என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாசர் ஹுசைன்"

    • எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ரா இல்லாமல் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா இடம் பெற உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் போட்டிக்கும் 2ஆவது போட்டிக்கும் இடையில் 7 நாட்கள் இடைவெளி இருந்தபோதிலும், எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஓய்வு வழங்கப்பட்டது.

    பும்ரா இல்லாமல் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் எப்படி வீழ்த்த முடியும் என இந்திய அணி நிர்வாகம் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் பும்ராவுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீசி 10 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

    நாளைமறுநாள் தொடங்கும் லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா விளையாடுவார். இந்த போட்டியில் இந்தியாவின் துருப்புச் சீட்டாக அவர் இருப்பார். பாரம்பரிய பெருமைமிக்க லார்ட்ஸ் மைதான போர்டில் தனது பெயரை பதிக்க விரும்புவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணியின் பேட்டிங் போன்று இந்தியாவின் பேட்டிங் வலுவாக இல்லை என்று முன்னாள் பேட்ஸ்மேன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் உலகக்கோப்பை போட்டி குறித்து கூறியதாவது:-

    ஒருநாள் போட்டி தர வரிசையில் இங்கிலாந்தும், இந்தியாவும் முதல் 2 இடங்களில் உள்ளன. இரு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இங்கிலாந்து அணியிடம் வலுவான பேட்டிங் பலம் உள்ளது. அது இந்திய அணியிடம் இல்லை. இதே மாதிரி அவர்களின் பந்துவீச்சும் மிகவும் சிறப்பானதாக இல்லை.

    நான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்திருந்தால் அவர்களை பார்த்து மிரண்டு போய் இருப்பேன். தற்போதைய அணியில் உள்ள பலரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். தொடர்ந்து 4 ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் 300 ரன்னுக்கு மேல் அடித்து உள்ளனர்.



    ஆஸ்திரேலிய அணியுடன் முன்பு விளையாடும்போது அவர்களின் முதல் 5 விக்கெட்டை சாய்த்து விடுவோம். ஆனால் கில்கிறிஸ்ட் கடைசி வரை நின்று ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துவிடுவார்.

    இதேபோல தற்போது இங்கிலாந்து அணி இருக்கிறது. முதல் 5 விக்கெட் வீழ்ந்தாலும் ஸ்டோக்ஸ், மொயீன் அலி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    2016-ல் இந்தியாவிடம் 0-4 எனத் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க இது சரியான நேரம் என்று நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. அதன்பின் நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றியடைந்து 4-0 என இங்கிலாந்தை வீழ்த்தியது.

    தற்போது இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.



    3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் வருகிற சனிக்கிழமை நடக்கியது. பேட்டிங்கில் தடுமாறும் இந்தியாவை 2016 தோல்விக்கு பதிலடி கொடுக்க இதுதான் சரியான நேரம் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். அத்துடன் லார்ட்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் போராட்டமின்றி தோல்வியடைந்தனர். இது பெரியவர்களுக்கும், சிறவர்களுக்கும் இடையிலான போட்டி போன்று இருந்தது என்றும் சாடியுள்ளார்.
    ×