search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி நெருங்குவதால் கூட்டம் அலைமோதல்:  அண்ணா பஸ் நிலையத்தில் மூடி கிடக்கும்  புறக்காவல் நிலையம் திறக்கப்படுமா?  கண்காணிப்பு பணிக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வலியுறுத்தல்
    X

    தீபாவளி நெருங்குவதால் கூட்டம் அலைமோதல்: அண்ணா பஸ் நிலையத்தில் மூடி கிடக்கும் புறக்காவல் நிலையம் திறக்கப்படுமா? கண்காணிப்பு பணிக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வலியுறுத்தல்

    • பண்டிகை காலத்தை யொட்டி அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து இரவு ரோந்து பணியை தீவிரப் படுத்துவதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே அந்த பகுதி களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
    • பழைய கொள்ளையர்கள் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த படங்களை அறி விப்பு பலகையாக பொது இடங்களில் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    நாகர்கோவில், அக்.13-

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து நாகர்கோவில் நகரப் பகுதி களில் காலை, மாலை நேரங் களில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வரு கிறது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான பொதுமக்கள் குடும்பத்தோடு கடை வீதிகளுக்கு வந்து செல் கிறார்கள். இதனால் வடசேரி பஸ்நிலையம், மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் செயின் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அண்ணா பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் நீண்ட நாட்களாக பூட்டி கிடக்கிறது. பண்டிகை காலமான தற்பொழுது கூட்டம் அலைமோதி வரும் நிலையில் அங்கு போலீசாரை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை தீவிரபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை யாக உள்ளது.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவடிக்கையாக அண்ணா பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை திறந்து அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுமார் 8 கேமிராக்கள் பஸ் நிலை யத்தில் உள்ளது. இதில் ஒரு சில கேமராக்கள் செயல் படாமல் பழுதடைந்து உள் ளது.

    எனவே பழுதடைந்துள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புற காவல் நிலையம் திறப்பதுடன் சி.சி.டி.வி. கேமிராக்கள் சரி செய்யும் பட்சத்தில் குற்ற சம்பவங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இதே போல் வடசேரி பஸ் நிலையத்தில் தற்போது புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    பண்டிகை காலத்தை யொட்டி அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து இரவு ரோந்து பணியை தீவிரப் படுத்துவதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே அந்த பகுதி களிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

    பழைய கொள்ளையர்கள் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த படங்களை அறி விப்பு பலகையாக பொது இடங்களில் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    Next Story
    ×