search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் காங்கிரஸ் பிரமுகரின் பைக் திருடிய 2 பேர் சிக்கினர்
    X

    நாகர்கோவிலில் காங்கிரஸ் பிரமுகரின் பைக் திருடிய 2 பேர் சிக்கினர்

    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.
    • மோட்டார் சைக்கிளை 2 பேர் திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கடை வீதியில் நிறுத்தப்படும் பைக்குகள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் விலை உயர்ந்த பைக்குகளை மர்ம நபர்கள் திருடி செல்கிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. திருடர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து பைக் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    நாகர்கோவில் புதுகுடியி ருப்பு டிஸ்லரி ரோடு பகுதியை சேர்ந்தவர் மரிய ஜெயின் ஜெனிஸ் (வயது 42) காங்கிரஸ் பிரமுகர். இவர் தனது விலை உயர்ந்த பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. இதையடுத்து மரிய ஜெயின் ஜெனிஸ் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது மரிய ஜெயின் ஜெனிஸ் மோட்டார் சைக்கிளை 2 பேர் திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மோட்டார் சைக்கிளை திருடி யது நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வேறு வழக்கில் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×