மதி (30), அவரது தங்கை காயத்ரி ஆகியோர் ஏலத்திற்கு வரும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.10.50 லட்சம் வாங்கி உள்ளனர்.

    ஆனால் அவர்கள் கூறியது போல் நகை வங்கி தரவில்லை. மேலும் மீராலெட்சுமியிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் நகை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மீராலெட்சுமி கடந்த மாதம் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மீராலெட்சுமியிடம் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டம் காருகுடி, சக்கரக்கோட்டை, மண்டபம், உச்சிப்புளி, பரமக்குடி, கமுதி, ஆர்.எஸ்.மங்களம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 31 பெண்களிடம் குறைந்த விலைக்கு நகை தருவதாக கூறி வளர்மதி மற்றும் அவரது தங்கை ரூ2.50 கோடி பண மோசடி செய்தது தெரிய வந்தது.

    அவர்களது மோசடியில் மேலும் 5 பேருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து வளர்மதி, காயத்ரி, ராமநாதபுரம் நகை கடை உரிமையாளர் ராஜேஷ், பாலமுருகன், முத்துபகவதி, சண்முக வள்ளி, கோபிநாத் ஆகிய 7 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அவர்களில் வளர்மதி மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பரமக்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து நகை கடை உரிமையாளரான ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் தெற்கு ரத வீதியை சேர்ந்த ராஜேசை நேற்று கைது செய்தனர்.

    இவரது நகைக்கடையில் அடகு வைத்த நகைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பாதவர்களின் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி தான் வளர்மதி மற்றும் அவரது தங்கை காய்த்ரி ஆகியோர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய பாலமுருகன், முத்துபகவதி, சண்முகவள்ளி, கோபிநாத் ஆகிய 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×