search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meetting"

    • வங்கியின் 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
    • 2021-22-ம் ஆண்டில் வங்கியின் லாபம் ரூ.3.06 கோடியாக உயா்ந்துள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 69-வது ஆண்டு உறுப்பினா்கள் பேரவைக் கூட்டம் ஊட்டியில் நடந்தது.

    கூட்டத்திற்கு தலைவா் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். கடன் பிரிவு மேலாளா் பிரவீன் வரவேற்றாா். கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் முத்து சிதம்பரம், வங்கியின் பொது மேலாளா் சங்கர நாராயணன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பேரட்டி ராஜி, பீமன், ஹேம்சந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    கூட்டத்தில், வங்கியின் 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

    தொடா்ந்து வங்கியின் தலைவா் வினோத் பேசியதாவது:-

    2021-22-ம் ஆண்டில் வங்கியின் லாபம் ரூ.3.06 கோடியாக உயா்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குறு, சிறு விவசாயிகளை நம்பியே இந்த வங்கி உள்ளது. வங்கியின் வைப்புத்தொகையை உயா்த்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

    மேலும், கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள்தான் அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன. நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கியில் ஊட்டியில் மட்டுமே ஒரு ஏ.டி.எம் மையம் இருந்தது. தற்போது மஞ்சூா், கோத்தகிரியில் ஏ.டி.எம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து, 2021-22 ஆம் ஆண்டுக்கான வங்கியின் நிகர லாபம் ரூ.1 கோடியே 74 லட்சத்து 84 ஆயிரத்து 813-யை வங்கியின் துணை விதிகளின்படி, லாப பிரிவினை செய்ய கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    • கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி மோகன் தலைமை தாங்கினார்.
    • கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

    அரவேனு

    நீலகிரி மாவட்ட மரவேலை மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) மகாசபை கூட்டம் நடைபெற்றது. கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி மோகன் தலைமை தாங்கினார். கலைமணி வரவேற்றார். மாநில செயலாளர் கோபி குமார் கலந்துகொண்டு பேசினார்.

    கூட்டத்தில் அரசின் நலவாரியத்தில் பதிவு செய்து உள்ள உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

    கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஏழை மக்களுக்கு மானிய விலையில் சிமெண்ட் வழங்க வேண்டும். வாரிய பதிவை எளிமையாக்க வேண்டும். பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.30 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல அனைத்து சலுகைகளும் உடலுழைப்பு மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • எடப்பள்ளி ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது எடப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு எடப்பள்ளி ஊராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை தலைவர் கோபால் ராஜ் உள்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    கூட்டத்தில் 9 வது வார்டு உறுப்பினர் சுசிலா பேசுகையில், அனைத்து நலத்திட்டங்களும் எடப்பள்ளி பகுதியில் செய்து வருகின்றனர். அளக்கரை பகுதியில் நலத்திட்டங்கள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த தலைவர் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    4 -வது வார்டு உறுப்பினர் பரத் பேசுகையில்,அளக்கரை ஹட்டி பகுதியில் குடிநீர், மின் இணைப்புகள் என 70 ஆயிரம் மதிப்பில் சொந்த செலவில் செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிதி இன்னும் வரவில்லை என்றார். அதற்கு பதில் அளித்த தலைவர் வட்டார வள அலுவலரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

    இளித்தொரை 5 ஆவது வார்டு உறுப்பினர் தேவராஜ் பேசுகையில் இளித்தொரை பகுதியில் உள்ள மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்றார்.

    அதனை தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இளித்தொரை மைதானம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். இளித்தொரை பகுதியில் புதிய மோட்டார் அறை அமைக்கப்படும். எடப்பள்ளி ஆரக்கம்பை, அளக்கரை காலணி உள்ளிட்ட இடங்களில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும். பெள்ளட்டி மட்டம் தரை மட்ட நீர் தேக்க தொட்டி பழுது பார்த்தல் உள்ள பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஜப்பான் வந்துள்ள அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே-வை இன்று சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்தார். #PompeomeetsAbe #AbemeetsPompeo
    டோக்கியோ:

    ஜப்பான், வடகொரியா, சீனா உள்ளிட்ட  தெற்காசிய நாடுகளில் அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    வடகொரியா-அமெரிக்கா இடையில் சமீபத்தில் சிங்கப்பூரில் செய்யப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பாக  வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை வலியுறுத்துவது அவரது பயணத்தின் அதிமுக்கிய நோக்கமாக உள்ளது.



    இந்நிலையில், இன்று டோக்கியோ நகரில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மைக் பாம்ப்பியோ சந்தித்து ஆலோசனை நடத்தினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத பகுதியாக மாற்றிட அமெரிக்க அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஷின்சோ அபே ஆதரவு தெரிவித்தார்.

    மேலும், வடகொரியா நாட்டில் கைது செய்து, சிறைக்காவலில் அடைக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டினரை விடுதலை செய்வது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னிடம் பேசுமாறு இன்றைய சந்திப்பின்போது மைக் பாம்ப்பியோ-வை ஷின்சோ அபே கேட்டுக் கொண்டார். #PompeomeetsAbe #AbemeetsPompeo
    கேல் ரத்னா விருது தராத அதிருப்தியில் பஜ்ரங் புனியா விளையாட்டு மந்திரியை இன்று சந்திக்க உள்ளதாகவும் தனக்கு சாதகமான முடிவு வரவில்லை எனில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார். #RajivGandhiKhelRatna #BajrangPunia
    விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கேபடன் விராட்கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியனான மீராபாய் சானு ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.



    இதற்கு காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அதிருப்தி தெரிவித்தார்.

    கேல்ரத்னா விருது பட்டியலில் அவரது பெயர் இருந்தது. ஆனால் அவர் விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    இது தொடர்பாக அவர் நேற்று பேட்டியளித்த போது, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோரை இன்று சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் பஜ்ரங் புனியாவை நேற்று மாலை மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் சந்தித்து பேசினார்.

    இது தொடர்பாக பஜ்ரங் புனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மந்திரியை இன்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால் நேற்று மாலையே அவரை சந்திக்க அழைப்பு வந்தது.



    அப்போது கேல் ரத்னா விருதுக்கு எனது பெயரை ஏன் பரிசீலிக்கவில்லை என்றேன். அதற்கு அவர் நான் விருதுக்கான புள்ளிகளை பெறவில்லை என்று கூறினார். அது தவறு.

    விராட்கோலி, மீராபாய் சானுவை விட நான் அதிக புள்ளிகள் பெற்று உள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    இவ்விவகாரத்தை கவனிப்பதாக மத்திய மந்திரி கூறி உள்ளார்.

    இன்று மாலை வரை அரசின் பதிலுக்காக காத்து இருப்பேன். அதில் எனக்கு சாதகமான பதில் வரவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்வேன் என்றார். #RajivGandhiKhelRatna #BajrangPunia
    ×